
தகிக்கின்ற பூமி
கொதிக்கின்ற பாதை
வெறிக்கின்ற கதிரவன்
எரிக்கின்ற பார்வை
முத்துமுத் தெனவே
முளைத்து முகிழ்த்திடும்
சொத்துக்கள் சேர்ந்தென்னை
சோர்ந்திட வைத்திடும்
ஆயாசம் மேலும் கூடும்
ஆகாயம் போலே நீளும்
நெஞ்சுக்குள் தீயை மூட்டி
நினைவுக்குள் கங்காய்க் காய்க்கும்
முட்களே பாதை போடும்
வலிகளே வாழ்க்கை ஆகும்
கண்ணீரே காயம் ஆற்றும்
குருதியே தாகம் தீர்க்கும்
உள்ளுக்குள் உறையும் நேசம்
உயிரெல்லாம் வாசம் வீசும்
வெந்தாலும் வேதனை இல்லை
குளிர்ந்தாலும் குதூகலம் இல்லை
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.southshoreyoganetwork.com/db4/00355/southshoreyoganetwork.com/_uimages/lotuspose.bmp
நல்லாயிருக்கு ;)
ReplyDeleteநன்றி கோபி :)
ReplyDelete//உள்ளுக்குள் உறையும் நேசம்
ReplyDeleteஉயிரெல்லாம் வாசம் வீசும்
வெந்தாலும் வேதனை இல்லை
குளிர்ந்தாலும் குதூகலம் இல்லை//
நல்ல வரிகள்.
நன்றி ராமலக்ஷ்மி.
ReplyDelete