Showing posts with label 100. Show all posts
Showing posts with label 100. Show all posts

Monday, January 26, 2009

100. என் தமிழ்!!

எல்லாரும் 100-க்கு வாழ்த்து சொல்ல ஆரம்பிச்சதும், ஏண்டா 100-ஐ நினைவு படுத்தினோம்னு ஆயிடுச்சு. "எமக்குத் தொழில் கவிதை"ன்னு பாரதி சொன்ன மாதிரி, எனக்குத் தெரிஞ்சதெல்லாம் கவிதை தான். அதனால இந்த பதிவுக்கும் ஒரு (குட்டிக்) கவிதைதான் :)

தமிழ் பெண்ணா என்னைப் பிறக்க வச்சது மட்டுமில்லாம, தமிழை வாசிக்கவும், நேசிக்கவும், சில சமயம் எழுதவும் வெச்ச இறைவனுக்கு என் முதல் நன்றிகள். எழுத்துப் பயணத்தில் (பெரீசா ஒண்ணும் சாதிக்கலைன்னாலும் அதுல கிடைக்கிற திருப்தியை மறுக்க முடியாது) கூடவே வந்து ஊக்குவிக்கும் எல்லாரையும் பற்றி சொல்லி அவங்களுக்கும் தனித் தனியா நன்றி நவிலணும்னு ஆசைதான். ஆனா அது ரொம்ப நீண்டுடுமோ, பெரீய்ய்ய சுய புராணமாயிடுமோங்கிற பயமும் இருக்கறதால, இப்போதைக்கு தள்ளி போட்டு வைக்கிறேன். ஆனா இதை வாசிக்கிறவங்களுக்கும், ஆரம்ப காலம் முதல் இன்று வரை என் எழுத்துக்கு பலவிதமா உரமிடறவங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிச்சுக்கறேன்.

எல்லாருக்கும் சொல்லிட்டு, முக்கியமான ஆளை மறந்துட்டா எப்படி? இதோ, அந்த முக்கியமானவருக்கு, என் இனிய தமிழன்னைக்கு, இந்தக் கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்....





என்தமிழ் என்கின்ற போதில்
என்உயரம்ஓர் அடியேனும் கூடும்
தீந்தமிழ்பேர் சொன்னால் நாவில்
தீஞ்சுவை தேனாறாய் ஓடும்

என்றும் பதினாறவள் இளமை
அவள் அழகைப்பாடுவதே இனிமை
அள்ளக் குறையாத ஊற்று
அவள்பெருமைக் கேதிங்கே மாற்று

காற்றாகி என்னுள்ளே படர்ந்தாள்
பெருங்கடலாகி இதயத்தில் விரிந்தாள்
உள்ளங்கவர் கள்வன்போலே - என்
உதிரத்தி லேகலந்து நிறைந்தாள்

உச்சிமுகர்கின்ற தாய்போல் - உடைந்த
உயிருக்குத் தாலாட்டும் அவளே
என்னை மறந்தாலும் மறப்பேன் - ஆயின்
என்தமிழை மறப்பேனோநானே!




--கவிநயா