Monday, February 16, 2015

கொன்றை மலர் சூடும் கொற்றவன்

மஹா சிவராத்திரி சிறப்புப் பதிவு...


கொன்றை மலர் சூடும் கொற்றவனே - எந்தன்
அன்னை மனம் வென்ற உற்றவனே
(கொன்றை)

விந்தை நடம் புரியும் மன்னவனே – எந்தன்
சிந்தை யெல்லாம் நிறைந்த தென்னவனே
(கொன்றை)

இருவிழி இமையென உமையிருக்க, அந்த
விழிகளிலே அருள் பெருக்கெடுக்க
பிறைமதி முடியினில் துலங்கி நிற்க, ஒரு
குறையில்லை என்(று) அபயம் தந்திருக்க…
(கொன்றை)


--கவிநயா