இன்றைக்கு வரலக்ஷ்மி நோன்பு. ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயாருடைய 108 திவ்ய நாமாவளியில கடைசி நாமம் "ஓம் புவனேஸ்வர்யை நமஹ!" அப்படிங்கிறது. அந்த புவன மாதாவை நினைச்சு எழுதின பாடலை இங்கே பதியறேன். படத்திலும் அவளே. (படத்தை க்ளிக்கி பார்க்க மறக்க வேண்டாம்!).
அது மட்டுமில்லாம எனக்கு தோணின மெட்டுல நானே பாடியும் இருக்கேன். யாருப்பா அது... தடதடன்னு ஓடறது?! அட, ஓடாதீங்கப்பா..! ஜகன்மாதாவே கேட்கிறாதானே :) ரொம்ப சிரமமா இருந்தா கண்ணை மூடிக்கிட்டு கேளுங்க! :))
அது மட்டுமில்லாம எனக்கு தோணின மெட்டுல நானே பாடியும் இருக்கேன். யாருப்பா அது... தடதடன்னு ஓடறது?! அட, ஓடாதீங்கப்பா..! ஜகன்மாதாவே கேட்கிறாதானே :) ரொம்ப சிரமமா இருந்தா கண்ணை மூடிக்கிட்டு கேளுங்க! :))

பொன்னை நிகர்த்த.wa... |
பொன்னை நிகர்த்த மேனி
கோடிச் சூரியராய் ஜொலிக்க
கண்ணை நிகர்த்தவளே
உன்னைக் காணவே ஓடிவந்தேன்
புன்னகை பார்த் திருந்தேன்
உந்தன் பூமுகம் பார்த்திருந்தேன்
என்னை மறந் திருந்தேன்
உன்னை ஏற்றி மகிழ்ந்திருந்தேன்
மலர்முகம் பார்த் திருந்தேன்
முழு மதிமுகம் பார்த் திருந்தேன்
கனவினில் ஆழ்ந் திருந்தேன்
உந்தன் நினைவினில் தோய்ந்திருந்தேன்
பண்கள் பல பாடி
தினம் போற்றித் துதிக்கின்றேன்
கண்கள் திறவாயோ
அம்மா கருணை செய்வாயோ
புவி எல்லாம் ஆளுகின்ற
எழில் புவனத்தின் ஈஸ்வரியே
என்னையும் ஆண்டு கொள்வாய்
அம்மா இன்னும் தாமதம் ஏன்?
--கவிநயா