Monday, January 13, 2014

ஆனந்தப் பொங்கல்!

அனைவருக்கும் தித்திக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!


மனசெல்லாம் சுத்தம் செய்து நல்லதாக்குவோம்
கள்ளங் கபடமில்லா வெள்ளை உள்ளமாக்குவோம்
இறைவன் வந்து வாழுகின்ற இல்லமாக்குவோம், நம்
இஷ்ட தெய்வம் வந்துறையும் கோயிலாக்குவோம்!

நல்ல எண்ணங்களால் மனசை உழுது வைக்கணும்
நற்குணத்தை நாத்து நட்டு பயிரு வளர்க்கணும்
ஆசை, குரோதம், தன்னலமாம் களைகள் பிடுங்கணும்
அன்பை வளர்த்து அனைவருக்கும் அள்ளிக் கொடுக்கணும்!

மாடு போல சோர்வில்லாம நாம உழைக்கணும்
மற்றவர்க்கு உதவிடவே வாழ்க்கை வாழணும்
உலகமெல்லாம் ஒரேவீடா நாம நினைக்கணும்
உள்ள மக்களெல்லாம் நம்ம சொந்தமாகணும்!

அகத்தினிலே படிந்த இருள் விலகி ஓடட்டும்
அகமெல்லாம் இறையருளால் நிறைந்து ஒளிரட்டும்
இதயத்திலோர் கதிரவனாய் அவன் விளங்கட்டும்
இன்பமெல்லாம் அவன் பதமே என்றுணரட்டும்!

இறையடிகள் பணிந்து விட்டால் ஓடும் துன்பமே
இறையவனை உணர்ந்து விட்டால் என்றும் இன்பமே
இறையவனின் நினைவாலே இதயம் பொங்குமே
இறை நாமம் சொல்லச் சொல்ல இன்பம் தங்குமே!


--கவிநயா

நன்றி: வல்லமை  பொங்கல் சிறப்பிதழ்


Tuesday, January 7, 2014

மறுபடியும் பிள்ளையார்


பிள்ளையார் வேஷம் போட்டு நிறைய படங்களில் பார்த்திருக்கோம். ஆனால் இது வரை நான் பார்த்ததிலேயே best பிள்ளையார், விஜய் தொலைக்காட்சியில், ‘சிவம்’ தொடர்ல வர்ற பிள்ளையார்தான்!

வழக்கமா செய்யற மாதிரி ஒரு யானை முக முகமூடியை மாட்டி விடாம, இந்தப் பிள்ளைக்கு மூக்கில் ஆரம்பிச்சு முகத்தோட முகமா தும்பிக்கை செய்திருக்காங்க. அதனால விநாயகர் முகம் ரொம்ப இயற்கையா, அழகா, அமைஞ்சிருக்கு. அதோட மட்டுமில்லாம, அந்தக் குட்டிப் பிள்ளைக்கு தொந்தியும் பிள்ளையார் போலவே perfect-ஆ இருக்கு! ஒரு காலை மடிச்சு ஒரு காலைத் தொங்க விட்டு உட்காரும்போது சாட்சாத் பிள்ளையாரே பிரத்தியட்சமா வந்துட்டாரோன்னு தோணும்!

பிள்ளையாரை முருகனுக்கு இளையவரா சித்தரிச்சிருக்காங்க. கள்ளமில்லாத வெள்ளை மனசோட, சத்தியவானா, அன்பானவரா, பரோபகாரியா இருக்கிற குட்டிப் பிள்ளையாரைப் பார்க்கப் பார்க்கப் பரவசம்தான். அவர் வரும் காட்சிகள் எனக்குப் பிடித்தமானவை. நெற்றியும் கண்களும் மட்டுமே வெளியில் தெரியற நிலையில், கண்களை மட்டுமே சுருக்கியும், விரிச்சும் பாவங்களை வெளிப்படுத்தறது இந்தப் பிள்ளையோட சிறப்பு. சிவன் மற்றும் நந்தியா வர்றவங்களோட நடிப்பும் ரொம்பவே அருமை.

பிள்ளையாரா வந்து அசத்தற இந்தக் குட்டிப் பிள்ளை யாருன்னு தேடிப் பார்த்தேன், இன்னும் பேரு கண்டு பிடிக்க முடியலை. உங்களுக்குத் தெரியுமா?

***

அதோடு கூட புது வருஷத்துக்கான, எனக்குப் பிடிச்ச, ஆங்கிலக் கவிதை ஒண்ணு:

Once again, wish you all a very Happy, Healthy, and a Wonderful New Year!

“Another fresh new year is here . . .
Another year to live!
To banish worry, doubt, and fear,
To love and laugh and give!


This bright new year is given me
To live each day with zest . . .
To daily grow and try to be
My highest and my best!


I have the opportunity
Once more to right some wrongs,
To pray for peace, to plant a tree,
And sing more joyful songs!”


William Arthur Ward




அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி.