சுப்பு தாத்தா பாடியதைக் கேட்டால், நீங்களும் உடன் ஆடுவீர்கள்! சலங்கை ஒலியுடன் அருமையாக அமைத்திருக்கிறார்! மிக்க நன்றி தாத்தா!
தாம் தரிகிட தோம் தரிகிட தீம் தரிகிட தத்தித் தோம்!
தோம் தரிகிட தீம் தரிகிட தொம்தொம்
தரிகிட தித்தித் தோம்!
ஆடும் பதம் தூக்கி நாடும் அடியவர்க்கு
தேடி அருள் புரியும் நடராஜா!
பாடி வந்துந்தன் பாதம் பணிந்தோர்க்கு
ஓடி வர மருளும் அருள்நேசா!
தாவித் தாவி உந்தன் பதங்கள் நடமாட
தேவி சிவகாமி உடனாட
கொன்றை மலரணிந்த செஞ்சடைகளாட
கொத்தும் அரவுகள் கூத்தாட
கையில் தீயாட காலிற் சிலம்பாட
காற்றும் வெளியும் சேர்ந்தாட
கண்ணில் கனலாட கங்கைப் புனலாட
மண்விண்ணும் தம்மை மறந்தாட
மெய்யில் நீறாட வையம் புகழ்ந்தாட
மெய்யா உன்னைப் பணிந்தோமே!
வெய்யும் துயரோட ஐயம் பறந்தோட
ஐயா உன்னடி அடைந்தோமே!
தாம் தரிகிட தோம் தரிகிட தீம்
தரிகிட தத்தித் தோம்!
தோம் தரிகிட தீம் தரிகிட தொம்தொம்
தரிகிட தித்தித் தோம்!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://dwarak82.blogspot.com/2012/09/blog-post_9739.html
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://dwarak82.blogspot.com/2012/09/blog-post_9739.html



