Wednesday, December 30, 2015

மீண்டும் உலவ வந்தாச்!

வணக்கம். 

நலந்தானே? எம்புட்டு நாளாச்சு பாத்து! உங்களை எல்லாம் நினைச்சுக்கிட்டேதான் இருந்தேன், ஆனா  வரவே முடியலை... முதல் முதலா ஒரு மாணவிக்கு பரத நாட்டிய அரங்கேற்றம் செய்தேன்.  நேரமெல்லாம் அதுவே இழுத்துடுச்சு. இனிமேலாவது மாதம் ஓரிரு பதிவாவது இடணும்கிற எண்ணம் இருக்கு... பார்க்கலாம்....

அன்பின் உருவாய் அவள்* உருவம்
அவளின் வடிவாய் இவ்வுலகம்
அன்பே சங்கிலியாய்ப் பிணைக்கும்
அமைதி அதனுள் தவழ்ந்திருக்கும்

கோபம் தாபம் இங்கில்லை
கவலை கண்ணீரும் இல்லை
இன்பம் துன்பம் என்றில்லை
ஆனந்தம்ஒன்றே இதன் எல்லை

புதுசா விரியும் பூ வாசம்
மனசில் முளைக்கட்டும் புது நேசம்
புதுசாப் பிறக்குது புதுவருஷம், பல
தினுசா சிறக்கட்டும் அனைவருக்கும்!

--கவிநயா

*அவள்: அவள் வேறு யாருமில்லை, அகிலத்துக்கெல்லாம் அன்னை பராசக்திதான்!

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு இனியதாகப் பிறக்கட்டும்! சிறக்கட்டும்!