
சித்திரைத் திங்களுடன் சேதி வந்தது;
முத்திரை பதிக்கும் காலம் கூட வந்தது!
புத்தம் புது வருஷம் பிறந்து விட்டது;
நித்தம் இன்பம் தர வந்து விட்டது!
சுற்றிச் சேர்ந்த இருள் விலகி விட்டது;
வெற்றி ஒளி எங்கும் படர்ந்து விட்டது!
குற்றம் குறை மறந்து ஒன்று கூடுவோம்;
சுற்றம் சூழ வந்து சிந்து பாடுவோம்!
சற்றும்சோ ராமல் நாளும் உழைத்து வாழுவோம்;
கற்ற பாடங் களால் வாழ்வைப் பேணுவோம்!
சித்தம் எல்லாம் கனிந்த அன்பு பூணுவோம்;
யுத்தம் என்பதில்லா வையம் காணுவோம்!!
--கவிநயா
பி.கு. கொஞ்சம் தாமதமாயிருச்சு. பெரிய மனசு பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க :)