Sunday, June 26, 2011

வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 7

முந்தைய பகுதிகள்:
முதல் பகுதி; இரண்டாம் பகுதி; மூன்றாம் பகுதி;
நான்காம் பகுதி; ஐந்தாம் பகுதி; ஆறாம் பகுதி

எல்லாருமே கஷ்டப்பட்டுதான் வந்து சேர்ந்திருந்தாங்க போல. ஏற்கனவே ரொம்ப நேரம் ஆயிட்டதால சாப்பிட்டுட்டே குளிக்க போனோம். இன்றைக்கு தூங்க அவ்வளவா நேரம் கிடைக்கலை. இந்த வீட்டில் இடம் இல்லாததால எதிர் வீட்டில் போய் படுக்கச் சொன்னாங்க. அங்கேயும் ஏற்கனவே நல்ல கூட்டம். ஒரு குட்டி இடத்தில் ஒரு மாதிரி படுத்திருந்தோம். அதனாலயும் சரியா தூங்க முடியல. ஒரு மணி நேரம் ஒழுங்கா தூங்கி இருந்தா அதிகம். சீக்கிரமே எழுந்து குளிச்சு தயாராகிட்டோம். கடைசி நாள்னால எல்லாரும் ஒரு வித உற்சாகம், சந்தோஷம், எதிர்பார்ப்போட இருந்த மாதிரி இருந்தது. சில பேருடைய உறவினர்கள் வந்திருந்தாங்க.

நடக்கறவங்க எல்லாருமே 6 நாள், 5 நாள் நடக்கறவங்க இல்லை. ரெண்டு நாள், மூணு நாள் நடக்கறவங்களும் உண்டு. அதிலும் மூவலூரிலிருந்து கடைசி நாள் மட்டும் நடக்கறவங்க அதிகம். இன்றைக்கு என் நாத்தனார் மகளும் என் அப்பாவும் எங்களோட நடக்கறதா இருந்தாங்க. நாத்தனாரோட வீட்டுக்காரர் வேற ஒரு கோஷ்டியோட (6 நாள்) நடந்தாங்க.

சாயந்திரம் செந்தில், பத்மநாபன், ஷண்முகம், இவங்கெல்லாம் சேர்ந்து பல பஜனைப் பாடல்கள் பாடி ஒரு குட்டி நிகழ்ச்சியே நடத்திட்டாங்க! என் உறவினர் முத்துக்குமார் என்பவருடைய சொந்தக்காரப் பையன், ஒரு குட்டிப் பையன், ரொம்ப ஜோரா ஆடுவான். அவனும் நடந்தான். இன்றைக்கு இவங்க பாட, அவன் ஆட, ஒரே கொண்டாட்டம்தான். வை.கோவில் பயணத்துக்காகவே ஷண்முகம் என்னை சிவன் மேல ஒரு பாடல் எழுதச் சொல்லியிருந்தார், ரொம்ப நாள் முன்னதாகவே. அந்தப் பாடலையும் இப்ப பாடினார். சந்தோஷமா இருந்தது. என்னையும் (!) பாடச் சொல்லி அன்போட வற்புறுத்தினாங்க. (பாவம், என்னைப் பற்றி தெரியலை). நானும் என்னுடைய ஒரு அம்மா பாட்டு (சிந்தையில் நீ ஆட), பாடினேன். அதுக்கப்புறம் அவங்களோட இன்னொரு நண்பர் ஒரு குட்டி மாஜிக் ஷோ நடத்தினார். குழந்தைகளெல்லாம் நல்லா enjoy பண்ணினோம் :)

இப்படியே 6 மணி ஆயிடுச்சு. பஜனை கோஷ்டி கிளம்பிட்டாங்க. நாங்க என் நாத்தனாருக்காக காத்திருந்தோம். அவ வந்ததும், இட்லி சாப்பிட்டுட்டு தயாரானோம். என் அம்மாவும், நாத்தனாரும் வை.கோவிலில் சதாபிஷேகம் என்கிற ஹோட்டலில் தங்கியிருக்கறதா ஏற்பாடு. அதனால மகளை விட்டுட்டு, அவ அப்படியே கிளம்பிட்டா.

நாங்க கிளம்பும்போது மணி 7 இருக்கும். இன்றைக்கு 9 மணிக்கு கஞ்சி கிடைக்காதாம்! மற்றவங்கல்லாம் எங்களுக்கு முன்னாடி கிளம்பிட்டாங்க. துபாய் குமார்ங்கிறவர் மட்டும் இருந்தார். அவர் துபாயிலிருந்து நடக்கறதுக்காகவே வரதால அந்த பேராம். எங்க கூடத்தான் இவரும் தங்கியிருந்தார். ரொம்ப க்ஷ்டப்பட்டுத்தான் நடப்பாராம். ரெண்டு கால்லயும் பெரிய்ய்ய பாண்டேஜ் போட்டிருந்தார். போற வழியெல்லாம் இருட்டா இருக்கும், தனியா நடக்காதீங்க, வாங்க சேர்ந்து போயிடலாம்னு சொல்லிக்கிட்டே வந்தார். என்ன சொன்னாலும், என்னால வேகமா நடக்க முடியல. அவர் என்னை விட நல்லா வேகமா நடந்தார்! என் அப்பாவும் எங்களோட வந்தாங்க. அவங்களால எங்கள மாதிரி உட்கார்ந்து உட்கார்ந்து நடக்க முடியல. அவங்களுக்கு கீழே உட்கார்றது சிரமம். அதனால வேற, வாங்க போயிடலாம், போயிடலாம்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. என் தங்கையும் வேற சேர்ந்துக்கிட்டா.

பொறுத்துப் பொறுத்து, கடைசியில எனக்கு கோவம் வந்திருச்சு. நீங்கள்லாம் முன்னாடி போறதுன்னா போங்க, நான் மெதுவா வந்துக்கறேன்னு சொல்லிட்டேன்!

தோழி சென்னையில் டீச்சரா இருக்கா. நாத்தனார் மகள் 10-வது எழுதி இருந்தா. ரெண்டு பேரும் என்ன பேசினாங்களோ, நண்பிகள் ஆயிட்டாங்க. அவங்க பாட்டுக்கு வேகமா நடந்தாங்க. இன்றைக்கு அவங்களும் செருப்பு போடல.

வழியில் ஒரு பெரிய பெட்ரோல் பங்கில் எப்பவும் உட்காருவோம். ஆனா இந்த வருஷம் அங்க கால் வக்க இடமில்லாம மக்கள் படுத்திருந்தாங்க.

நிறைய இடத்தில் கூடாரம் அடிச்சு நாற்காலி போட்டு, காபி, டீ, வித்துக்கிட்டிருந்தாங்க. இந்த மாதிரி இடங்களில் உட்கார்றது அப்பாவுக்கும் கொஞ்சம் பரவாயில்லாம இருந்தது. ஒரு மாதிரியா இப்படி நடந்து நடந்து வைத்தீஸ்வரன் கோவில் எல்லைக்கு வந்தே சேர்ந்துட்டோம்! அப்ப மணி காலை மூணரை! முந்தின வருஷங்கள்ல நாங்க வந்து சேர அஞ்சரை ஆறு ஆயிரும். இந்த முறை ரொம்பவே பரவாயில்லை.

இனி விடிஞ்ச பிறகு பெரிய பிரகாரம் போனா போதும். பெரிய பிரகாரம் போயிட்டு வந்த பிறகு வேண்டுதல் முடிஞ்சிரும்! கோவிலுக்குள்ள போறது அப்புறம் போயிக்கலாம்.

சதாபிஷேகம் ஹோட்டல் காம்பவுண்டுக்குள்ள புல் தரையில் முன்னெல்லாம் எல்லாரையும் படுக்க விடுவாங்க, ஆனா இந்த முறை எக்கச்சக்க கூட்டம்கிறதால ஹோட்டலில் அறை எடுத்துருந்தவங்களை மட்டும் உள்ள விட்டாங்க. அம்மாவும் நாத்தனாரும் வந்து பார்த்துட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு போனாங்க. நாங்க அறைக்குள்ள போகக் கூடாது. அதனால எல்லாரும் வெளிலயே படுத்துக்கிட்டோம். அஞ்சரை மணி போல எழுந்து காபி குடிச்சிட்டு பெரிய பிரகாரம் வர ஆரம்பிச்சோம்.

பெரிய பிரகாரம் மட்டும் ரெண்டு கிலோ மீட்டர் இருக்கும். கூட்டம்னா கூட்டம், அப்படி ஒரு கூட்டம். நாம நடக்கவே வேணாம், சும்மா நின்னுக்கிட்டு இருந்தாலே அப்படியே தள்ளிக்கிட்டே போயிடுவாங்க. நிறைய போலீசெல்லாம் நின்னு கூட்டத்தை ஒழுங்கு படுத்தினாங்க…. அதாவது ஒழுங்குபடுத்த முயற்சி செய்தாங்க. அந்த நாலு ரோடிலும் போக்குவரத்தை நிறுத்தி வச்சுட்டாங்க.

பெரிய பிரகாரமும் முடிஞ்சிருச்சு! விழுந்து கும்பிட்டு வேண்டுதலும் முடிச்சாச்சு!

(பயணம் தொடரும்)

அன்புடன்
கவிநயா

5 comments:

  1. //விழுந்து கும்பிட்டு வேண்டுதலும் முடிச்சாச்சு!//

    முருகா! MKS Darling! Enjoy!:)

    ReplyDelete
  2. பெரிய பிரகாரமும் முடிஞ்சிருச்சு! விழுந்து கும்பிட்டு வேண்டுதலும் முடிச்சாச்சு!//

    மிக நிறைவான பகிர்வுங்க. பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வேண்டுதல் பல சிரமங்களைத் தாங்கி நல்லபடியாக நிறைவேறியது மனதுக்கு நிறைவு.

    ReplyDelete
  4. வந்தாச்சி...வந்தாச்சி..கிட்ட வந்தாச்சி ;))

    ReplyDelete
  5. வாங்க, கண்ணா, இராஜராஜேஸ்வரி, ராமலக்ஷ்மி, மற்றும் கோபி!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)