முந்தைய பகுதிகள்:
முதல் பகுதி; இரண்டாம் பகுதி; மூன்றாம் பகுதி; நான்காம் பகுதி.
போனவுடனே கையோட குளிச்சிட்டே சாப்பிட்டுடலாம்னு, காபி குடிச்சிட்டு குளிச்சிட்டு வந்தோம். அங்கேயும் பக்கத்திலேயே பம்பு செட்டு இருந்தது. ரொம்ப நல்லாருக்கு, போய் குளிச்சிட்டு வாங்கன்னு எல்லாரும் சொன்னாங்க. ஆனா எங்களுக்கு தெம்பில்லை. அது ரொம்ப உயரமா வேற இருக்குமாம், ஏறுறதும், இறங்கறதும் கஷ்டம்னாங்க. அதனால வீட்லயே குளிச்சிட்டோம். நாங்கதான் கடைசியா வந்தோம்னு நினைக்கிறேன்.
அதுவும் நல்ல பெரிய வீடா இருந்தது. சாப்பிட்டு போய் படுத்தாச்சு, வழக்கம் போல. அப்பப்ப கரண்ட் வேற போயிடும். ஆனா நமக்கு இருக்கிற அசதில அதெல்லாம் ஒண்ணுமே தெரியாது.
வழக்கம் போல ரெண்டு மணிக்கு மதியச் சாப்பாடு, ஒரு நாலரைக்கெல்லாம் மறுபடி கிளம்பிட்டோம். இன்னிக்கு திருவலஞ்சுழி (சுவாமி மலை) வரைக்கும் நடக்கணும். நேற்றை விட குறைச்சு தூரம்தான் இன்னிக்கு. இன்றைக்கு நானும் பாதத்தில் கொப்புளம் வர மாதிரி இருந்த இடங்களில் ப்ளாத்ரி போட்டுக்கிட்டேன். ஏற்கனவே வந்த கொப்புளம் இடது கால் பெரு விரலுக்கும் அடுத்த விரலுக்கும் நடுவில் பெரிசா முழிச்சிக்கிட்டு நின்னது.
கிளம்பும்போதே சண்முகம் குழுவோட கிளம்பினோம். அவங்க குழந்தையை அவரும் அவர் நண்பர்களும் மாத்தி மாத்தி தூக்கிட்டு வந்தாங்க. அவரோட மனைவி, குழந்தைக்கு வேண்டிய பொருள்களோட காரில் கூடவே வந்துக்கிட்டிருந்தாங்க. அவரோட தங்கை நடந்து வந்தாங்க.
பாபநாசம் ரோடு பூரா ஒரு 20 கி.மீட்டருக்கு சுத்தமா விளக்கே இருக்காது. தனியா நடக்காதீங்க, யாரோடயாவது சேர்ந்து போயிடுங்கன்னு சொல்வாங்க. மற்ற இடங்களைப் போல நம்ம நினைக்கிறப்பல்லாம் உட்கார முடியாது. நடந்துக்கிட்டே இருக்கணும். அதுதான் ரொம்ப சிரமமா இருக்கும்.
இந்த இருட்டான பகுதியில் ஷண்முகம், பத்மநாபன் பாட்டு குழுவினரோட போயிட்டோம். தோழியாலதான் வேகமா நடக்க முடியலை. பல்லைக் கடிச்சுக்கிட்டு வா, இந்த இருட்டில் மட்டும் இவங்க கூடவே சேர்ந்து போயிடுவோம், பிறகு பின் தங்கிட்டா பரவாயில்லைன்னு சொல்லிச் சொல்லி அவளை இழுத்துக்கிட்டு போயிட்டோம். நடக்க முடியலைன்னா சில சமயம் நம்ம கம்போட ஒரு முனையை ஒருத்தர் பிடிச்சுக்குவாங்க, இன்னொரு முனையை நாம பிடிச்சுக்கிட்டோம்னா, கிட்டத்தட்ட இழுத்துக்கிட்டே போயிடுவாங்க. அந்த மாதிரி கொஞ்ச தூரம் அவளைக் கூட்டிப் போனோம்.
விளக்கு வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடியே கொஞ்சம் பின் தங்க ஆரம்பிச்சிட்டோம்னு நினைக்கிறேன்… பாபநாசம் தாண்டின பிறகா முன்னாடியான்னு நினைவில்லை, மட்டனேந்தல்னு ஒரு இடத்தில் ஒரு மில் இருக்கு. அதை யாத்திரீகர்களுக்கு திறந்து விட்டிருப்பாங்க. அங்கே சாப்பாடு மட்டுமில்லாம, காலுக்கு மசாஜ் செய்து விடுவாங்க. புதுக்கோட்டையிலிருந்து ஒரு பாங்கில் வேலை பார்க்கிறவங்க இங்க வந்து இந்த மாதிரி இலவச சேவை செய்யறாங்க. போன தரம் நாங்களும் செய்துக்கிட்டோம். செய்யும்போது சுகமா இருக்கும், ஆனா உடனே எழுந்து நடக்கறதால இன்னும் கஷ்டமா இருக்கும். அதனால இந்த முறை செய்துக்கலை. ஏற்கனவே கூட்டமா இருந்தாலும், ஒரு மாதிரி இடம் கண்டு பிடிச்சு, ஒரு ஹால் மாதிரி இருந்த இடத்தில் போய் படுத்துட்டோம்.
கிளம்பலாம்னு நினைக்கிறப்ப நல்ல மழை வந்துடுச்சு. அதனால கூடுதலா அரை மணிநேரம் ஓய்வு. ராத்திரி 12 மணி இருக்கும். எல்லாரும் தூங்கிட்டிருந்தாங்க. அந்த வீட்டுக்காரம்மா, நாங்க கிளம்பறதைப் பார்த்து, டீ தரவாம்மான்னு கேட்டு, சுடச்சுட டீ குடுத்தாங்க. அதை குடிச்சிட்டு தெம்பா கிளம்பும்போது, மழை இன்னும் முழுசா விடாம தூறிக்கிட்டிருந்தது. மணி பன்னிரெண்டரை. பரவாயில்லைன்னு நடக்க ஆரம்பிச்சிட்டோம்.
அந்த நேரம் ரோடுல ஈ காக்கா இல்லை! நாங்க மூணு பேரு மட்டும்தான்! சில தெருநாய்கள் சில சமயம் எங்க பின்னாடியே வரும். ஒரே நிசப்தமா இருந்த்து. ஒரு இடத்தில் நடக்கும்போது மல்லிக்கைப் பூ வாசம் வர மாதிரி இருந்த்து. இயல்பாதான் சொன்னேன், ‘மல்லிகைப் பூ வாசம் அடிக்கிற மாதிரி இருக்கில்ல?’ன்னு. உடனே என் தங்கைக்கு பயம் வந்துருச்சு போல, ‘ஹரஹர… சிவசிவ’ சொல்ல ஆரம்பிச்சிட்டா! போன முறையும் இதே ரோடுல நானும் என் தங்கையும் தனியாதான் நடந்தோம். (அப்ப கொலுசு சத்தம் கேட்ட்து :). நான் சொன்னேன், எப்பவுமே தையல்நாயகிதாண்டி நமக்கு துணைக்கு வரா, அப்படின்னு!
பாபநாசம் வந்தப்ப காலை அஞ்சு ஆயிருச்சுன்னு நினைக்கிறேன். அதுக்கப்புறம் திருவலஞ்சுழி வந்தப்ப ஏழு இருக்கும். நாங்க தங்கறதுக்கு திருவலஞ்சுழியும் தாண்டி தாராசுரம்கிற ஊருக்கு போகணுமாம்.
ஒரு வீட்டில் எங்க வண்டியை கட்டி போட்டிருந்தாங்க. (ஒவ்வொரு வண்டிக்கும் நம்பர் குடுத்திருப்பாங்க, ஒரு விலாசமும் இருக்கும்). அதைப் பார்த்து அடையாளம் கண்டுக்கிட்டு, வீடு வந்திருச்சுன்னு சந்தோஷமா உள்ள போனோம். அங்க அண்ணன் இருந்தாங்க. அவங்க, ‘இந்த வீடு இல்லம்மா. இங்க குளிக்க வசதி இல்லாத்தால உங்களுக்கு வேற வீடு பிடிச்சிருக்கோம். இங்க சமையல் மட்டும்தான். நீங்க அந்த வீட்டுக்கு போகணும், இன்னும் அரை மணி நேரம் நடந்தா வந்துரும்னாங்க!
இதுக்குள்ள ரொம்பவே அசந்து போயிட்டோம். இன்னும் நடக்கணும்னு அவங்க சொன்னதும் எனக்கு அழுகையே வந்துருச்சு. என் முகம் போற போக்கை பார்த்தும் போயிரலாம்மா, கிட்டத்துலதான், அப்படின்னாங்க. அங்கேயே ஒரு காபி குடிச்சிட்டு, மறுபடியும் நடக்கறோம், நடக்கறோம், தாராசுரம் வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு! எட்டரை மணி போல வந்து சேர்ந்தோம்.
(பயணம் தொடரும்)
அன்புடன்
கவிநயா
பி.கு.: அடுத்த வாரக் கடைசியில் மறுபடியும் விடுமுறைல போகப் போறேன்னு இப்பதான் திடீர்னு realize பண்ணினேன்! அதனால அதுக்குள்ள பயணத்தை முடிக்கிறதுக்கான முயற்சியில் இறங்கியிருக்கேன். அது மட்டுமில்லாம, முடிக்காம போனா கோபியும் கண்ணனும் ஆட்டோ அனுப்பிருவாங்களோன்னு பயம்! ஆனா நீங்க அவசரமா படிக்கணும்னு அவசியம் இல்லை :) நிதானமாவே படிங்க!
உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Tuesday, June 21, 2011
Sunday, June 19, 2011
வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 4
முதல் பகுதி இங்கே; இரண்டாம் பகுதி இங்கே; மூன்றாம் பகுதி இங்கே.
அம்மாவை மடியில் தாங்கிக்கிட்டு பலமுறை எழுப்பியும் எழுந்திருக்கலை. தலையில் சின்னதா வீக்கம் இருந்தது. இதுக்குள்ள கூட்டம் கூடிடுச்சு. தண்ணீர் வாங்கி தெளிச்சோம், விசிறி விட்டோம். ஒண்ணும் பலனில்லை.
எப்பவும் கையில் விபூதி வச்சிருப்போம். கை நிறைய விபூதியை அள்ளி தையல்நாயகி, நீயே துணைன்னு நினைச்சுக்கிட்டே பூசி விட்டேன். ரொம்ப நேரம் கழிச்சு “என்ன ஆச்சு?” ன்னு கேட்டுக்கிட்டு அம்மா கண்ணு முழிச்சாங்க. கீழே விழுந்த நினைவே இல்லை. தண்ணி குடிக்க வச்சோம். ஏற்கனவே சர்க்கரை இருக்கதால மாத்திரை சாப்பிடாததாலதான் மயக்கம் வந்திருக்குமோன்னு என் தங்கை மாத்திரை சாப்பிட்டீங்களான்னு கேட்டா. அம்மாவுக்கு அதுவும் சொல்லத் தெரியலை. இப்படி தடுமாற்றத்தோடயே பேசவும் பயமாஆயிடுச்சு. உடனடியா மருத்துவமனைக்கு கூட்டிப் போய் பாத்துடணும்னு நினைச்சோம்.
அங்கதான் பிரச்சனை. நடக்கறதை விட்டுட்டு அம்மாவைக் கூட்டிக்கிட்டு அப்பாவோட மருத்துவமனை போறதா, என்ன பண்றது? அப்பதான் எங்க உறவினர்கள் ரெண்டு பேர் அப்பாவோட கூட போறதுக்கு முன் வந்தாங்க. பக்கத்தில்தான் தஞ்சாவூர். அங்கே 24-மணி நேரம் ஒரு மருத்துவமனை இருக்கும், அங்கே கூட்டிப் போறோம்; விழுந்ததால ஏற்பட்ட மயக்கமாதான் இருக்கும், நீங்க சாமியை வேண்டிக்கிட்டு தைரியமா நடங்க, ஒண்ணும் ஆகாது, நாங்க பாத்துக்கறோம்னாங்க.
அவங்களுக்கு ரொம்ப நன்றி சொல்லி அப்பா அம்மாவோட அவங்களை அனுப்பி வச்சுட்டு, மறுபடியும் நடக்க ஆரம்பிச்சோம். தஞ்சாவூர் ஊரைக் கடந்து போறதுக்கு ரொம்ப நேரம் ஆகும். அம்மாவைப் பற்றியும், நாங்களும் அந்த நாற்காலியை சரியா கவனிக்காம விட்டுட்டது பற்றியும் வருத்தப்பட்டு பேசிக்கிட்டே நடந்தோம். இப்ப செருப்பு போட்டுக்கலை நானு.
போன முறையை விட ஊர் நிறைய மாறி இருந்தது. புதுசா பாலம்லாம் இருந்த்து. ஆள் நடமாட்டம் இருக்கலைன்னா சில சமயம் நாம சரியான வழியிலதான் போறமான்னு சந்தேகம் வந்துரும்! அப்பவும் அப்படிதான் வந்திடுச்சு. ஒரு இடத்தில் கொஞ்சம் உட்கார்ந்து வேற யாரும் வர்றாங்களான்னு பாத்து, வழியை நிச்சயம் பண்ணிக்கிட்டு நடந்தோம்.
இதுக்குள்ள எனக்கு இடது காலில் கொப்புளம் வந்திருச்சு. நினைச்சாலும் செருப்பு போட முடியாது, இனி. ஆனா அது எனக்கு ரொம்ப நிம்மதியா இருந்தது!
நடுநடுவில் அப்பாவுடன் போன் பேசிக்கிட்டு போனோம். ஸ்கான் எடுத்து பார்த்த்தில் அம்மாவுக்கு எதுவும் இல்லைன்னு சொல்லிட்டாங்களாம். ரெண்டு நாள் ஓய்வெடுக்க சொன்னார் டாக்டர்னு சொன்னாங்க. அப்புறம்தான் நிம்மதியாச்சு. தையல்நாயகிக்கு மானசீகமா ஒரு பெரிய்ய்ய்ய நன்றி சொன்னேன்.
தஞ்சாவூரில் ஒரு பெரிய திடல் இருக்கும். அங்கே குடிக்க ஏதாச்சும் குடுப்பாங்க. மக்கள் படுப்பாங்க. நாங்க அங்கே போனப்ப யாருமே இல்ல. அங்கங்க சிலர் மட்டும் படுத்திருந்தாங்க. அங்கே உட்கார்ந்திருந்த போது, அப்பா காரை பாத்துட்டோம். அப்பதான் தஞ்சாவூரிலேயே இருக்கிற உறவினர் வீட்டுக்கு போய்கிட்டிருந்தாங்க. அப்ப ஒரு ஒரு மணி இருக்கும்னு நினைக்கிறேன். அப்புறம் ஓ…டி போய் அவங்களை நிறுத்தி பேசினோம். அம்மா இப்ப தெளிவா பேசினாங்க. இனி எங்க பின்னாடியே வர வேணாம், இனி கோவில்ல பார்ப்போம், ஓய்வெடுங்கன்னு கண்டிப்பா சொல்லி அனுப்பி வச்சோம்.
கொஞ்ச நேரத்துல நல்ல மழை பிடிச்சிக்கிச்சு. அங்கேயே ஒரு பேருந்து நிறுத்தத்தில் தங்க வேண்டியதாயிடுச்சு. அங்கே இன்னும் நிறைய பேரும் மழைக்கு ஒதுங்கி இருந்தாங்க. அரை மணி நேரத்தில் மழை விட்டதும் கிளம்பினோம்.
தோழிக்கு ஷூ போட்டு நடந்ததில் ஒரு பக்கமா உரசி, அவளுக்கு பாதத்தில் வலிச்சுக்கிட்டே இருந்தது. இந்த பயணத்தின் போது, ராத்திரியெல்லாம் மருத்துவ முகாம்கள் போட்டிருப்பாங்க. அந்த மாதிரி ஒரு இடத்தில் போய், அவளுக்கு மருந்து போட்டுக்கிட்டு, கையிலயும் மருந்து வாங்கிக்கிட்டோம். இதெல்லாமும் இலவச சேவையாதான் செய்யறாங்க.
நடக்கும் போது அடுத்த ஊருக்கு எத்தனை கிலோமீட்டர்னு யாரையும் கேட்டுறவே கூடாது! ஒரே மாதிரி ரெண்டு பதில் கிடைக்கவே கிடைக்காது. ஒருத்தர் 12-ம்பார், ஒருத்தர் 6-ம்பார்! மைல் கல்லே கூட அப்படித்தான் போட்டுருக்கும். ஒரு இடத்தில் 6-ன்னு போட்டிருந்தா, இன்னும் ஒரு மணி நேரம் நடந்துட்டு பார்த்தா மறுபடியும் 6! அதே ஊருக்கு!
சில சமயம் இவ்வளவு தூரமான்னு மலைப்பா இருக்கும். எவ்வளவு தூரமா இருந்தாலும் நடந்துதானே ஆகணும், வா, அப்படின்னு சொல்லிக்கிட்டே நடப்போம்.
‘ஹர ஹர… சிவசிவ
ஓம்சக்தி… பராசக்தி
வைத்தியநாதன்… வழித்துணை வருவான்
தையல்நாயகி… தைரியம் தருவாள்
முத்துக்குமரன்…முன்னே வருவான்’
இதுதான் அடிப்படையான கோஷம். இதெல்லாம் வை.கோவிலில் இருக்கிற சிவன், அம்பாள், முருகன், பெயர்கள். இதோட அவங்கவங்க கற்பனை வளத்துக்கும் அனுபவத்துக்கும் தகுந்தாற்போல நிறைய சேர்த்துக்குவாங்க. தெரிஞ்ச பாட்டெல்லாம் பாடியாச்சுன்னா, இதைச் சொல்லிக்கிட்டே நடப்போம். அல்லது ரொம்ப தெம்பே இல்லாத மாதிரி இருந்தாலும், சொல்லுவோம்.
ரோடெல்லாம் இந்த முறை பரவாயில்லைன்னாலும், நிறைய இடங்களில் பார்க்கிறதுக்கு நல்லாருக்க மாதிரி இருந்தாலும், காலை வச்சா அம்புட்டுதான்! அப்படி ஒரு குத்தல். அந்த மாதிரி இடங்களில், ‘ஓம் சக்தி.. பராசக்தி’ன்னு சொல்லிக்கிட்டே பல்லைக் கடிச்சுக்கிட்டு முழு பாத்த்தையும் பதிச்சு நடப்பேன். அப்படி ஒரு இடத்தில், ‘பாருடி ரோடு பூரா ரோஜாப்பூவா விரிச்சிருக்கு’, அப்படின்னேன்… பக்கத்தில் நடந்தவங்கள்லாம் சிரிச்சாங்க!
தஞ்சாவூரில் கவிதா மன்றம்னு ஒரு இடம் இருக்கு. அங்கே காலைல இட்லி, பொங்கல் சுடச் சுட. அதாவது 3 மணி, 4 மணி காலைல! மருத்துவ முகாமும் அங்கேயே போட்டிருப்பாங்க. அதனால ஒரே கூட்டம். நாங்க அங்கே போன போது மூணரை இருக்கும்னு நினைக்கிறேன். அங்க போய் சாப்பிட்டுட்டு, ஒரு அரை மணி நேரத்துக்கு படுத்து நல்லா தூங்கிட்டோம். மண்டபமா இருக்கறதால கட்டிடத்துக்குள்ள படுக்கலாம்.
போன முறை நடந்த போது பூண்டிக்கு போய் சேர முடியலை. அதுக்கு 3,4 கி.மீ முன்னாடி மயில் பண்ணைன்னு ஒரு குட்டி இடம் (ஊர்?) இருக்கு. அங்க பம்பு செட்டு இருக்கும். குளிக்க விடுவாங்க. சாப்பாடும் போடுவாங்க. நாங்க போன முறை அங்கே வந்து சேரவே 9 மணி ஆயிடுச்சு. வெயிலில் மேலே நடக்க முடியாதுன்னு அங்கேயே தங்கிட்டோம். அப்பா கார் கொண்டு வந்தாதால, அவங்க வண்டிக்கு போய் துணிமணி எடுத்துட்டு வர சொன்னாங்க.
இந்த முறை மயில் பண்ணை வரும்போது மணி எட்டு இருக்கும்னு நினைக்கிறேன். சாப்பாட்டுக்கு மகா பெரீய்ய்ய்ய வரிசை. அதில் நின்னு சாப்பாடு வாங்கினா நேரம் வேற ஆயிடும். அதனால அசதி தீர பம்பு செட்டு தண்ணியிலாச்சும் ரெண்டு நிமிஷமாவது நின்னுட்டு போலாம்னு நினைச்சோம். மாற்றுத்துணியெல்லாம் இல்லை. சேலையோட அப்படியேதான் குளியல். நடக்கும்போது சீக்கிரம் காஞ்சுடும்னுதான்! அங்கேயும் கூட்டம். ரெண்டு நிமிஷத்துக்கு மேல நிக்க முடியாது. தோழி குளிக்கலைன்னுட்டா. தங்கையும் நானும்தான் (பம்பு செட்டு குளியல்) ருசி கண்ட பூனைகள்!
குளிச்சிட்டு இன்னும் எத்தனை கிலோமீட்டர் தங்கற ஊருக்கு (கோவிலூர்), அப்படின்னு விசாரிச்சப்பதான் இந்த ஊருதான் அந்த ஊருன்னாங்க! அதாவது நாங்க தங்கற இடம் பூண்டிக்கு முன்னாடியே. அதனால அந்த தூரத்தை சேர்த்து நாளைக்கு நடக்கணும்! நாங்க இன்னும் ரெண்டு மணி நேரமாச்சும் நடக்க வேண்டி இருக்கும்னு நினைச்சுக்கிட்டிருந்ததால, இது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியா இருந்த்து! அப்புறம் அந்த வீட்டை கண்டுபிடிச்சு போய் நடக்க இன்னும் முக்கால் மணி நேரம் ஆனது.
எங்க ஈரத்தைப் பார்த்துட்டு, ‘என்னம்மா குளிச்சிட்டு வந்தீங்களா’ன்னு கேட்டாங்க அண்ணன். ‘ஆமா அண்ணே, மயில் பண்ணைல இருந்து ரொம்ப தூரம் நடக்கணுமாக்கும்னு நினைச்சு குளிச்சோம்’னு சொன்னோம்.
(பயணம் தொடரும்)
அன்புடன்
கவிநயா
பி.கு.: என் தங்கைகிட்ட இன்னிக்கு பேசினப்ப, 'என்னடி இன்னும் பூண்டியே போய் சேரலையா? இந்த வேகத்தில் போனா எப்ப கோவிலுக்கு போய் சேர்றது?!' ன்னு கேட்டா :)
அம்மாவை மடியில் தாங்கிக்கிட்டு பலமுறை எழுப்பியும் எழுந்திருக்கலை. தலையில் சின்னதா வீக்கம் இருந்தது. இதுக்குள்ள கூட்டம் கூடிடுச்சு. தண்ணீர் வாங்கி தெளிச்சோம், விசிறி விட்டோம். ஒண்ணும் பலனில்லை.
எப்பவும் கையில் விபூதி வச்சிருப்போம். கை நிறைய விபூதியை அள்ளி தையல்நாயகி, நீயே துணைன்னு நினைச்சுக்கிட்டே பூசி விட்டேன். ரொம்ப நேரம் கழிச்சு “என்ன ஆச்சு?” ன்னு கேட்டுக்கிட்டு அம்மா கண்ணு முழிச்சாங்க. கீழே விழுந்த நினைவே இல்லை. தண்ணி குடிக்க வச்சோம். ஏற்கனவே சர்க்கரை இருக்கதால மாத்திரை சாப்பிடாததாலதான் மயக்கம் வந்திருக்குமோன்னு என் தங்கை மாத்திரை சாப்பிட்டீங்களான்னு கேட்டா. அம்மாவுக்கு அதுவும் சொல்லத் தெரியலை. இப்படி தடுமாற்றத்தோடயே பேசவும் பயமாஆயிடுச்சு. உடனடியா மருத்துவமனைக்கு கூட்டிப் போய் பாத்துடணும்னு நினைச்சோம்.
அங்கதான் பிரச்சனை. நடக்கறதை விட்டுட்டு அம்மாவைக் கூட்டிக்கிட்டு அப்பாவோட மருத்துவமனை போறதா, என்ன பண்றது? அப்பதான் எங்க உறவினர்கள் ரெண்டு பேர் அப்பாவோட கூட போறதுக்கு முன் வந்தாங்க. பக்கத்தில்தான் தஞ்சாவூர். அங்கே 24-மணி நேரம் ஒரு மருத்துவமனை இருக்கும், அங்கே கூட்டிப் போறோம்; விழுந்ததால ஏற்பட்ட மயக்கமாதான் இருக்கும், நீங்க சாமியை வேண்டிக்கிட்டு தைரியமா நடங்க, ஒண்ணும் ஆகாது, நாங்க பாத்துக்கறோம்னாங்க.
அவங்களுக்கு ரொம்ப நன்றி சொல்லி அப்பா அம்மாவோட அவங்களை அனுப்பி வச்சுட்டு, மறுபடியும் நடக்க ஆரம்பிச்சோம். தஞ்சாவூர் ஊரைக் கடந்து போறதுக்கு ரொம்ப நேரம் ஆகும். அம்மாவைப் பற்றியும், நாங்களும் அந்த நாற்காலியை சரியா கவனிக்காம விட்டுட்டது பற்றியும் வருத்தப்பட்டு பேசிக்கிட்டே நடந்தோம். இப்ப செருப்பு போட்டுக்கலை நானு.
போன முறையை விட ஊர் நிறைய மாறி இருந்தது. புதுசா பாலம்லாம் இருந்த்து. ஆள் நடமாட்டம் இருக்கலைன்னா சில சமயம் நாம சரியான வழியிலதான் போறமான்னு சந்தேகம் வந்துரும்! அப்பவும் அப்படிதான் வந்திடுச்சு. ஒரு இடத்தில் கொஞ்சம் உட்கார்ந்து வேற யாரும் வர்றாங்களான்னு பாத்து, வழியை நிச்சயம் பண்ணிக்கிட்டு நடந்தோம்.
இதுக்குள்ள எனக்கு இடது காலில் கொப்புளம் வந்திருச்சு. நினைச்சாலும் செருப்பு போட முடியாது, இனி. ஆனா அது எனக்கு ரொம்ப நிம்மதியா இருந்தது!
நடுநடுவில் அப்பாவுடன் போன் பேசிக்கிட்டு போனோம். ஸ்கான் எடுத்து பார்த்த்தில் அம்மாவுக்கு எதுவும் இல்லைன்னு சொல்லிட்டாங்களாம். ரெண்டு நாள் ஓய்வெடுக்க சொன்னார் டாக்டர்னு சொன்னாங்க. அப்புறம்தான் நிம்மதியாச்சு. தையல்நாயகிக்கு மானசீகமா ஒரு பெரிய்ய்ய்ய நன்றி சொன்னேன்.
தஞ்சாவூரில் ஒரு பெரிய திடல் இருக்கும். அங்கே குடிக்க ஏதாச்சும் குடுப்பாங்க. மக்கள் படுப்பாங்க. நாங்க அங்கே போனப்ப யாருமே இல்ல. அங்கங்க சிலர் மட்டும் படுத்திருந்தாங்க. அங்கே உட்கார்ந்திருந்த போது, அப்பா காரை பாத்துட்டோம். அப்பதான் தஞ்சாவூரிலேயே இருக்கிற உறவினர் வீட்டுக்கு போய்கிட்டிருந்தாங்க. அப்ப ஒரு ஒரு மணி இருக்கும்னு நினைக்கிறேன். அப்புறம் ஓ…டி போய் அவங்களை நிறுத்தி பேசினோம். அம்மா இப்ப தெளிவா பேசினாங்க. இனி எங்க பின்னாடியே வர வேணாம், இனி கோவில்ல பார்ப்போம், ஓய்வெடுங்கன்னு கண்டிப்பா சொல்லி அனுப்பி வச்சோம்.
கொஞ்ச நேரத்துல நல்ல மழை பிடிச்சிக்கிச்சு. அங்கேயே ஒரு பேருந்து நிறுத்தத்தில் தங்க வேண்டியதாயிடுச்சு. அங்கே இன்னும் நிறைய பேரும் மழைக்கு ஒதுங்கி இருந்தாங்க. அரை மணி நேரத்தில் மழை விட்டதும் கிளம்பினோம்.
தோழிக்கு ஷூ போட்டு நடந்ததில் ஒரு பக்கமா உரசி, அவளுக்கு பாதத்தில் வலிச்சுக்கிட்டே இருந்தது. இந்த பயணத்தின் போது, ராத்திரியெல்லாம் மருத்துவ முகாம்கள் போட்டிருப்பாங்க. அந்த மாதிரி ஒரு இடத்தில் போய், அவளுக்கு மருந்து போட்டுக்கிட்டு, கையிலயும் மருந்து வாங்கிக்கிட்டோம். இதெல்லாமும் இலவச சேவையாதான் செய்யறாங்க.
நடக்கும் போது அடுத்த ஊருக்கு எத்தனை கிலோமீட்டர்னு யாரையும் கேட்டுறவே கூடாது! ஒரே மாதிரி ரெண்டு பதில் கிடைக்கவே கிடைக்காது. ஒருத்தர் 12-ம்பார், ஒருத்தர் 6-ம்பார்! மைல் கல்லே கூட அப்படித்தான் போட்டுருக்கும். ஒரு இடத்தில் 6-ன்னு போட்டிருந்தா, இன்னும் ஒரு மணி நேரம் நடந்துட்டு பார்த்தா மறுபடியும் 6! அதே ஊருக்கு!
சில சமயம் இவ்வளவு தூரமான்னு மலைப்பா இருக்கும். எவ்வளவு தூரமா இருந்தாலும் நடந்துதானே ஆகணும், வா, அப்படின்னு சொல்லிக்கிட்டே நடப்போம்.
‘ஹர ஹர… சிவசிவ
ஓம்சக்தி… பராசக்தி
வைத்தியநாதன்… வழித்துணை வருவான்
தையல்நாயகி… தைரியம் தருவாள்
முத்துக்குமரன்…முன்னே வருவான்’
இதுதான் அடிப்படையான கோஷம். இதெல்லாம் வை.கோவிலில் இருக்கிற சிவன், அம்பாள், முருகன், பெயர்கள். இதோட அவங்கவங்க கற்பனை வளத்துக்கும் அனுபவத்துக்கும் தகுந்தாற்போல நிறைய சேர்த்துக்குவாங்க. தெரிஞ்ச பாட்டெல்லாம் பாடியாச்சுன்னா, இதைச் சொல்லிக்கிட்டே நடப்போம். அல்லது ரொம்ப தெம்பே இல்லாத மாதிரி இருந்தாலும், சொல்லுவோம்.
ரோடெல்லாம் இந்த முறை பரவாயில்லைன்னாலும், நிறைய இடங்களில் பார்க்கிறதுக்கு நல்லாருக்க மாதிரி இருந்தாலும், காலை வச்சா அம்புட்டுதான்! அப்படி ஒரு குத்தல். அந்த மாதிரி இடங்களில், ‘ஓம் சக்தி.. பராசக்தி’ன்னு சொல்லிக்கிட்டே பல்லைக் கடிச்சுக்கிட்டு முழு பாத்த்தையும் பதிச்சு நடப்பேன். அப்படி ஒரு இடத்தில், ‘பாருடி ரோடு பூரா ரோஜாப்பூவா விரிச்சிருக்கு’, அப்படின்னேன்… பக்கத்தில் நடந்தவங்கள்லாம் சிரிச்சாங்க!
தஞ்சாவூரில் கவிதா மன்றம்னு ஒரு இடம் இருக்கு. அங்கே காலைல இட்லி, பொங்கல் சுடச் சுட. அதாவது 3 மணி, 4 மணி காலைல! மருத்துவ முகாமும் அங்கேயே போட்டிருப்பாங்க. அதனால ஒரே கூட்டம். நாங்க அங்கே போன போது மூணரை இருக்கும்னு நினைக்கிறேன். அங்க போய் சாப்பிட்டுட்டு, ஒரு அரை மணி நேரத்துக்கு படுத்து நல்லா தூங்கிட்டோம். மண்டபமா இருக்கறதால கட்டிடத்துக்குள்ள படுக்கலாம்.
போன முறை நடந்த போது பூண்டிக்கு போய் சேர முடியலை. அதுக்கு 3,4 கி.மீ முன்னாடி மயில் பண்ணைன்னு ஒரு குட்டி இடம் (ஊர்?) இருக்கு. அங்க பம்பு செட்டு இருக்கும். குளிக்க விடுவாங்க. சாப்பாடும் போடுவாங்க. நாங்க போன முறை அங்கே வந்து சேரவே 9 மணி ஆயிடுச்சு. வெயிலில் மேலே நடக்க முடியாதுன்னு அங்கேயே தங்கிட்டோம். அப்பா கார் கொண்டு வந்தாதால, அவங்க வண்டிக்கு போய் துணிமணி எடுத்துட்டு வர சொன்னாங்க.
இந்த முறை மயில் பண்ணை வரும்போது மணி எட்டு இருக்கும்னு நினைக்கிறேன். சாப்பாட்டுக்கு மகா பெரீய்ய்ய்ய வரிசை. அதில் நின்னு சாப்பாடு வாங்கினா நேரம் வேற ஆயிடும். அதனால அசதி தீர பம்பு செட்டு தண்ணியிலாச்சும் ரெண்டு நிமிஷமாவது நின்னுட்டு போலாம்னு நினைச்சோம். மாற்றுத்துணியெல்லாம் இல்லை. சேலையோட அப்படியேதான் குளியல். நடக்கும்போது சீக்கிரம் காஞ்சுடும்னுதான்! அங்கேயும் கூட்டம். ரெண்டு நிமிஷத்துக்கு மேல நிக்க முடியாது. தோழி குளிக்கலைன்னுட்டா. தங்கையும் நானும்தான் (பம்பு செட்டு குளியல்) ருசி கண்ட பூனைகள்!
குளிச்சிட்டு இன்னும் எத்தனை கிலோமீட்டர் தங்கற ஊருக்கு (கோவிலூர்), அப்படின்னு விசாரிச்சப்பதான் இந்த ஊருதான் அந்த ஊருன்னாங்க! அதாவது நாங்க தங்கற இடம் பூண்டிக்கு முன்னாடியே. அதனால அந்த தூரத்தை சேர்த்து நாளைக்கு நடக்கணும்! நாங்க இன்னும் ரெண்டு மணி நேரமாச்சும் நடக்க வேண்டி இருக்கும்னு நினைச்சுக்கிட்டிருந்ததால, இது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியா இருந்த்து! அப்புறம் அந்த வீட்டை கண்டுபிடிச்சு போய் நடக்க இன்னும் முக்கால் மணி நேரம் ஆனது.
எங்க ஈரத்தைப் பார்த்துட்டு, ‘என்னம்மா குளிச்சிட்டு வந்தீங்களா’ன்னு கேட்டாங்க அண்ணன். ‘ஆமா அண்ணே, மயில் பண்ணைல இருந்து ரொம்ப தூரம் நடக்கணுமாக்கும்னு நினைச்சு குளிச்சோம்’னு சொன்னோம்.
(பயணம் தொடரும்)
அன்புடன்
கவிநயா
பி.கு.: என் தங்கைகிட்ட இன்னிக்கு பேசினப்ப, 'என்னடி இன்னும் பூண்டியே போய் சேரலையா? இந்த வேகத்தில் போனா எப்ப கோவிலுக்கு போய் சேர்றது?!' ன்னு கேட்டா :)
Monday, June 13, 2011
வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 3
முதல் பகுதி இங்கே;
இரண்டாம் பகுதி இங்கே.
போன முறையெல்லாம் நாங்க வந்து சேரவே (அதுவும் நானு, காலில் கொப்புளத்தோட) எட்டரை ஆனது. இந்த முறை எவ்வளவோ பரவாயில்லை. கொஞ்ச நேரம் செருப்பு போட்டதாலயோ என்னவோ காலில் உறுத்தற உணர்வு இருந்தாலும் கொப்புளம் இன்னும் வரலை.
வீட்டில் நுழைஞ்ச உடனேயே ஒரு பெரிய ஹால். எங்களுக்கு முன்னாடியே நிறைய பேர் வந்து அங்கே படுத்து தூங்கிக்கிட்டிருந்தாங்க. நாங்களும் கொஞ்சம் படுத்திருந்திட்டு குளிக்கலாம்னு நினைச்சு, காபி குடிச்சிட்டு படுத்துட்டோம்.
எழுந்து பார்க்கும் போதுதான் அங்கேதான் ஷண்முகமும், தங்கை, மனைவி, குழந்தையோட தங்கியிருக்கார்னு தெரிஞ்சது. எங்க வண்டியில் எங்களைச் சேர்த்து கிட்டத்தட்ட 20 பேர். எங்களைத் தவிர மற்றவங்க எல்லோரும் கோயமுத்தூரிலிருந்து பெரிய்ய குழுவா வந்திருந்தாங்க. அதில் ஷண்முகமும் ஒருத்தர்.
அவர் குழந்தையோட கொஞ்சம் விளையாடிட்டு, பிறகு போய் ஒவ்வொருத்தரா போய் குளிச்சிட்டு வந்தோம். குழாயில் தண்ணி வர அளவெல்லாம் தண்ணீர் வசதி இல்லை. ரெண்டு பெரீய்ய்ய அண்டாவில் தண்ணீர் வச்சிருந்தாங்க. அதைத்தான் எடுத்து பயன்படுத்தினோம். பின்னாடியே வராண்டா மாதிரி இருந்த இடத்தில் அடுப்பு போட்டு சமையல் செய்தாங்க. (அது ஒரு முஸ்லிம் வீடுன்னு பிறகு தெரிஞ்சது!) இந்த மாதிரி தங்கறப்போ, வீட்டுக்காரங்க அவ்வளவா வெளிய வர மாட்டாங்க. சாப்பாடு மட்டும் சிலர் நம்மகிட்ட இருந்து ஏத்துக்குவாங்க. மற்றபடி வீடு முழுக்க, வர்றவங்களுக்கு கொடுத்துருவாங்க!
இரண்டு மாற்றுத் துணிதான் எடுத்துட்டு போவோம். அதை வண்டியில் போட்டுருவோம். அவங்க தங்கற வீடுகளுக்கு கொண்டு வந்துருவாங்க. அதனால துவைச்சு துவைச்சு கட்டிக்கணும். அந்த அசதியில், கால்வலியில், துவைச்சு குளிக்கிறது ஒரு பிரம்ம பிரயத்தனம்தான்னே சொல்லலாம்.
ஒரு வழியா துவைச்சு காயப் போட்டு, (காயப் போட பெரும்பாலும் இடம் வேற அதிகம் இருக்காது, இத்தனை பேர் தங்கும்போது), குளிச்சிட்டு வந்து சாப்பிட்டோம். பிறகு காலில் எண்ணையோ, ஐயோடெக்ஸோ, அவங்கவங்க தடவிக்கிட்டு, படுத்தாச்சு.
2 மணிக்கு மதியம் சாப்பிட எழுப்பினாங்க. மறுபடி சாப்பிட்டுட்டு, கொஞ்சமே கொஞ்ச நேரம் படுத்தோம். 4 மணி போல துணியெல்லாம் எடுத்து வச்சிட்டு, மறுபடி ஒரு குளியல். சாயந்திரம் கிளம்பும் முன்னாடி ஒருதரம் குளிச்சாதான் நல்லா நடக்க முடியும். இல்லன்னா ரொம்ப கஷ்டம். தூக்கமும் அசதியும் அழுத்திரும். அனுபவத்தில் கண்ட உண்மை.
கோயமுத்தூர் குழுவில் ஒரு டாக்டர் இருந்தார். அவர்கிட்ட போய் தோழியோட காயத்தை சரிபண்ணி கட்டு போட்டுக்கிட்டோம். நிறைய பேருக்கு கொப்புளம் வர மாதிரி இருக்கிற இடத்தில், பாதத்தில் ப்ளாஸ்டர் போட்டு விட்டார். ஆனா நான் இன்னிக்கு போட்டுக்கலை. பிறகு உப்புமா சாப்பிட்டு காபி குடிச்சோம். அப்பதான் எங்க அம்மாவும் அப்பாவும் வந்தாங்க, எங்களைப் பார்க்க. எங்க பின்னாடியே காரில் வந்துக்கிட்டிருந்தாங்க. அவ்வப்போது சில இடங்களில் வந்து பார்ப்பாங்க. அவங்ககிட்ட பேசிட்டு கிளம்பினோம்.

படம் ஷண்முகம் அனுப்பி இருந்தார். நன்றி ஷண்முகம்!
ரொம்பக் கஷ்டப்பட்டு தேட வேணாம்! படத்தில் நானு இல்லை! :)
இன்றைக்குதான் அதிக தூரம் நடக்கணும். பூண்டி வரைக்கும். 48கி.மீ. பூண்டியைப் பார்த்துட்டாலே, வை.கோவிலுக்கு போய்ச் சேர்ந்த மாதிரிதான்னு சொல்லுவாங்க. அவ்வளவு கஷ்டமான நடை. ஆனா பார்க்கப் போனா, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் அப்படித்தான் தோணும்.
போகிற வழியெல்லாம் காபி, டீ, தண்ணீர், இளநீர், மோர், சாப்பாடு, இப்படி ஏதாவது கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. ஆனா தாமதமா போனா ரோடு பூரா குப்பையா கிடக்கிற வெற்று ப்ளாஸ்டிக் கப்கள்தான் நம்மை வரவேற்கும். நடக்கும்போது ரொம்பவே ஆதங்கப்பட்ட விஷயம் இது. அடியவர்களுக்கு அன்பா இதையெல்லாம் கொடுக்கறாங்களே தவிர, குப்பைகளை ஒரே இடத்தில் போடறது பற்றியோ, அந்த இடத்தை சுத்தம் பண்றது பற்றியோ யாரும் கவலைப்படற மாதிரி தெரியலை :(
இராத்திரி நாங்கல்லாம் நடந்துக்கிட்டிருக்கும் போது 9 மணி அளவில் எங்க பக்கத்தில் நாங்க சேர்ந்திருந்த வண்டிக் காரங்களோட கார் வந்து நின்னுது. தண்ணி ஊத்தின சாதத்துல மோர் ஊத்தி, எலுமிச்சை ஊறுகா போட்டு நல்லா கரைச்சு கொண்டு வந்தாங்க. அதுதான் நடக்கிறதுக்கு நல்ல சத்து குடுக்கும். முன்னெல்லாம் எல்லாம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லுவேன். ஆனா இப்ப கொஞ்சம் சமர்த்தாயிட்டேன், எதெது நல்லது, தேவைன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதனால அதுல ஆளுக்கு ரெண்டு டம்ளர் குடிச்சிட்டு நடந்தோம்.
4 நாளும் சரியா அவங்க வண்டியில் வந்தவங்களைப் பார்த்து எப்படியோ கண்டு பிடிச்சு வந்து குடுத்திருவாங்க! 5 மணிக்கு ஏதோ சாப்பிட்டு கிளம்பறதால 9 மணிக்கு கஞ்சி குடிச்சா தெம்பா இருக்கும்.
பாட்டெல்லாம் சொல்லிக்கிட்டு, கொஞ்ச நேரத்துக்கு ஒரு தரம் உட்கார்ந்து கெஞ்சற காலைக் கொஞ்சம் கொஞ்சி தாஜா பண்ணிக்கிட்டு, நடந்தோம். இன்றைக்கும் கொஞ்ச நேரம் செருப்பு போட்டுக்கிட்டேன். திருக்காவனூர் பட்டிங்கிற இடத்தில் எங்க உறவினர் ஒருத்தவங்க அன்னதானம் பண்ணுவாங்க. அங்கே போயிட்டா கொஞ்சம் கூட நேரம் உட்காரலாம்கிற எதிர்பார்ப்போட நடந்தோம்.
அங்கே போய்ச் சேர்ந்தப்ப ஒரு பத்தரை இருக்கும். அம்மாவும் அப்பாவும் ஏற்கனவே அங்க காத்திருந்தாங்க. நாங்க சாப்பிட்டுட்டு ஒரு இடத்தில் விரிப்பை விரிச்சு காலை நீட்டி உட்கார்ந்தோம். அம்மாவும் அப்பாவும் பக்கத்தில் ப்ளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாங்க. தரை மேடு பள்ளமா இருந்தது, ஆனா எங்க அசதியில் அது யாருக்கும் உறைக்கலை. திடீர்னு அம்மா உட்கார்ந்திருந்த நாற்காலி பின்னாடி அப்படியே சாஞ்சிடுச்சு. அம்மா உடனடியா நினைவை இழந்துட்டாங்க.
(பயணம் தொடரும்)
அன்புடன்
கவிநயா
இரண்டாம் பகுதி இங்கே.
போன முறையெல்லாம் நாங்க வந்து சேரவே (அதுவும் நானு, காலில் கொப்புளத்தோட) எட்டரை ஆனது. இந்த முறை எவ்வளவோ பரவாயில்லை. கொஞ்ச நேரம் செருப்பு போட்டதாலயோ என்னவோ காலில் உறுத்தற உணர்வு இருந்தாலும் கொப்புளம் இன்னும் வரலை.
வீட்டில் நுழைஞ்ச உடனேயே ஒரு பெரிய ஹால். எங்களுக்கு முன்னாடியே நிறைய பேர் வந்து அங்கே படுத்து தூங்கிக்கிட்டிருந்தாங்க. நாங்களும் கொஞ்சம் படுத்திருந்திட்டு குளிக்கலாம்னு நினைச்சு, காபி குடிச்சிட்டு படுத்துட்டோம்.
எழுந்து பார்க்கும் போதுதான் அங்கேதான் ஷண்முகமும், தங்கை, மனைவி, குழந்தையோட தங்கியிருக்கார்னு தெரிஞ்சது. எங்க வண்டியில் எங்களைச் சேர்த்து கிட்டத்தட்ட 20 பேர். எங்களைத் தவிர மற்றவங்க எல்லோரும் கோயமுத்தூரிலிருந்து பெரிய்ய குழுவா வந்திருந்தாங்க. அதில் ஷண்முகமும் ஒருத்தர்.
அவர் குழந்தையோட கொஞ்சம் விளையாடிட்டு, பிறகு போய் ஒவ்வொருத்தரா போய் குளிச்சிட்டு வந்தோம். குழாயில் தண்ணி வர அளவெல்லாம் தண்ணீர் வசதி இல்லை. ரெண்டு பெரீய்ய்ய அண்டாவில் தண்ணீர் வச்சிருந்தாங்க. அதைத்தான் எடுத்து பயன்படுத்தினோம். பின்னாடியே வராண்டா மாதிரி இருந்த இடத்தில் அடுப்பு போட்டு சமையல் செய்தாங்க. (அது ஒரு முஸ்லிம் வீடுன்னு பிறகு தெரிஞ்சது!) இந்த மாதிரி தங்கறப்போ, வீட்டுக்காரங்க அவ்வளவா வெளிய வர மாட்டாங்க. சாப்பாடு மட்டும் சிலர் நம்மகிட்ட இருந்து ஏத்துக்குவாங்க. மற்றபடி வீடு முழுக்க, வர்றவங்களுக்கு கொடுத்துருவாங்க!
இரண்டு மாற்றுத் துணிதான் எடுத்துட்டு போவோம். அதை வண்டியில் போட்டுருவோம். அவங்க தங்கற வீடுகளுக்கு கொண்டு வந்துருவாங்க. அதனால துவைச்சு துவைச்சு கட்டிக்கணும். அந்த அசதியில், கால்வலியில், துவைச்சு குளிக்கிறது ஒரு பிரம்ம பிரயத்தனம்தான்னே சொல்லலாம்.
ஒரு வழியா துவைச்சு காயப் போட்டு, (காயப் போட பெரும்பாலும் இடம் வேற அதிகம் இருக்காது, இத்தனை பேர் தங்கும்போது), குளிச்சிட்டு வந்து சாப்பிட்டோம். பிறகு காலில் எண்ணையோ, ஐயோடெக்ஸோ, அவங்கவங்க தடவிக்கிட்டு, படுத்தாச்சு.
2 மணிக்கு மதியம் சாப்பிட எழுப்பினாங்க. மறுபடி சாப்பிட்டுட்டு, கொஞ்சமே கொஞ்ச நேரம் படுத்தோம். 4 மணி போல துணியெல்லாம் எடுத்து வச்சிட்டு, மறுபடி ஒரு குளியல். சாயந்திரம் கிளம்பும் முன்னாடி ஒருதரம் குளிச்சாதான் நல்லா நடக்க முடியும். இல்லன்னா ரொம்ப கஷ்டம். தூக்கமும் அசதியும் அழுத்திரும். அனுபவத்தில் கண்ட உண்மை.
கோயமுத்தூர் குழுவில் ஒரு டாக்டர் இருந்தார். அவர்கிட்ட போய் தோழியோட காயத்தை சரிபண்ணி கட்டு போட்டுக்கிட்டோம். நிறைய பேருக்கு கொப்புளம் வர மாதிரி இருக்கிற இடத்தில், பாதத்தில் ப்ளாஸ்டர் போட்டு விட்டார். ஆனா நான் இன்னிக்கு போட்டுக்கலை. பிறகு உப்புமா சாப்பிட்டு காபி குடிச்சோம். அப்பதான் எங்க அம்மாவும் அப்பாவும் வந்தாங்க, எங்களைப் பார்க்க. எங்க பின்னாடியே காரில் வந்துக்கிட்டிருந்தாங்க. அவ்வப்போது சில இடங்களில் வந்து பார்ப்பாங்க. அவங்ககிட்ட பேசிட்டு கிளம்பினோம்.

படம் ஷண்முகம் அனுப்பி இருந்தார். நன்றி ஷண்முகம்!
ரொம்பக் கஷ்டப்பட்டு தேட வேணாம்! படத்தில் நானு இல்லை! :)
இன்றைக்குதான் அதிக தூரம் நடக்கணும். பூண்டி வரைக்கும். 48கி.மீ. பூண்டியைப் பார்த்துட்டாலே, வை.கோவிலுக்கு போய்ச் சேர்ந்த மாதிரிதான்னு சொல்லுவாங்க. அவ்வளவு கஷ்டமான நடை. ஆனா பார்க்கப் போனா, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் அப்படித்தான் தோணும்.
போகிற வழியெல்லாம் காபி, டீ, தண்ணீர், இளநீர், மோர், சாப்பாடு, இப்படி ஏதாவது கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. ஆனா தாமதமா போனா ரோடு பூரா குப்பையா கிடக்கிற வெற்று ப்ளாஸ்டிக் கப்கள்தான் நம்மை வரவேற்கும். நடக்கும்போது ரொம்பவே ஆதங்கப்பட்ட விஷயம் இது. அடியவர்களுக்கு அன்பா இதையெல்லாம் கொடுக்கறாங்களே தவிர, குப்பைகளை ஒரே இடத்தில் போடறது பற்றியோ, அந்த இடத்தை சுத்தம் பண்றது பற்றியோ யாரும் கவலைப்படற மாதிரி தெரியலை :(
இராத்திரி நாங்கல்லாம் நடந்துக்கிட்டிருக்கும் போது 9 மணி அளவில் எங்க பக்கத்தில் நாங்க சேர்ந்திருந்த வண்டிக் காரங்களோட கார் வந்து நின்னுது. தண்ணி ஊத்தின சாதத்துல மோர் ஊத்தி, எலுமிச்சை ஊறுகா போட்டு நல்லா கரைச்சு கொண்டு வந்தாங்க. அதுதான் நடக்கிறதுக்கு நல்ல சத்து குடுக்கும். முன்னெல்லாம் எல்லாம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லுவேன். ஆனா இப்ப கொஞ்சம் சமர்த்தாயிட்டேன், எதெது நல்லது, தேவைன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதனால அதுல ஆளுக்கு ரெண்டு டம்ளர் குடிச்சிட்டு நடந்தோம்.
4 நாளும் சரியா அவங்க வண்டியில் வந்தவங்களைப் பார்த்து எப்படியோ கண்டு பிடிச்சு வந்து குடுத்திருவாங்க! 5 மணிக்கு ஏதோ சாப்பிட்டு கிளம்பறதால 9 மணிக்கு கஞ்சி குடிச்சா தெம்பா இருக்கும்.
பாட்டெல்லாம் சொல்லிக்கிட்டு, கொஞ்ச நேரத்துக்கு ஒரு தரம் உட்கார்ந்து கெஞ்சற காலைக் கொஞ்சம் கொஞ்சி தாஜா பண்ணிக்கிட்டு, நடந்தோம். இன்றைக்கும் கொஞ்ச நேரம் செருப்பு போட்டுக்கிட்டேன். திருக்காவனூர் பட்டிங்கிற இடத்தில் எங்க உறவினர் ஒருத்தவங்க அன்னதானம் பண்ணுவாங்க. அங்கே போயிட்டா கொஞ்சம் கூட நேரம் உட்காரலாம்கிற எதிர்பார்ப்போட நடந்தோம்.
அங்கே போய்ச் சேர்ந்தப்ப ஒரு பத்தரை இருக்கும். அம்மாவும் அப்பாவும் ஏற்கனவே அங்க காத்திருந்தாங்க. நாங்க சாப்பிட்டுட்டு ஒரு இடத்தில் விரிப்பை விரிச்சு காலை நீட்டி உட்கார்ந்தோம். அம்மாவும் அப்பாவும் பக்கத்தில் ப்ளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாங்க. தரை மேடு பள்ளமா இருந்தது, ஆனா எங்க அசதியில் அது யாருக்கும் உறைக்கலை. திடீர்னு அம்மா உட்கார்ந்திருந்த நாற்காலி பின்னாடி அப்படியே சாஞ்சிடுச்சு. அம்மா உடனடியா நினைவை இழந்துட்டாங்க.
(பயணம் தொடரும்)
அன்புடன்
கவிநயா
Monday, June 6, 2011
நீ இல்லாத போதும்...
(100-வது கவிதை)

கடற்கரை மணலில்
கால் பதித்து நடக்கிறேன்
கூடவே பதிகின்றன
உன் பாதச் சுவடுகளும் -
என்னருகில் நீ இல்லாத போதும்…
தனிமையின் அமைதியிலும்
இரைச்சலில் அமிழ்கையிலும்
தெளிவாய் ஒலிக்கிறது,
உன்னுடைய இன்குரல் மட்டும் -
என்னருகில் நீ இல்லாத போதும்…
தெருவின் வெறுமையிலும்
திருவிழாக் கூட்டத்திலும்
புன்னகையுடன் பளிச்சிடுகிறது,
அன்பொளிரும் உன் வதனம் -
என்னருகில் நீ இல்லாத போதும்…
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/eaglella/246690652
பி.கு.: பாத யாத்திரை செய்வதை விட, அதைப் பற்றி எழுதறது கஷ்டமா இருக்கும் போல! போன வாரம் முழுக்க எழுதறதுக்கு போதிய நேரம் கிடைக்காததால இந்த வாரம் கவிதை. கூடிய விரைவில் யாத்திரையை தொடர்கிறேன்...

கடற்கரை மணலில்
கால் பதித்து நடக்கிறேன்
கூடவே பதிகின்றன
உன் பாதச் சுவடுகளும் -
என்னருகில் நீ இல்லாத போதும்…
தனிமையின் அமைதியிலும்
இரைச்சலில் அமிழ்கையிலும்
தெளிவாய் ஒலிக்கிறது,
உன்னுடைய இன்குரல் மட்டும் -
என்னருகில் நீ இல்லாத போதும்…
தெருவின் வெறுமையிலும்
திருவிழாக் கூட்டத்திலும்
புன்னகையுடன் பளிச்சிடுகிறது,
அன்பொளிரும் உன் வதனம் -
என்னருகில் நீ இல்லாத போதும்…
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/eaglella/246690652
பி.கு.: பாத யாத்திரை செய்வதை விட, அதைப் பற்றி எழுதறது கஷ்டமா இருக்கும் போல! போன வாரம் முழுக்க எழுதறதுக்கு போதிய நேரம் கிடைக்காததால இந்த வாரம் கவிதை. கூடிய விரைவில் யாத்திரையை தொடர்கிறேன்...
Monday, May 30, 2011
வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 2
முதல் பகுதி இங்கே
இந்த முறை போகும் போது ஓரளவு வீட்டுப் பாடம் படிச்சிட்டு போனேன்.
எங்கூர்ல 10K அப்படின்னு 10 கி.மீ. மாரத்தான் ஒண்ணு நடந்தது. கோவிலுக்கு போறதுக்கு 2 வாரம் முந்திதான். அதில் ஓடறவங்க, நடக்கறவங்க, இல்ல ரெண்டும் மாத்தி மாத்தி செய்ய நினைக்கிறவங்க, எல்லாருமே கலந்துக்கலாம். தோழிகளோட நானும் நடக்கற குழுவில் சேர்ந்திருந்தேன். அதுக்காக வாரா வாரம் குறைஞ்சது ஒரு மணி நேரம் பயிற்சி செய்தோம். அதிலும் 10000 பேர் சேர்ந்திருந்தாங்க. அதைப் பற்றி எழுதப் புகுந்தா அது இன்னொரு பதிவாயிடும்! அதனால இதோட நிறுத்திக்கிறேன்!
எதுக்கு சொல்ல வந்தேன்னா, அதுல சேர்ந்ததால ரொம்ப தூரம் நடக்கறது பற்றி, அதுக்கு எப்படி தயாராகணும், அப்படிங்கிறது பத்தில்லாம் வாசிக்க நேர்ந்தது, உதவியா இருந்தது. அது முடிஞ்ச பிறகு, எங்க வீட்டுக்கு முன்னாடி பதிச்சிருக்கிற சரளைக்கல்லில், தினமும் அரை மணி நேரம் வெறுங் கால்ல நடந்து பழகினேன்.
சூடான மணல்ல நடந்தாலும், இந்த மாதிரி சரளைக்கல்லில் நடந்தாலும் பாதம் கடினமாயிடுமாம். அப்படி ஆகிட்டா கொப்பளம் வர்றது மாதிரியான பிரச்சனைகளை தவிர்க்கலாம். அப்படியும் எனக்கு தவிர்க்க முடியலைங்கிறது வேற விஷயம் :)
சரி… விட்ட இடத்துக்கு போவோம், வாங்க!
தெரிஞ்ச சாமி பாட்டு, ஸ்லோகம், பஜனை, இப்படி பாடிக்கிட்டே நடந்தோம். இந்த மாதிரி பயணத்தின் போது நிறைய பாட்டு கோஷ்டிகளை பார்க்கலாம். ரொம்ப நல்லா பாடறவங்க நிறைய இருக்காங்க. அவங்களுக்கு பாட்டெல்லாம் மனப்பாடமாவும் தெரியும். அவங்க பாடப் பாட, கூட்டமெல்லாம் ‘ஓம் நமசிவாய’ அல்லது ‘ஓம் சக்தி’ அல்லது ‘அரோகரா’ இப்படி பாட்டுக்குத் தகுந்த மாதிரி கோரஸ் பாடிக்கிட்டே நடக்கும். அந்த மாதிரி பாடல்கள் பொதுவாகவே ஒரு வேகத்தோட இருக்கும். அதை பாடும் போது நம்ம நடையும் தன்னால வேகம் எடுத்துரும்! ரொம்ப அருமையான அனுபவம் அது!
நாம சோர்ந்து போகிற சமயங்களில் அவளே அனுப்பி வச்ச மாதிரி எப்படியோ யாராச்சும் வந்து சேருவாங்க, அவ்ளோதான் வா, வான்னு சொல்லி பாட்டுப் பாடியே கூட்டிட்டு போயிடுவாங்க! இந்த மாதிரி முந்தைய வருஷங்களில் எனக்கே நிறைய நடந்திருக்கு.
எங்களுக்கு தெரிஞ்ச பாட்டெல்லாம் பாடி முடிச்சாச்சு. ரோடில் கல்லு ரொம்பவே குத்த ஆரம்பிச்சது. என் தங்கை, “செருப்பை வேணா போட்டுக்கோடி, போட்டுக்கோடி”, அப்படின்னு சொல்லிக்கிட்டே இருந்தா.
எனக்கு இளையவளா இருந்தாலும் எங்க சின்னக் குழுவிற்கு அவதான் தலைவி! நல்லா பேசுவா, ரொம்ப சமர்த்து! ‘நீ மட்டும் எம்.பி.ஏ. படிச்சிருந்தா சூப்பர் மானேஜரா இருந்திருப்பேடி’ன்னு சொல்வேன்! எங்க கூட நடந்த தோழி ஏற்கனவே ஷு போட்டிருந்தா. சரி, இவ வேற ரொம்ப சொல்றா, வீட்லயும் ‘ஆமா, செருப்பு போட்டுக்கிட்டேன்’னு உண்மை(!) சொல்லணுமே, அப்படிங்கிற எண்ணத்தில் நானும் போட்டுக்கிட்டேன்…
இப்படி கொஞ்சம் மெதுவா நடந்துக்கிட்டிருந்த போது, தனியா நடந்திட்டிருந்த ஒருத்தர், ‘அரோகரா போடறீங்களா, வாங்க வாங்க’ன்னு சொல்லி, ‘அப்பனுக்கு… அரோகரா’ன்னு ஆரம்பிச்சு வேகமா முருகனோட பேர்களை சொல்லிக்கிட்டே போனார்… நாங்களும் உற்சாகமா அரோகரா போட்டுக்கிட்டு, அவரோட ஓரளவு வேகமாகவே நடந்தோம்.
இந்த மாதிரி பாட்டு கோஷ்டிகள் ரயில் சிநேகம் மாதிரி. முடிஞ்ச வரைக்கும் கொஞ்ச தூரம் அவங்களோட ஓடிட்டு, முடியலைன்னா பின் தங்கி நம்ம மெது நடைக்கு மாறிடுவோம்! ஆனா போன முறை நடந்த போது, அப்படி ரயில் சிநேகமா இல்லாம தொடர்ந்த சிநேகமாவே, ஒரு பாட்டு குழுவினரின் அறிமுகம் கிடைச்சது.
செந்தில் – வருஷா வருஷம் ‘இச்சடி’ங்கிற இடத்தில், நண்பர்களோட சேர்ந்து பாத யாத்திரை செய்யறவங்களுக்கு அன்னதானம் செய்துட்டு வரார். நல்ல பாடகர். பத்மநாபன் – ரொம்ப அருமையா பாடுவார். எப்பவும் ஏதாச்சும் பாடிக்கிட்டே இருப்பார். அருமையான குரல். இவரை நீங்க விஜய் டி.வி.ல சூப்பர் சிங்கரில் பார்த்திருக்கலாம்! என்ன, என் அம்மன் பாடல்களுக்கு இசையமைச்சு பாடறேன், பாடறேன்னு, இது வரை சொல்லிக்கிட்டே இருக்கார்! அடுத்தது ஷண்முகம் – இவரும் நல்லா பாடுவார். கண்ணதாசன் பாடல்கள், மற்றும் எந்த பாடலா இருந்தாலும் பிடிச்சிருந்தா வரிகளை உடனே மனப்பாடம் செய்துடுவார்! யாரையாச்சும் ஓட்டிக்கிட்டே இருப்பார் :) இவர் தன்னோட ஒரு வயசு குழந்தையை தூக்கிட்டு நடந்தார் இந்த வருஷம்.
இச்சடி, புதுக்கோட்டையிலிருந்து 12 கி.மி. அல்லது 18? - நினைவில்லை. அங்கே சாப்பிட வரணும்னு ஏற்கனவே செந்தில் அழைச்சிருந்தார். அரோகரா போட்டுக்கிட்டே நடந்துக்கிட்டிருந்த போது ‘இச்சடி’ங்கிற பெயர்ப் பலகையைப் பார்த்தோம். (அட, அதுக்குள்ள வந்திருச்சான்னு ஆச்சர்யமா இருந்தது. அப்ப ராத்திரி எட்டரைதான் இருக்கும்னு நினைக்கிறேன்.) எங்க கூட வந்தவர்கிட்ட “நாங்க கொஞ்ச நேரம் கழிச்சு வர்ரோம் அண்ணே”ன்னு சொல்லிட்டு, லைட்டெல்லாம் போட்டு ஜோரா சாப்பாடு நடந்துக்கிட்டிருந்த அந்த இடத்தில் நுழைஞ்சோம்.
செந்திலைக் கண்டுபிடிக்க கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு. சாம்பார் பத்தலைங்கிற டென்ஷன்ல இருந்தார்! இருந்தாலும் அந்த நேரத்திலும் எங்களை பார்த்து பேசி அன்பா சாப்பாடு பரிமாறி, கவனிச்சுக்கிட்டார். பத்மநாபன், அவர் குடும்பத்தை அறிமுகப்படுத்தினார். ஷண்முகத்தையும் அங்கேதான் பார்த்தோம். கணக்கு முடிச்சு சரி பண்ண ரொம்ப நேரம் ஆயிடும்கிறதால மறு நாளில் இருந்துதான் நடப்போம், அப்படின்னார் செந்தில். ஒரு வழியா அவங்ககிட்ட விடை பெற்றுக்கிட்டு மறுபடி கிளம்பிட்டோம்.
செருப்பு போட்டு நடக்கறது உறுத்தலா இருந்தது. பிடிக்கலை. அதனால கொஞ்ச நேரத்தில் மறுபடியும் கழற்றிட்டேன். சாதாரணமா ஒரு மணி நேரத்துக்கு 4 அல்லது 5கி.மீ. நடக்கலாம். நாங்களும் கிட்டத்தட்ட அந்த மாதிரிதான் நடந்தோம், ஆரம்பத்தில்! 2 மணி நேரமெல்லாம் உட்காராம நடந்திருக்கோம். ஆனா லைட் தெரிஞ்சா போதும், அங்க கொஞ்சம் உட்காரலாமான்னு கெஞ்ச ஆரம்பிச்சிரும் காலு!
இப்படி நடந்துக்கிட்டிருந்த போது தோழி ஷூ தடுக்கி கீழே விழுந்துட்டா! முழங்கால்ல சிராய்ச்சு நல்ல காயமாயிடுச்சு. ரத்தமும் நிக்காம வந்துக்கிட்டே இருந்துச்சு. அந்த இடத்தில் சூரிதார் துணியே கொஞ்சம் கிழிஞ்சிடுச்சுன்னா பாருங்க! எங்களுக்கு கொஞ்சம் பயமாயிடுச்சு. எங்கேடா லைட் வரும், உட்காரலாம்னு பார்த்துக்கிட்டே போனோம். வலது பக்கத்தில்தான் ஒரு வீடு மாதிரி தெரிஞ்சது.
அங்க போனா, இரண்டு மூணு பைரவர்! வீட்டில் வளர்க்கறாங்க போல! அந்த வீட்டுக்காரரும் அவர் மனைவியும் வந்து அதையெல்லாம் தள்ளி போகச் சொன்னாங்க. உட்காருங்கன்னு சொல்லி உபசரிச்சாங்க. அங்கேயே வாசலில் உட்கார்ந்தோம். விஷயம் தெரிஞ்சு முதல் உதவி சாமான் ஏதும் வேணுமான்னு கேட்டாங்க. ஆனா தோழியே எல்லாம் வச்சிருந்தா. அதனால அவ வச்சிருந்த பொருட்களை வச்சு, காயத்தை சுத்தம் பண்ணி, மருந்து போட்டு கட்டினோம். வீட்டுக்காரங்களுக்கு நன்றி சொல்லிட்டு கிளம்பினோம்.
இந்த பயணத்தின் போது மட்டும் எங்கே, யார் வீட்டுக்கு போனாலும், அல்லது வழியில் என்ன தேவைப்பட்டாலும், எல்லோருமே அப்படி ஒரு அன்பா, உதவி மனப்பான்மையோட நடந்துக்குவாங்க… கூட நடக்கிற பக்தர்களும் அப்படித்தான்… இது ஒரு மிக அருமையான உணர்வு… எப்பவுமே எல்லாருமே இப்படி இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்!
அதுக்கப்புறம் தோழியால ரொம்ப வேகமா நடக்க முடியல. இருந்தாலும் அமைதியாகவே நடந்து வந்தா… இப்படியாக நடந்து, ஒரு வழியா கந்தர்வ கோட்டைக்கு வந்து சேர்ந்தோம்! அங்கதான் அன்னிக்கு தங்கணும். தங்கற வீட்டை ஏற்கனவே அடையாளம் கேட்டு வச்சிருந்தோம். அதன்படி கேட்டுக் கேட்டு அந்த வீட்டுக்கு நாங்க போய் சேர்ந்தப்ப, காலை மணி ஆறரை!
(பயணம் தொடரும்…)
அன்புடன்
கவிநயா
இந்த முறை போகும் போது ஓரளவு வீட்டுப் பாடம் படிச்சிட்டு போனேன்.
எங்கூர்ல 10K அப்படின்னு 10 கி.மீ. மாரத்தான் ஒண்ணு நடந்தது. கோவிலுக்கு போறதுக்கு 2 வாரம் முந்திதான். அதில் ஓடறவங்க, நடக்கறவங்க, இல்ல ரெண்டும் மாத்தி மாத்தி செய்ய நினைக்கிறவங்க, எல்லாருமே கலந்துக்கலாம். தோழிகளோட நானும் நடக்கற குழுவில் சேர்ந்திருந்தேன். அதுக்காக வாரா வாரம் குறைஞ்சது ஒரு மணி நேரம் பயிற்சி செய்தோம். அதிலும் 10000 பேர் சேர்ந்திருந்தாங்க. அதைப் பற்றி எழுதப் புகுந்தா அது இன்னொரு பதிவாயிடும்! அதனால இதோட நிறுத்திக்கிறேன்!
எதுக்கு சொல்ல வந்தேன்னா, அதுல சேர்ந்ததால ரொம்ப தூரம் நடக்கறது பற்றி, அதுக்கு எப்படி தயாராகணும், அப்படிங்கிறது பத்தில்லாம் வாசிக்க நேர்ந்தது, உதவியா இருந்தது. அது முடிஞ்ச பிறகு, எங்க வீட்டுக்கு முன்னாடி பதிச்சிருக்கிற சரளைக்கல்லில், தினமும் அரை மணி நேரம் வெறுங் கால்ல நடந்து பழகினேன்.
சூடான மணல்ல நடந்தாலும், இந்த மாதிரி சரளைக்கல்லில் நடந்தாலும் பாதம் கடினமாயிடுமாம். அப்படி ஆகிட்டா கொப்பளம் வர்றது மாதிரியான பிரச்சனைகளை தவிர்க்கலாம். அப்படியும் எனக்கு தவிர்க்க முடியலைங்கிறது வேற விஷயம் :)
சரி… விட்ட இடத்துக்கு போவோம், வாங்க!
தெரிஞ்ச சாமி பாட்டு, ஸ்லோகம், பஜனை, இப்படி பாடிக்கிட்டே நடந்தோம். இந்த மாதிரி பயணத்தின் போது நிறைய பாட்டு கோஷ்டிகளை பார்க்கலாம். ரொம்ப நல்லா பாடறவங்க நிறைய இருக்காங்க. அவங்களுக்கு பாட்டெல்லாம் மனப்பாடமாவும் தெரியும். அவங்க பாடப் பாட, கூட்டமெல்லாம் ‘ஓம் நமசிவாய’ அல்லது ‘ஓம் சக்தி’ அல்லது ‘அரோகரா’ இப்படி பாட்டுக்குத் தகுந்த மாதிரி கோரஸ் பாடிக்கிட்டே நடக்கும். அந்த மாதிரி பாடல்கள் பொதுவாகவே ஒரு வேகத்தோட இருக்கும். அதை பாடும் போது நம்ம நடையும் தன்னால வேகம் எடுத்துரும்! ரொம்ப அருமையான அனுபவம் அது!
நாம சோர்ந்து போகிற சமயங்களில் அவளே அனுப்பி வச்ச மாதிரி எப்படியோ யாராச்சும் வந்து சேருவாங்க, அவ்ளோதான் வா, வான்னு சொல்லி பாட்டுப் பாடியே கூட்டிட்டு போயிடுவாங்க! இந்த மாதிரி முந்தைய வருஷங்களில் எனக்கே நிறைய நடந்திருக்கு.
எங்களுக்கு தெரிஞ்ச பாட்டெல்லாம் பாடி முடிச்சாச்சு. ரோடில் கல்லு ரொம்பவே குத்த ஆரம்பிச்சது. என் தங்கை, “செருப்பை வேணா போட்டுக்கோடி, போட்டுக்கோடி”, அப்படின்னு சொல்லிக்கிட்டே இருந்தா.
எனக்கு இளையவளா இருந்தாலும் எங்க சின்னக் குழுவிற்கு அவதான் தலைவி! நல்லா பேசுவா, ரொம்ப சமர்த்து! ‘நீ மட்டும் எம்.பி.ஏ. படிச்சிருந்தா சூப்பர் மானேஜரா இருந்திருப்பேடி’ன்னு சொல்வேன்! எங்க கூட நடந்த தோழி ஏற்கனவே ஷு போட்டிருந்தா. சரி, இவ வேற ரொம்ப சொல்றா, வீட்லயும் ‘ஆமா, செருப்பு போட்டுக்கிட்டேன்’னு உண்மை(!) சொல்லணுமே, அப்படிங்கிற எண்ணத்தில் நானும் போட்டுக்கிட்டேன்…
இப்படி கொஞ்சம் மெதுவா நடந்துக்கிட்டிருந்த போது, தனியா நடந்திட்டிருந்த ஒருத்தர், ‘அரோகரா போடறீங்களா, வாங்க வாங்க’ன்னு சொல்லி, ‘அப்பனுக்கு… அரோகரா’ன்னு ஆரம்பிச்சு வேகமா முருகனோட பேர்களை சொல்லிக்கிட்டே போனார்… நாங்களும் உற்சாகமா அரோகரா போட்டுக்கிட்டு, அவரோட ஓரளவு வேகமாகவே நடந்தோம்.
இந்த மாதிரி பாட்டு கோஷ்டிகள் ரயில் சிநேகம் மாதிரி. முடிஞ்ச வரைக்கும் கொஞ்ச தூரம் அவங்களோட ஓடிட்டு, முடியலைன்னா பின் தங்கி நம்ம மெது நடைக்கு மாறிடுவோம்! ஆனா போன முறை நடந்த போது, அப்படி ரயில் சிநேகமா இல்லாம தொடர்ந்த சிநேகமாவே, ஒரு பாட்டு குழுவினரின் அறிமுகம் கிடைச்சது.
செந்தில் – வருஷா வருஷம் ‘இச்சடி’ங்கிற இடத்தில், நண்பர்களோட சேர்ந்து பாத யாத்திரை செய்யறவங்களுக்கு அன்னதானம் செய்துட்டு வரார். நல்ல பாடகர். பத்மநாபன் – ரொம்ப அருமையா பாடுவார். எப்பவும் ஏதாச்சும் பாடிக்கிட்டே இருப்பார். அருமையான குரல். இவரை நீங்க விஜய் டி.வி.ல சூப்பர் சிங்கரில் பார்த்திருக்கலாம்! என்ன, என் அம்மன் பாடல்களுக்கு இசையமைச்சு பாடறேன், பாடறேன்னு, இது வரை சொல்லிக்கிட்டே இருக்கார்! அடுத்தது ஷண்முகம் – இவரும் நல்லா பாடுவார். கண்ணதாசன் பாடல்கள், மற்றும் எந்த பாடலா இருந்தாலும் பிடிச்சிருந்தா வரிகளை உடனே மனப்பாடம் செய்துடுவார்! யாரையாச்சும் ஓட்டிக்கிட்டே இருப்பார் :) இவர் தன்னோட ஒரு வயசு குழந்தையை தூக்கிட்டு நடந்தார் இந்த வருஷம்.
இச்சடி, புதுக்கோட்டையிலிருந்து 12 கி.மி. அல்லது 18? - நினைவில்லை. அங்கே சாப்பிட வரணும்னு ஏற்கனவே செந்தில் அழைச்சிருந்தார். அரோகரா போட்டுக்கிட்டே நடந்துக்கிட்டிருந்த போது ‘இச்சடி’ங்கிற பெயர்ப் பலகையைப் பார்த்தோம். (அட, அதுக்குள்ள வந்திருச்சான்னு ஆச்சர்யமா இருந்தது. அப்ப ராத்திரி எட்டரைதான் இருக்கும்னு நினைக்கிறேன்.) எங்க கூட வந்தவர்கிட்ட “நாங்க கொஞ்ச நேரம் கழிச்சு வர்ரோம் அண்ணே”ன்னு சொல்லிட்டு, லைட்டெல்லாம் போட்டு ஜோரா சாப்பாடு நடந்துக்கிட்டிருந்த அந்த இடத்தில் நுழைஞ்சோம்.
செந்திலைக் கண்டுபிடிக்க கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு. சாம்பார் பத்தலைங்கிற டென்ஷன்ல இருந்தார்! இருந்தாலும் அந்த நேரத்திலும் எங்களை பார்த்து பேசி அன்பா சாப்பாடு பரிமாறி, கவனிச்சுக்கிட்டார். பத்மநாபன், அவர் குடும்பத்தை அறிமுகப்படுத்தினார். ஷண்முகத்தையும் அங்கேதான் பார்த்தோம். கணக்கு முடிச்சு சரி பண்ண ரொம்ப நேரம் ஆயிடும்கிறதால மறு நாளில் இருந்துதான் நடப்போம், அப்படின்னார் செந்தில். ஒரு வழியா அவங்ககிட்ட விடை பெற்றுக்கிட்டு மறுபடி கிளம்பிட்டோம்.
செருப்பு போட்டு நடக்கறது உறுத்தலா இருந்தது. பிடிக்கலை. அதனால கொஞ்ச நேரத்தில் மறுபடியும் கழற்றிட்டேன். சாதாரணமா ஒரு மணி நேரத்துக்கு 4 அல்லது 5கி.மீ. நடக்கலாம். நாங்களும் கிட்டத்தட்ட அந்த மாதிரிதான் நடந்தோம், ஆரம்பத்தில்! 2 மணி நேரமெல்லாம் உட்காராம நடந்திருக்கோம். ஆனா லைட் தெரிஞ்சா போதும், அங்க கொஞ்சம் உட்காரலாமான்னு கெஞ்ச ஆரம்பிச்சிரும் காலு!
இப்படி நடந்துக்கிட்டிருந்த போது தோழி ஷூ தடுக்கி கீழே விழுந்துட்டா! முழங்கால்ல சிராய்ச்சு நல்ல காயமாயிடுச்சு. ரத்தமும் நிக்காம வந்துக்கிட்டே இருந்துச்சு. அந்த இடத்தில் சூரிதார் துணியே கொஞ்சம் கிழிஞ்சிடுச்சுன்னா பாருங்க! எங்களுக்கு கொஞ்சம் பயமாயிடுச்சு. எங்கேடா லைட் வரும், உட்காரலாம்னு பார்த்துக்கிட்டே போனோம். வலது பக்கத்தில்தான் ஒரு வீடு மாதிரி தெரிஞ்சது.
அங்க போனா, இரண்டு மூணு பைரவர்! வீட்டில் வளர்க்கறாங்க போல! அந்த வீட்டுக்காரரும் அவர் மனைவியும் வந்து அதையெல்லாம் தள்ளி போகச் சொன்னாங்க. உட்காருங்கன்னு சொல்லி உபசரிச்சாங்க. அங்கேயே வாசலில் உட்கார்ந்தோம். விஷயம் தெரிஞ்சு முதல் உதவி சாமான் ஏதும் வேணுமான்னு கேட்டாங்க. ஆனா தோழியே எல்லாம் வச்சிருந்தா. அதனால அவ வச்சிருந்த பொருட்களை வச்சு, காயத்தை சுத்தம் பண்ணி, மருந்து போட்டு கட்டினோம். வீட்டுக்காரங்களுக்கு நன்றி சொல்லிட்டு கிளம்பினோம்.
இந்த பயணத்தின் போது மட்டும் எங்கே, யார் வீட்டுக்கு போனாலும், அல்லது வழியில் என்ன தேவைப்பட்டாலும், எல்லோருமே அப்படி ஒரு அன்பா, உதவி மனப்பான்மையோட நடந்துக்குவாங்க… கூட நடக்கிற பக்தர்களும் அப்படித்தான்… இது ஒரு மிக அருமையான உணர்வு… எப்பவுமே எல்லாருமே இப்படி இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்!
அதுக்கப்புறம் தோழியால ரொம்ப வேகமா நடக்க முடியல. இருந்தாலும் அமைதியாகவே நடந்து வந்தா… இப்படியாக நடந்து, ஒரு வழியா கந்தர்வ கோட்டைக்கு வந்து சேர்ந்தோம்! அங்கதான் அன்னிக்கு தங்கணும். தங்கற வீட்டை ஏற்கனவே அடையாளம் கேட்டு வச்சிருந்தோம். அதன்படி கேட்டுக் கேட்டு அந்த வீட்டுக்கு நாங்க போய் சேர்ந்தப்ப, காலை மணி ஆறரை!
(பயணம் தொடரும்…)
அன்புடன்
கவிநயா
Sunday, May 22, 2011
வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை - 1
மருந்தை தேனில் குழைச்சு சாப்பிடும் போது, கடைசியில் தேனின் தித்திப்பு மட்டுமே அடிநாக்கில் நிக்குமே, அது போலத்தான் வைத்தீஸ்வரன் கோவில் நடைப் பயணம்! நடந்து போய்ச் சேர்றதுக்குள்ள படற பாடு இருக்கே… அப்பப்பா! அப்படில்லாம் கஷ்டப்படும் போது, ‘போதும், போதும், இனிமே இப்படி நடக்க முடியாது, வேண்டிக்கக் கூடாது,’ அப்படின்னு தோணும்; ஆனா போய் சேர்ந்த பிறகு, அந்த சந்தோஷமும், நிறைவும் மட்டுமே மனசில் நிக்கும்; அந்த சமயத்தில் பார்த்தா, இன்னொரு முறையும் நடக்க மாட்டமான்னுதான் தோணும்!
கோவில்களுக்கு நடக்கறதில், கிரிவலம், திருப்பதி மலை ஏறுவது, இந்த மாதிரி சின்னச் சின்ன பயணங்கள் இருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்த ரெண்டு பெரிய நடைப் பயணங்கள் இருக்கு. ஒண்ணு பழனி, இன்னொண்ணு வைத்தீஸ்வரன் கோவில்.
தைப்பூசத்துக்கு போய்ச் சேர்ற மாதிரி பழனிக்கு நடப்பாங்க. வெயில் குறைவான காலம்கிறதால பகல், இராத்திரி, இப்படி எந்த நேரம் வேணும்னாலும் நடப்பாங்களாம். ஆனா வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சித்திரை மாசம் முதல் வாரம்தான் நடக்கறது. சரியான வெயில் காலம். அதனால பகல்ல ஓய்வு, இராத்திரிதான் நடை. முன்னெல்லாம் வை.கோவிலுக்கு காவடி எடுக்க மாட்டாங்க. இந்த முறை போனப்ப, சில காவடிகளையும் பாத்தேன். சில பேர் வருஷா வருஷம் நடப்பாங்க. சிலர், ஏதாவது வேண்டுதல் இருந்தால் மட்டும்… நானும், தங்கையும், இரண்டாவது வகை.
அந்தக் காலத்தில், எங்க கிராம பக்கங்கள்ல இருந்து வை. கோவிலுக்கு மாட்டு வண்டி கட்டிக்கிட்டு போகிற வழக்கம் இருந்திருக்கு. அதே பழக்கம் இப்பவும் தொடருது. கிட்டத்தட்ட 50-லிருந்து 60 வரை இரட்டை மாட்டு வண்டிகள் ஊரிலிருந்து வரும். நடக்கறவங்க இந்த வண்டிகளில் சேர்ந்துக்கலாம். தங்கற ஊர்களில் வண்டி ஏற்பாடு செய்யறவங்களே நாம தங்கறதுக்கு இடம் ஏற்பாடு செய்யறதோட, சாப்பாட்டுக்கும் வழி செய்துடுவாங்க. அதுக்கு சில வண்டிகளில் பணம் கட்டணும். இன்னும் சிலர் பக்தர்களுக்கு செய்யற சேவையாகவே செய்யறாங்க. தெரிஞ்சவங்களை, உறவினர்களை சும்மாவே சேர்த்துக்கறதும் உண்டு. இப்படி, என் தங்கை, அவள் தோழி, நானு, 3 பேர் எங்க உறவினர் வண்டி ஒண்ணுல சேர்ந்துக்கிட்டோம்.
தோழிக்கு முதல் வருஷம். எங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சூண்டு அனுபவம் இருக்கு… வருஷா வருஷம் நடக்கறவங்க நெறய உதவிக் குறிப்புகள் தருவாங்க. காலைத் தேய்ச்சு நடக்கக் கூடாது, முழு பாதத்தையும் நல்லா ஊணி நடக்கணும், அதாவது கொப்பளம் வந்தாலும், வர்ற அறிகுறி இருந்தாலும், நல்லா ஊணிதான் நடக்கணும்; அதுக்காக நொண்டி நடக்க ஆரம்பிச்சா வேற பிரச்சனைகள் வரும்… நடக்க நடக்க இடுப்பில் வலி வர ஆரம்பிக்கும், அதை தவிர்க்க ஒரு துண்டை இடுப்பில் இறுகக் கட்டிக்கணும், சாணத்தை மிதிச்சாலும் காலைத் தேய்க்கக்கூடாது… தேய்ச்சா உடனே கொப்பளிக்கும், அதோட சாணம் நல்ல மருந்து… இப்படி நாங்க முதல் வருஷம் போன போதே நிறைய சொல்லி தந்தாங்க…
கோவிலுக்கு போறதால வெறும் காலோட தான் நடக்கணும். ஆனா இப்பல்லாம் நிறைய பேர் ஷூவும், செருப்பும் போட்டு நடக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஏன்னா ரோடு அவ்வளவு மோசம்! எனக்கும் காலில் சில பல பிரச்சனைகள் இருந்ததால, செருப்பு போட்டு நடக்கறதுன்னா நட, இல்லன்னா வேண்டாம், அப்படிங்கிற அளவு வீட்டில் கண்டிப்பு. நடை கான்சல் ஆயிடுமோங்கிற பயத்தில், நானும் சமர்த்தா ஒரு ஜோடி செருப்பு வாங்கி எடுத்துக்கிட்டேன்!
அப்புறம் முக்கியமா, ஆளுக்கொரு கம்பு. தங்கையும் நானும் முந்தைய வருஷங்கள்ல பயன்படுத்திய கம்பு பூஜை அறையிலேயே வச்சிருந்ததை எடுத்துக்கிட்டோம். தோழிக்கு புதுசா ஒண்ணு வாங்கியாச்சு.
கம்புக்கு ரெண்டு வேலை. இராத்திரியில் நடக்கறதால, நாம தட்டிக்கிட்டே நடக்கும் போது விஷ ஜந்துக்கள் ஏதாச்சும் வந்தாலும், ஓடிடும். நம்மால நடக்க முடியாம சோர்ந்து போகும் போது, கம்புதான் நமக்கு இன்னொரு கால், நம்மோட துணை. கம்புக்கு பூ சுத்தி, கும்பிட்டு, எடுத்துக்கிட்டு போவாங்க. இப்பல்லாம் வழியெல்லாம் லைட் போட்டுதான் இருக்காங்க. ஆனாலும் சுத்தமா விளக்கில்லாத இடங்களும் நிறைய்யவே இருக்கு…
சிலர் கிராமத்திலிருந்து சித்திரை முதல் புதனில் ஆரம்பிச்சு 6 நாள் நடந்து, அடுத்த செவ்வாய் வை.கோவில் போய் சேருவாங்க. நாங்க புதுக்கோட்டையில் முதல் வியாழன் (ரெண்டாவது நாள்) ஆரம்பிச்சு, 5 நாள் நடந்து அதே செவ்வாய் அன்னிக்கு கோவிலுக்கு போவோம்.
முந்தியெல்லாம் கூட்டம் குறைச்சலா இருக்கறப்ப, முதல்ல போறவங்கள்லாம் வைத்தீஸ்வரன் கோவில் எல்லையில், எல்லாரும் வந்து சேர்ற வரை காத்திருப்பாங்களாம்; எல்லாரும் வந்த பிறகுதான் ஒண்ணா உள்ளே போவாங்களாம்… இப்பல்லாம் அப்படி இல்லை. கிட்டத்தட்ட 50,000 பேர் நடக்கும் போது, எப்படி கணக்கு வச்சிக்கறது, யாருக்குன்னு காத்திருக்கறது?
புதுக்கோட்டையில் மச்சுவாடிங்கிற இடத்தில் விபூதி கொடுப்பாங்க. அதை வாங்கிக்கிட்டுதான் புறப்படணும். அந்த வியாழக்கிழமை சாயந்திரம் 5 மணி போல நாங்க தங்கி இருந்த வீட்டில் குளிச்சு, சாமி கும்பிட்டு புறப்பட்டோம். அங்கேருந்து மச்சுவாடிக்கு நடந்து வந்து, வரிசையில் நின்னு விபூதி வாங்கிக்கிட்டோம். நாங்க சேர்ந்துக்கிட்ட வண்டி எங்கே நிக்குதுன்னு கண்டு பிடிச்சு, அங்கே போனோம். அதுக்கே புதுக்கோட்டை எல்லையைத் தாண்டி வர வேண்டியதாயிடுச்சு! அவங்ககிட்ட ஹலோ சொல்லி, ஆளுக்கு ரெண்டு இட்லி சாப்பிட்டு, கம்பு எடுத்துக்கிட்டு கிளம்பியாச்சு!
கம்பு மட்டுமில்லாம, ஆளுக்கொரு தோள் பை வச்சிருந்தோம். அதில் தண்ணி, கொஞ்சம் குளுகோஸ் மாதிரியான சமாசாரங்கள், உட்கார்ற விரிப்பு, கை விளக்கு, தொலைபேசி, முதல் உதவி சாமான்கள், முக்கியமா ஐயோடெக்ஸ், மூவ், இது ரெண்டும்!
புதுக்கோட்டையில் கிளம்பினதிலிருந்து வழியெல்லாம் பிஸ்கெட், பூ, பழம், மிட்டாய், மஞ்சள் குங்குமம், இப்படி வரிசையா யாராச்சும் குடுத்துக்கிட்டே இருந்தாங்க. நல்ல வேளையா ஒருத்தங்க ஒரு பை கூட கொடுத்தாங்க! அதுக்குள்ள எல்லாம் போட்டாச்சு. ஆனா சொமைதான் இப்ப ரெண்டு ஆயிடுச்சு!
ஒரு வழியா எல்லா கசமுசாவும் முடிஞ்சு, அமைதியாயிடுச்சு. ஊரைத் தாண்டியாச்சு. இப்ப நாங்க 3 பேரு மட்டும்தான். இருட்டிடுச்சு.
“விநாயகர் அகவல் சொல்லலாமா” அப்படின்னு “சீதக்களப” ஆரம்பிச்சு சொல்லிக்கிட்டே நடந்தோம்…
(பயணம் தொடரும்)
பி.கு.: முடிஞ்ச வரை சீக்கிரமே கோவில்ல கொண்டு போய் சேர்த்திடறேன்… :)
அன்புடன்
கவிநயா
கோவில்களுக்கு நடக்கறதில், கிரிவலம், திருப்பதி மலை ஏறுவது, இந்த மாதிரி சின்னச் சின்ன பயணங்கள் இருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்த ரெண்டு பெரிய நடைப் பயணங்கள் இருக்கு. ஒண்ணு பழனி, இன்னொண்ணு வைத்தீஸ்வரன் கோவில்.
தைப்பூசத்துக்கு போய்ச் சேர்ற மாதிரி பழனிக்கு நடப்பாங்க. வெயில் குறைவான காலம்கிறதால பகல், இராத்திரி, இப்படி எந்த நேரம் வேணும்னாலும் நடப்பாங்களாம். ஆனா வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சித்திரை மாசம் முதல் வாரம்தான் நடக்கறது. சரியான வெயில் காலம். அதனால பகல்ல ஓய்வு, இராத்திரிதான் நடை. முன்னெல்லாம் வை.கோவிலுக்கு காவடி எடுக்க மாட்டாங்க. இந்த முறை போனப்ப, சில காவடிகளையும் பாத்தேன். சில பேர் வருஷா வருஷம் நடப்பாங்க. சிலர், ஏதாவது வேண்டுதல் இருந்தால் மட்டும்… நானும், தங்கையும், இரண்டாவது வகை.
அந்தக் காலத்தில், எங்க கிராம பக்கங்கள்ல இருந்து வை. கோவிலுக்கு மாட்டு வண்டி கட்டிக்கிட்டு போகிற வழக்கம் இருந்திருக்கு. அதே பழக்கம் இப்பவும் தொடருது. கிட்டத்தட்ட 50-லிருந்து 60 வரை இரட்டை மாட்டு வண்டிகள் ஊரிலிருந்து வரும். நடக்கறவங்க இந்த வண்டிகளில் சேர்ந்துக்கலாம். தங்கற ஊர்களில் வண்டி ஏற்பாடு செய்யறவங்களே நாம தங்கறதுக்கு இடம் ஏற்பாடு செய்யறதோட, சாப்பாட்டுக்கும் வழி செய்துடுவாங்க. அதுக்கு சில வண்டிகளில் பணம் கட்டணும். இன்னும் சிலர் பக்தர்களுக்கு செய்யற சேவையாகவே செய்யறாங்க. தெரிஞ்சவங்களை, உறவினர்களை சும்மாவே சேர்த்துக்கறதும் உண்டு. இப்படி, என் தங்கை, அவள் தோழி, நானு, 3 பேர் எங்க உறவினர் வண்டி ஒண்ணுல சேர்ந்துக்கிட்டோம்.
தோழிக்கு முதல் வருஷம். எங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சூண்டு அனுபவம் இருக்கு… வருஷா வருஷம் நடக்கறவங்க நெறய உதவிக் குறிப்புகள் தருவாங்க. காலைத் தேய்ச்சு நடக்கக் கூடாது, முழு பாதத்தையும் நல்லா ஊணி நடக்கணும், அதாவது கொப்பளம் வந்தாலும், வர்ற அறிகுறி இருந்தாலும், நல்லா ஊணிதான் நடக்கணும்; அதுக்காக நொண்டி நடக்க ஆரம்பிச்சா வேற பிரச்சனைகள் வரும்… நடக்க நடக்க இடுப்பில் வலி வர ஆரம்பிக்கும், அதை தவிர்க்க ஒரு துண்டை இடுப்பில் இறுகக் கட்டிக்கணும், சாணத்தை மிதிச்சாலும் காலைத் தேய்க்கக்கூடாது… தேய்ச்சா உடனே கொப்பளிக்கும், அதோட சாணம் நல்ல மருந்து… இப்படி நாங்க முதல் வருஷம் போன போதே நிறைய சொல்லி தந்தாங்க…
கோவிலுக்கு போறதால வெறும் காலோட தான் நடக்கணும். ஆனா இப்பல்லாம் நிறைய பேர் ஷூவும், செருப்பும் போட்டு நடக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஏன்னா ரோடு அவ்வளவு மோசம்! எனக்கும் காலில் சில பல பிரச்சனைகள் இருந்ததால, செருப்பு போட்டு நடக்கறதுன்னா நட, இல்லன்னா வேண்டாம், அப்படிங்கிற அளவு வீட்டில் கண்டிப்பு. நடை கான்சல் ஆயிடுமோங்கிற பயத்தில், நானும் சமர்த்தா ஒரு ஜோடி செருப்பு வாங்கி எடுத்துக்கிட்டேன்!
அப்புறம் முக்கியமா, ஆளுக்கொரு கம்பு. தங்கையும் நானும் முந்தைய வருஷங்கள்ல பயன்படுத்திய கம்பு பூஜை அறையிலேயே வச்சிருந்ததை எடுத்துக்கிட்டோம். தோழிக்கு புதுசா ஒண்ணு வாங்கியாச்சு.
கம்புக்கு ரெண்டு வேலை. இராத்திரியில் நடக்கறதால, நாம தட்டிக்கிட்டே நடக்கும் போது விஷ ஜந்துக்கள் ஏதாச்சும் வந்தாலும், ஓடிடும். நம்மால நடக்க முடியாம சோர்ந்து போகும் போது, கம்புதான் நமக்கு இன்னொரு கால், நம்மோட துணை. கம்புக்கு பூ சுத்தி, கும்பிட்டு, எடுத்துக்கிட்டு போவாங்க. இப்பல்லாம் வழியெல்லாம் லைட் போட்டுதான் இருக்காங்க. ஆனாலும் சுத்தமா விளக்கில்லாத இடங்களும் நிறைய்யவே இருக்கு…
சிலர் கிராமத்திலிருந்து சித்திரை முதல் புதனில் ஆரம்பிச்சு 6 நாள் நடந்து, அடுத்த செவ்வாய் வை.கோவில் போய் சேருவாங்க. நாங்க புதுக்கோட்டையில் முதல் வியாழன் (ரெண்டாவது நாள்) ஆரம்பிச்சு, 5 நாள் நடந்து அதே செவ்வாய் அன்னிக்கு கோவிலுக்கு போவோம்.
முந்தியெல்லாம் கூட்டம் குறைச்சலா இருக்கறப்ப, முதல்ல போறவங்கள்லாம் வைத்தீஸ்வரன் கோவில் எல்லையில், எல்லாரும் வந்து சேர்ற வரை காத்திருப்பாங்களாம்; எல்லாரும் வந்த பிறகுதான் ஒண்ணா உள்ளே போவாங்களாம்… இப்பல்லாம் அப்படி இல்லை. கிட்டத்தட்ட 50,000 பேர் நடக்கும் போது, எப்படி கணக்கு வச்சிக்கறது, யாருக்குன்னு காத்திருக்கறது?
புதுக்கோட்டையில் மச்சுவாடிங்கிற இடத்தில் விபூதி கொடுப்பாங்க. அதை வாங்கிக்கிட்டுதான் புறப்படணும். அந்த வியாழக்கிழமை சாயந்திரம் 5 மணி போல நாங்க தங்கி இருந்த வீட்டில் குளிச்சு, சாமி கும்பிட்டு புறப்பட்டோம். அங்கேருந்து மச்சுவாடிக்கு நடந்து வந்து, வரிசையில் நின்னு விபூதி வாங்கிக்கிட்டோம். நாங்க சேர்ந்துக்கிட்ட வண்டி எங்கே நிக்குதுன்னு கண்டு பிடிச்சு, அங்கே போனோம். அதுக்கே புதுக்கோட்டை எல்லையைத் தாண்டி வர வேண்டியதாயிடுச்சு! அவங்ககிட்ட ஹலோ சொல்லி, ஆளுக்கு ரெண்டு இட்லி சாப்பிட்டு, கம்பு எடுத்துக்கிட்டு கிளம்பியாச்சு!
கம்பு மட்டுமில்லாம, ஆளுக்கொரு தோள் பை வச்சிருந்தோம். அதில் தண்ணி, கொஞ்சம் குளுகோஸ் மாதிரியான சமாசாரங்கள், உட்கார்ற விரிப்பு, கை விளக்கு, தொலைபேசி, முதல் உதவி சாமான்கள், முக்கியமா ஐயோடெக்ஸ், மூவ், இது ரெண்டும்!
புதுக்கோட்டையில் கிளம்பினதிலிருந்து வழியெல்லாம் பிஸ்கெட், பூ, பழம், மிட்டாய், மஞ்சள் குங்குமம், இப்படி வரிசையா யாராச்சும் குடுத்துக்கிட்டே இருந்தாங்க. நல்ல வேளையா ஒருத்தங்க ஒரு பை கூட கொடுத்தாங்க! அதுக்குள்ள எல்லாம் போட்டாச்சு. ஆனா சொமைதான் இப்ப ரெண்டு ஆயிடுச்சு!
ஒரு வழியா எல்லா கசமுசாவும் முடிஞ்சு, அமைதியாயிடுச்சு. ஊரைத் தாண்டியாச்சு. இப்ப நாங்க 3 பேரு மட்டும்தான். இருட்டிடுச்சு.
“விநாயகர் அகவல் சொல்லலாமா” அப்படின்னு “சீதக்களப” ஆரம்பிச்சு சொல்லிக்கிட்டே நடந்தோம்…
(பயணம் தொடரும்)
பி.கு.: முடிஞ்ச வரை சீக்கிரமே கோவில்ல கொண்டு போய் சேர்த்திடறேன்… :)
அன்புடன்
கவிநயா
Sunday, May 15, 2011
நலந்தானே?
சித்திரை வெயில் வீணாகாம ஊர் சுத்திட்டு வந்தாச்!
வைத்தீஸ்வரன் கோயில் பாத யாத்திரைக்குதான் போனேன். ஆனாலும் வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் தொடங்கி, மயிலை கற்பகாம்பாள், வைத்தீஸ்வரன் கோயில், சிதம்பரம் நடராஜர், தில்லை காளி, கடலூர் பாடலீஸ்வரர், மயிலாப்பூர் சாயிபாபா, ஸ்ரீராமகிருஷ்ணா மடம், துர்கா கோயில், பிரத்தியங்கிரா கோயில், காஞ்சி காமாக்ஷி, காஞ்சி வரதராஜர், எங்க ஊர் மீனாக்ஷி, குலதெய்வம் கோயில், மதுரை மீனாக்ஷி, திருப்பரங்குன்றம், இப்படி எல்லாக் கோயிலும் சுத்திட்டு, மறுபடி வீட்டு பக்கத்தில் இருக்க பிள்ளையாருக்கு போய் ‘டாடா’ சொல்லிட்டு வந்துட்டேன்!
போகணும்னு நினைச்சு போகாமல் இருக்கிற கோயில்கள் இன்னும் எவ்வளவோ இருக்கு… பார்க்கலாம்… ஒரு வருத்தமான விஷயம் என்னன்னா, சில கோயில்களில் காசை கண்ல படறாப்ல வச்சிருந்தாதான் விபூதி குங்குமமே தர்றாங்க :(
வந்தவுடனே எங்க நடனப்பள்ளி ஆண்டு விழா வேலைகளில் முழுகிட்டதால, விலாவரியா ஒண்ணும் எழுத முடியல. சீக்கிரம் வரேன்…
முக்கியமான விஷயத்தை மறந்துட்டேனே! மதுரையில் இந்த வாட்டி ஒரு வழியா ஜிகிர்தண்டாவை ருசி பாத்தாச்!
அன்புடன்
கவிநயா
வைத்தீஸ்வரன் கோயில் பாத யாத்திரைக்குதான் போனேன். ஆனாலும் வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் தொடங்கி, மயிலை கற்பகாம்பாள், வைத்தீஸ்வரன் கோயில், சிதம்பரம் நடராஜர், தில்லை காளி, கடலூர் பாடலீஸ்வரர், மயிலாப்பூர் சாயிபாபா, ஸ்ரீராமகிருஷ்ணா மடம், துர்கா கோயில், பிரத்தியங்கிரா கோயில், காஞ்சி காமாக்ஷி, காஞ்சி வரதராஜர், எங்க ஊர் மீனாக்ஷி, குலதெய்வம் கோயில், மதுரை மீனாக்ஷி, திருப்பரங்குன்றம், இப்படி எல்லாக் கோயிலும் சுத்திட்டு, மறுபடி வீட்டு பக்கத்தில் இருக்க பிள்ளையாருக்கு போய் ‘டாடா’ சொல்லிட்டு வந்துட்டேன்!
போகணும்னு நினைச்சு போகாமல் இருக்கிற கோயில்கள் இன்னும் எவ்வளவோ இருக்கு… பார்க்கலாம்… ஒரு வருத்தமான விஷயம் என்னன்னா, சில கோயில்களில் காசை கண்ல படறாப்ல வச்சிருந்தாதான் விபூதி குங்குமமே தர்றாங்க :(
வந்தவுடனே எங்க நடனப்பள்ளி ஆண்டு விழா வேலைகளில் முழுகிட்டதால, விலாவரியா ஒண்ணும் எழுத முடியல. சீக்கிரம் வரேன்…
முக்கியமான விஷயத்தை மறந்துட்டேனே! மதுரையில் இந்த வாட்டி ஒரு வழியா ஜிகிர்தண்டாவை ருசி பாத்தாச்!
அன்புடன்
கவிநயா
Subscribe to:
Posts (Atom)