Sunday, October 23, 2011

தீபாவளி பார்ட்டி!

அனைவருக்கும் அன்பான, இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!



ன் கண்ணையே என்னால நம்ப முடியல! இவங்க கூட சேர மாட்டமான்னு எல்லாரும் ஏங்கற கூட்டத்தில இருந்து எனக்கு அழைப்பு! உடனே சரின்னு சொல்லி மெயில் அனுப்பத்தான் கை பரபரத்தது. இருந்தாலும் கொஞ்சம் நிதானிச்சேன். என்னதான் இவங்க பிரபலமா இருந்தாலும், இவங்களோடல்லாம் நம்மால ஒட்ட முடியுமா, ஒரு அஞ்சு நிமிஷம் சேர்ந்தாப்ல பேச முடியுமா, இப்படில்லாம் ஓடிச்சு நெனப்பு. ராத்திரி பூரா குழப்பிக்கிட்ட பிறகு, என் பெஸ்ட் ப்ரெண்டை கூப்பிட்டு பேசினேன்.

என்ன பார்ட்டி, என்ன ஏது, அப்படி, இப்படின்னு பாட்டி மாதிரி விசாரிச்சப்புறம், “போய்த்தான் பாரேன். உன்னை என்ன கடிச்சா தின்னப் போறாங்க? ஒத்து வந்தா நட்பை தொடர்ந்துக்கோ, இல்லைன்னா அடுத்த முறை கத்தரிச்சிடு. அவ்ளோதானே?”, அப்படின்னா. அவகிட்ட பேசினாலே எல்லா விஷயத்தையும் எப்படியோ சுலபமாக்கிடுவா! “நீ சைக்காலஜி படிச்சுட்டு கவுன்சிலரா போயேண்டி”, அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்கேன், அவகிட்ட!

அன்னிக்கு ராத்திரியே அவங்க தந்த போன் நம்பர்ல கூப்பிட்டு பேசினேன். ஏதாச்சும் சமையல் செய்து கொண்டு வரவான்னு கேட்டேன். “அதெல்லாம் வேண்டாம்ப்பா. சும்மா ஜாலியா வா. தீபாவளி பார்ட்டி. வெளியதான் சாப்பிட போறோம்”, அப்படின்னாங்க.

ஹ்ம், இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. என்ன ட்ரஸ் போட்டுக்கலாம்? தீபாவளிங்கிறதால சேலை, சூரிதார், இப்படி போட்டுக்கிட்டு போனாதான் இலட்சணமா இருக்கும். எங்கிட்ட இருக்க துணிமணிங்களை கெளறி பார்த்துட்டு, கடைசியில கொஞ்சம் எளிமையா, அதே சமயம் கொஞ்சம் பளிச்சுன்னு இருக்கிற சூரிதாரை தேர்வு செஞ்சு வச்சேன்.

அந்த நாளும் வந்தது. தலை குளிச்சு அழகா சூரிதாரை போட்டுகிட்டு, அதுக்கேத்தாப் போல வளையல் போட்டு, பொட்டு வச்சிக்கிட்டேன். கண்ணாடி பார்த்தப்போ எனக்கே “பரவாயில்லையே”ன்னு தோணுச்சின்னா பாருங்க!

படபடக்கிற மனசோட பார்ட்டிக்கு போனேன். தீபாவளி பார்ட்டிங்கிறதால பட்டாசு மத்தாப்பெல்லாம் இருக்குமோ?

ஒரு ரெஸ்டாரண்ட்லதான் சந்திப்பு ஏற்பாடாகி இருந்தது. அமெரிக்காவில் அதுக்கா பஞ்சம்? உள்ளே போனதும் பார்த்தா, பத்து பேர்ல ஒருத்தி கூட சூரிதார்லயோ, சேலையிலையோ இல்லை! எல்லாரும் அழகிப் போட்டிக்கு வந்தாப்ல அமெரிக்க பாணியில் ட்ரஸ் பண்ணியிருந்தாங்க. நான் மட்டுந்தான் சூரிதார்! என்ன பண்றதுன்னே தெரியல. போச்சு, இன்னிக்கு நெகெட்டிவ் மார்க்தான்ன்னு நினைச்சுக்கிட்டே ஒரு சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தேன்.

பக்கத்தில் இருந்த பொண்ணு சொன்னா, “சூரிதார்ல நீ ரொம்ப அழகா இருக்கே. எங்கே வாங்கினது? இந்தியா போயிருந்தியா?”

நான் பதில் சொல்றதுக்குள்ள சர்வர் வந்துட்டா. “குடிக்கிறதுக்கு என்ன வேணும்?”

ஒவ்வொருத்தரா சொல்ல ஆரம்பிச்சாங்க –

“பியர்”

“ரெட் வைன்”

“வைட் வைன்”

என் முறை வந்தது. “டயட் பெப்சி”.

எல்லாருடைய ஒரு மாதிரியான பார்வையையும் என் மேல உணர முடிஞ்சது.

சர்வர் அந்த பக்கம் போன பிறகு அறிமுகப் படலம் ஆரம்பிச்சது.

“உமா ஃப்ரம் இண்டியா. நான் மேல்படிப்புக்காக இங்கே வந்திருக்கேன்.”

“சரளா ஃப்ரம் இண்டியா. நான் ரிஸர்ச்சுக்காக.”

“கலா. என் கம்பெனி ப்ராஜக்டுக்காக இந்தியால இருந்து வந்திருக்கேன்”.

எல்லாரும் சொல்லி முடிச்சதும் என்னோட முறை.

“நான் ரேச்சல், ஃப்ரம் நியூயார்க். போஸ்ட் க்ராஜுவேட் பண்ண வந்திருக்கேன்”.


--கவிநயா


பி.கு.1. ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி எழுதியது.

பி.கு.2. கதையில் கலந்திருக்கிற அளவுக்கதிகமான ஆங்கிலத்தை மன்னிக்கவும். கதையில் தன்மை காரணமா நல்ல தமிழில் எழுதினா சரியா இருக்காதுன்னு தோணுச்சு! :)

பி.கு.3. என்னோட கண்ணு கொஞ்ச நாளாவே 'நான் இருக்கேன், என்னைக் கவனி', அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்கு.  கணினி பயன்பாட்டைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதால்...  'நினைவின் விளிம்பில்...', ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் தொடரும்...

28 comments:

  1. அழகாக எழுத்தாக்கியிருக்கீங்க....:-)

    கண்களை முதலில் கவனிங்க கவிக்கா.

    ReplyDelete
  2. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்:)

    Party is good only! நல்ல "ரசமான" பார்ட்டி தானே! அப்பறம் என்ன?:)

    //ன்னோட கண்ணு கொஞ்ச நாளாவே 'நான் இருக்கேன், என்னைக் கவனி', அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்கு//

    என்னாச்சு-க்கா?
    கண்ணைப் பார் - சிரி:)

    ReplyDelete
  3. நமது சமுதாயத்தின் பண்பாடும் கலாசாரமும் மொழியும் உணர்வுகளும், ஏன் ? உணவும், அதை
    உண்ணுகின்ற முறையும், எண்ணங்களும், எதிர்பார்ப்புகளும் கடந்த பல ஆண்டுகளாகவே சிதைந்து என‌
    சொல்லாவிடினும் ஒரு வகையாக உருமாறித்தான் போய்க்கொண்டிருக்கின்றன. இந்த மாற்றங்களை
    எவல்யூஷன் என்று சொல்வதா ரிவல்யூஷன் என்று சொல்வதா என்றே தெரியவில்லை.

    தன்னை மகிழ்விக்கும் புற சாதனங்களை நோக்கிப் படையெடுத்தோடும் மேலை நாட்டு கலாசாரத்தின்
    பாதிப்பால், இன்றைய நாட்களில் தாய் தந்தை , மனைவி-கணவன் , பெற்றெடுத்த பிள்ளைகள் நம்மை
    நோக்கும் விதங்களில் ஒரு விதமான விரிசல் ஏற்பட்டு உள்ளது வெள்ளிடை மலை.

    வைன், பீர் பருகுவதை ஒரு ஃபாஷன் சின்னமாக கருதவும், அதை விலக்குபவர்களை ஒரு ஏளனமாகப்
    பார்ப்பதையும் அன்றாட சமூக வாழ்க்கையில் பார்க்கையில், ......

    நாம் எங்கே போகிறோம் ?

    சுப்பு ரத்தினம்.
    பி.கு. இதை டைப் செய்யும்பொழுது எங்கள் வீட்டு டி.வியில் " நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட‌
    மனிதரை நினைந்துவிட்டால் " எனும் பாடல் கேட்கிறேன். ஐ அம் நாட் ஜோகிங்.

    ReplyDelete
  4. தீபாவளி பார்ட்டி நல்லாயிருந்தது:)! உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!

    கண்ணைக் கவனியுங்கள். நல்ல தேறியதும் மீண்டும் தொடருங்கள். காத்திருக்கிறோம்:)!

    ReplyDelete
  5. // ஃப்ரம் நியூயார்க்//

    - இதை எதிர் பார்க்கவே இல்லை...

    கண்ணை பார்த்துக் கொள்ளுங்கள்...

    சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு, மீண்டும் வாருங்கள்...

    ReplyDelete
  6. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்கா ;-))

    பி.கு 3வதை நாங்க கவனிக்கிறமோ இல்லையோ நீங்க முதல்ல கவனியுங்கள் ;-)

    ReplyDelete
  7. தீபாவளி வாழ்த்துக்கள்.

    பெரிதாக ஒன்றும் இருக்காது; இருந்தாலும் கண் விஷயத்தில்
    கவனம் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  8. பார்ட்டியிலே பங்கெடுக்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றிட்டீங்களே! நமக்கெல்லாம் ஒத்துவராத பார்ட்டி; ஆனால் அதே சமயம் இதுவே சுடும் உண்மையும் கூட. பல சம்பவங்களையும் நேரில் காணும் பேறும் பெற்றிருக்கிறேன்.

    உங்கள் கண்கள் விரைவில் குணமடைந்து மீண்டும் பதிவுகள் எழுத வரப் பிரார்த்திக்கிறோம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. //அழகாக எழுத்தாக்கியிருக்கீங்க....:-)//

    நன்றி மௌலி :)

    ReplyDelete
  10. //Party is good only! நல்ல "ரசமான" பார்ட்டி தானே! அப்பறம் என்ன?:)//

    அதிசயமா இருக்கு கண்ணன் வருகை?! ரசமான பார்ட்டி என்பதுதான் பிரச்சனை :) வருகைக்கு நன்றிப்பா.

    ReplyDelete
  11. வாங்க சுப்பு தாத்தா. உங்களையும் வெகு நாள் கழித்து இங்கே பார்க்கிறேன். உங்கள் ஆதங்கம் மிகவும் நியாயமானதே. நம் கையை மீறிப் போய்க் கொண்டிருக்கிற விஷயங்களில் இதுவும் ஒன்று :(

    வருகைக்கு நன்றி தாத்தா.

    ReplyDelete
  12. //தீபாவளி பார்ட்டி நல்லாயிருந்தது:)! உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!//

    நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  13. //- இதை எதிர் பார்க்கவே இல்லை...//

    :) நன்றி ஸ்வர்ணரேக்கா!

    ReplyDelete
  14. //இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்கா ;-))//

    நன்றி கோபி :)

    ReplyDelete
  15. //தீபாவளி வாழ்த்துக்கள்.//

    நன்றி ஜீவி ஐயா!

    ReplyDelete
  16. //பார்ட்டியிலே பங்கெடுக்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றிட்டீங்களே! நமக்கெல்லாம் ஒத்துவராத பார்ட்டி; ஆனால் அதே சமயம் இதுவே சுடும் உண்மையும் கூட. பல சம்பவங்களையும் நேரில் காணும் பேறும் பெற்றிருக்கிறேன்.//

    ஆம் அம்மா. வருத்தம் தரும் விஷயம்தான் :(

    வருகைக்கு நன்றி கீதாம்மா.

    ReplyDelete
  17. நலம் பெற வாழ்த்திய அனைவரின் அன்புக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  18. அடடா ! என் கண்ணே பட்டுடுத்து போலிருக்கே !? :((((

    நீங்கள் விரைவில் நலமாகி உங்கள் எழுத்து பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. கதைனு சொன்னாலும் நிதர்சனம் இன்னிக்கி இதுதான். ஒழுங்கான பழக்கவழக்கம் எல்லாமே பழைய பஞ்சாங்கத்துல சேர்க்கப்படர்து. எங்க ஊர்ல சொல்ற மாதிரி "பெருமைக்கு புள்ள பெத்துக்க முடியுமா?? "

    அக்காவோட கண்ணுக்கு என்ன ஆச்சு!! அதை முதல்ல கவனிங்கோ அக்கா!

    ReplyDelete
  20. தீபாவளி வாழ்த்துகள்

    கண்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  21. //உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.//

    நன்றி தானை தலைவி!

    //அடடா ! என் கண்ணே பட்டுடுத்து போலிருக்கே !? :((((//

    நல்ல கண்ணெல்லாம் 'படாது' :)

    //நீங்கள் விரைவில் நலமாகி உங்கள் எழுத்து பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்.//

    மிக்க நன்றி.

    ReplyDelete
  22. //கதைனு சொன்னாலும் நிதர்சனம் இன்னிக்கி இதுதான். ஒழுங்கான பழக்கவழக்கம் எல்லாமே பழைய பஞ்சாங்கத்துல சேர்க்கப்படர்து. எங்க ஊர்ல சொல்ற மாதிரி "பெருமைக்கு புள்ள பெத்துக்க முடியுமா?? "//

    தக்குடு சொன்னது ரொம்ப சரி!

    //அக்காவோட கண்ணுக்கு என்ன ஆச்சு!! அதை முதல்ல கவனிங்கோ அக்கா!//

    ஆகட்டும்ப்பா :) வருகைக்கு நன்றி தம்பி.

    ReplyDelete
  23. //தீபாவளி வாழ்த்துகள்

    கண்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்//

    மிக்க நன்றி திகழ்!

    ReplyDelete
  24. தீபாவளி பார்ட்டி அருமை

    ReplyDelete
  25. //கண்களை கவனிங்க கவி.//

    ஆகட்டும் இராஜராஜேஸ்வரி :)

    //தீபாவளி பார்ட்டி அருமை//

    மிக்க நன்றி!

    ReplyDelete
  26. miga arumayana sinthikka koodiya sirukathai

    ReplyDelete
  27. //miga arumayana sinthikka koodiya sirukathai//

    மிக்க நன்றி, அருள்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)