ஒரு உறவினரிடமோ அல்லது நண்பரிடமோ ஏதோ ஒரு காரணத்துக்காக நாம ரொம்ப கோபப் படறோம், சண்டை போடறோம்னு வச்சுக்குவோம். கோபம் வந்தாதான் நமக்கு கண்ணு மண்ணு எதுவும் தெரியாதே... அவர் மனம் புண்படும்படி, கண்டபடி வார்த்தைகளைக் கொட்டிடறோம். அன்றைக்கு சாயந்திரமே அந்த நண்பர் எதனாலோ திடீர்னு மரணம் அடைஞ்சுட்டார்னு சேதி வருது. அப்ப நமக்கு எப்படி இருக்கும்! நம்ம மனசு படக் கூடிய பாட்டையும், அந்த குற்ற உணர்வு காலமெல்லாம் நீட்டிப்பதையும் தவிர்க்க முடியுமா?
முடியும், நாம நினைச்சா... அதாவது, முதல்லயே அப்படியெல்லாம் கட்டுப்பாடில்லாம நடந்துக்கறதை, பேசறதை, கோவப்படறதைத் தவிர்த்தா, அதனோட பின் விளைவுகளையும் தவிர்க்கலாம்.
மரணம்.
அதைப் பார்த்தாலே, அடுத்த சில நாட்களுக்கு நம் மனசில் ஒரு பாதிப்பு இருக்கும். அது நம்ம நடவடிக்கைகளிலும் தெரியும். அதுவும் நமக்கு கொஞ்சம் நெருங்கியவர்களுடையதுன்னா, கேட்கவே வேண்டாம். வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது, அநித்தியமானது, அப்படின்னு யாரோ ‘சுளீர்’னு மண்டையில் அடிச்சு சொல்லிட்டுப் போன மாதிரி இருக்கும்.
நாளைக்கே… இல்லையில்லை… இன்றைக்கே நமக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என்ன ஆகும்? எத்தனை ஆசைகள், எத்தனை கோபங்கள், எத்தனை தாபங்கள், எத்தனை வருத்தங்கள், எல்லாம் குழம்பிய சேறு மாதிரி, நம்ம மனசின் அடியில் தங்கி விட்டவை. இவை எதுவுமே இல்லாம மனசு தெளிவா நிர்மலமான நீரோடை மாதிரி இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்!
ஆனா அது ஒரே நாளில் வரக் கூடிய விஷயமா என்ன? தினம் தினம் நம்மை, நம் செயல்களை, நம் உணர்வுகளை, நம் நினைவுகளை, இப்படி எல்லாத்தையும் நாமே கவனிச்சு, நம்மை நாமே பயிற்றுவிச்சுக்க வேண்டிய மிகப் பெரிய விஷயம் அது.
அந்தப் பெரிய விஷயத்தையும் கொஞ்சம் சுலபமா செய்ய ஒரு வழி இருக்கு… அது என்ன வழி?
ஒவ்வொரு நாளையும் இன்றே கடைசின்னு நினைச்சு வாழறதுதான் அது.
அப்படி நினைக்கிறதால என்ன ஆகும்? நாம செய்யற தினசரி வேலைகளை முழு மனசோட, முழு ஈடுபாட்டோட செய்வோம். நம்மைச் சுற்றி இருக்கறவங்ககிட்ட சுடுசொல்லே பேசாம, அன்பை மட்டுமே பகிர்ந்துக்குவோம். புறம் பேச மாட்டோம். நம் குடும்பத்தினர் நாம இல்லாம தவிக்கக் கூடாதுங்கிறதுக்காக அவங்களை பல விஷயங்களிலும் பழக்கப் படுத்துவோம். சாதாரணமா நாளைக்கு நாளைக்குன்னு ஒத்திப் போடற விஷயங்களை இன்றைக்கே செய்ய முயற்சிப்போம். இப்படி ஒவ்வொண்ணையும் கருத்தோட செய்யும்போது, எங்கே நிம்மதின்னு தேட வேண்டிய அவசியமே வராது. மனசு அமைதிப் பூங்காவாத்தான் இருக்கும்!
பிறக்கும் போது, நாம அழுதுகிட்டே பிறக்கறோம்; நம்மைச் சுத்தி இருக்கறவங்க சந்தோஷப்படறாங்க. ஆனா நாம இந்த உலகை விட்டுப் போகும் போது நம்மை சுத்தி இருக்கறவங்க எல்லாம் வருத்தப்படணும்; அந்த அளவுக்கு நம்ம வாழ்க்கையை வாழணும், என்பார் ஸ்ரீயோகானந்த பரமஹம்ஸர்.
தினமும் காலையில் இறைவனை நினைச்சு விபூதி பூசிக்கும் போது, வாழ்வின் நிரந்தரமற்ற தன்மையை நினைச்சுப் பார்த்து, இந்த விபூதியைப் போல இந்த உடலும் எந்த நிமிஷமும் சாம்பலாகலாம்னு உணர்ந்து, அதற்குத் தகுந்த மாதிரி நாம நடந்துக்கணும் என்பதற்காகத்தான் அந்த வழக்கத்தை ஏற்படுத்தினாங்க.
அதானல, இன்றே நமக்கு இறுதி நாளா இருக்கக்கூடும், அப்படின்னு மனசின் ஓரத்தில் போட்டு வச்சுக்கட்டு, தினசரி வாழ்க்கையை வாழ்வோம்!
Live one day at a time and make it a master piece! – எங்கேயோ படிச்சது; எனக்குப் பிடிச்சது :)
“Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever.” – இது மகாத்மா காந்தி சொன்னது.
அன்பாய் வாழ்க! அமைதியாய் வாழ்க!
நன்றாய் வாழ்க! நீடுழி வாழ்க!
அன்புடன்,
கவிநயா
உணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...
Sunday, November 28, 2010
Sunday, November 21, 2010
பயணம்
இன்னும் நாலு நாள்தான் இருக்கு. கொண்டு போய்ச் சேர்க்கிறதுக்கு முன்னாடி இன்னும் ஏதாச்சும் வேணுமா, வாங்கணுமா, அப்படின்னு மனசுல ஓடிக்கிட்டிருந்தது. புது எடம், புது மனுஷங்க, பழக்க வழக்கமெல்லாமும் புதுசாத்தான் இருக்கும். நினைக்க நினைக்க கவலையும் அதிகமாகிக்கிட்டே வருது…
ஆனா என்ன செய்யறது, வேற வழியும் இல்லை. எல்லாம் சொல்லிக் குடுத்துதான் கொண்டுபோய் விடணும். விடறதுன்னு தீர்மானிச்சப்பவே பேசவும் தொடங்கிட்டோம். வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் இதைப் பத்திதான் பேச்சு. என்ன ஒண்ணே ஒண்ணு, இதப் பத்தி ஆரம்பிச்சாலே அவ மொகம் சுருங்கிரும். மனசு வாடிரும். தரையைப் பாத்துக்கிட்டே ஒண்ணுஞ் சொல்லாம ஒக்காந்திருப்பா. பெறகு, சொல்ல வந்ததை விட்டுப்புட்டு வேற என்னத்தையாவது சொல்லி, சமாளிச்சு… அப்பறம் மறுபடியும் சமயம் பார்த்து ரெண்டு வார்த்த சொல்லி…, இப்பிடித்தான் ஓடுது கொஞ்ச நாளா.
எம்பொண்டாட்டியும் அவ பங்குக்கு பேசத்தான் செய்யிறா. ஒவ்வொருத்தர் மனசும் ஒடம்பும் ஒவ்வொரு எடத்துல இருக்கு. அதான் ப்ரச்சனை.
**
ஆச்சு. இன்னிக்குதான் கொண்டு போய் விடணும். பத்து மணி வாகில வரச் சொல்லியிருக்காங்க. போக ஒன்றை மணி நேரமாகும். எட்டு மணிக்கே சாமானெல்லாம் வண்டில ஏத்தியாச்சு. வெளக்கேத்தி சாமி கும்புட்டாச்சு. இன்னும் அரை மணி நேரம் இருக்கு.
“போன புதுசுல கொஞ்சம் ஒரு மாதிரித்தான் இருக்கும். ஆனா உன் வயசுக்காரங்க நெறய பேரு இருப்பாங்க. அதனால அவங்கள ப்ரெண்டு புடிச்சுக்க. அங்க ரொம்ப நல்லா பாத்துக்குவாங்களாம். யாராச்சும் உன்கூடவே இருப்பாங்களாம். அதுனால பயமொண்ணுமில்ல. நாங்களும் இங்க பக்கத்துலதான இருக்கம். எதாச்சும் வேணும்னா, ஒரு போன் போட்டா ஓடி வந்திரப் போறம். உனக்கு வேண்டிய புத்தகம், துணிமணி, எல்லாம் எடுத்து வச்சாச்சு. நானு கண்டிப்பா ரெண்டு வாரத்துக்கு ஒரு தரம் வந்து பாத்துக்கிறேன்... ஏ கமலா, நீயும் சொல்லேண்டி”
“ஆமாங்கத்தை. எங்க ரெண்டு பேருக்கும் ஒடம்பு நல்லாததாலதான ஒங்களை கவனிச்சுக்க முடியல? அங்க நல்லா பாத்துக்குவாங்க. கவலப் படாம போயிட்டு வாங்க. நாங்க அடிக்கடி வாரோம்”
முதியோர் இல்லத்துக்கு போகப் போகிற என் அம்மாவிடம் இருந்து எந்த பதிலும் இல்ல. சுருக்கங்களில் சிக்கிய கண்ணீர் சட்டென்று வழிய முடியாமல் வழி பார்த்துக் கொண்டிருக்கிறது.
--கவிநயா
ஆனா என்ன செய்யறது, வேற வழியும் இல்லை. எல்லாம் சொல்லிக் குடுத்துதான் கொண்டுபோய் விடணும். விடறதுன்னு தீர்மானிச்சப்பவே பேசவும் தொடங்கிட்டோம். வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் இதைப் பத்திதான் பேச்சு. என்ன ஒண்ணே ஒண்ணு, இதப் பத்தி ஆரம்பிச்சாலே அவ மொகம் சுருங்கிரும். மனசு வாடிரும். தரையைப் பாத்துக்கிட்டே ஒண்ணுஞ் சொல்லாம ஒக்காந்திருப்பா. பெறகு, சொல்ல வந்ததை விட்டுப்புட்டு வேற என்னத்தையாவது சொல்லி, சமாளிச்சு… அப்பறம் மறுபடியும் சமயம் பார்த்து ரெண்டு வார்த்த சொல்லி…, இப்பிடித்தான் ஓடுது கொஞ்ச நாளா.
எம்பொண்டாட்டியும் அவ பங்குக்கு பேசத்தான் செய்யிறா. ஒவ்வொருத்தர் மனசும் ஒடம்பும் ஒவ்வொரு எடத்துல இருக்கு. அதான் ப்ரச்சனை.
**
ஆச்சு. இன்னிக்குதான் கொண்டு போய் விடணும். பத்து மணி வாகில வரச் சொல்லியிருக்காங்க. போக ஒன்றை மணி நேரமாகும். எட்டு மணிக்கே சாமானெல்லாம் வண்டில ஏத்தியாச்சு. வெளக்கேத்தி சாமி கும்புட்டாச்சு. இன்னும் அரை மணி நேரம் இருக்கு.
“போன புதுசுல கொஞ்சம் ஒரு மாதிரித்தான் இருக்கும். ஆனா உன் வயசுக்காரங்க நெறய பேரு இருப்பாங்க. அதனால அவங்கள ப்ரெண்டு புடிச்சுக்க. அங்க ரொம்ப நல்லா பாத்துக்குவாங்களாம். யாராச்சும் உன்கூடவே இருப்பாங்களாம். அதுனால பயமொண்ணுமில்ல. நாங்களும் இங்க பக்கத்துலதான இருக்கம். எதாச்சும் வேணும்னா, ஒரு போன் போட்டா ஓடி வந்திரப் போறம். உனக்கு வேண்டிய புத்தகம், துணிமணி, எல்லாம் எடுத்து வச்சாச்சு. நானு கண்டிப்பா ரெண்டு வாரத்துக்கு ஒரு தரம் வந்து பாத்துக்கிறேன்... ஏ கமலா, நீயும் சொல்லேண்டி”
“ஆமாங்கத்தை. எங்க ரெண்டு பேருக்கும் ஒடம்பு நல்லாததாலதான ஒங்களை கவனிச்சுக்க முடியல? அங்க நல்லா பாத்துக்குவாங்க. கவலப் படாம போயிட்டு வாங்க. நாங்க அடிக்கடி வாரோம்”
முதியோர் இல்லத்துக்கு போகப் போகிற என் அம்மாவிடம் இருந்து எந்த பதிலும் இல்ல. சுருக்கங்களில் சிக்கிய கண்ணீர் சட்டென்று வழிய முடியாமல் வழி பார்த்துக் கொண்டிருக்கிறது.
--கவிநயா
Friday, November 19, 2010
அண்ணாமலையாய் அருள்பவன்!
அனைவருக்கும் திருக்கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்!

அடிமுடி யில்லா அழலாகி
முதல்முடி வில்லா ஒளியாகி
கனலாய் கனன்று எழுந்தவனே!
தீயாய் திசைகள் அளந்தவனே!
கண்ணால் மதனை எரித்தவனே!
காதல் உமையை வரித்தவனே!
எண்ணும் மனதில் இனிப்பவனே!
ஏற்றம் யாவும் அளிப்பவனே!
விண்ணோர் போற்றிப் பணிபவனே!
மண்ணோர் வணங்க மகிழ்பவனே!
உண்ணா முலையுடன் உறைபவனே!
அண்ணா மலையாய் அருள்பவனே!
--கவிநயா

அடிமுடி யில்லா அழலாகி
முதல்முடி வில்லா ஒளியாகி
கனலாய் கனன்று எழுந்தவனே!
தீயாய் திசைகள் அளந்தவனே!
கண்ணால் மதனை எரித்தவனே!
காதல் உமையை வரித்தவனே!
எண்ணும் மனதில் இனிப்பவனே!
ஏற்றம் யாவும் அளிப்பவனே!
விண்ணோர் போற்றிப் பணிபவனே!
மண்ணோர் வணங்க மகிழ்பவனே!
உண்ணா முலையுடன் உறைபவனே!
அண்ணா மலையாய் அருள்பவனே!
--கவிநயா
Saturday, November 13, 2010
கோலங்கள்
போன வாரம் எங்க ஊர் (ரிச்மண்ட்) கோவில் கும்பாபிஷேகம் விமரிசையா நடந்தது. அதற்காக சந்நிதிகளுக்கு முன்னால் நாங்க இட்ட கோலங்கள் இங்கே...
என் தங்கையின் யோசனைப்படி அரிசி மாவுடன் கொஞ்சம் மைதா மாவும் கலந்து இட்டோம்... அதனால லைட் கலர் தரையில் கோலம் கொஞ்சம் அடர்த்தியா தெரிஞ்சது.
கைவண்ணம்: சுபா, மீனா, லதா, வித்யா, செல்லம், மற்றும் நானு.










கோலங்களுக்கு நன்றி:
http://mykolam.blogspot.com/2009/08/peacock-kolam.html
http://kolangal.kamalascorner.com/search/label/Peacock%20Kolangal
திருமதி.மெய்யம்மை அவர்களின் கோல புத்தகம் :)
என் தங்கையின் யோசனைப்படி அரிசி மாவுடன் கொஞ்சம் மைதா மாவும் கலந்து இட்டோம்... அதனால லைட் கலர் தரையில் கோலம் கொஞ்சம் அடர்த்தியா தெரிஞ்சது.
கைவண்ணம்: சுபா, மீனா, லதா, வித்யா, செல்லம், மற்றும் நானு.
கோலங்களுக்கு நன்றி:
http://mykolam.blogspot.com/2009/08/peacock-kolam.html
http://kolangal.kamalascorner.com/search/label/Peacock%20Kolangal
திருமதி.மெய்யம்மை அவர்களின் கோல புத்தகம் :)
Monday, November 8, 2010
சிறு துளி...
மழை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!
குறிப்பா, அது மென்மையா பூப்போல விழும்போது அண்ணாந்து முகமெங்கும் அந்த துளிகளை வாங்கிக்கப் பிடிக்கும். சன்னல் வழியா மழையை மணிக்கணக்கா வேடிக்கை பார்க்கப் பிடிக்கும். பச்சைப் பசேல்னு செடிகொடியெல்லாம் புத்தம் புதுசா நிற்கிறதைப் பார்க்கப் பிடிக்கும். மழை நின்ன பிறகு மரத்துக்கு அடியில் நின்னுக்கிட்டு, எட்டற தூரத்தில் இருக்கிற கிளையைப் பிடிச்சுக் குலுக்கி, அந்தக் குட்டி மழையில் நனையப் பிடிக்கும். இப்படி எத்தனையோ 'பிடிக்கும்'கள். உங்களுக்கும்தானே? :)
(பிடிக்காதவைகளும் இருக்கு, ஆனா அதைப் பற்றி இப்ப என்ன? :)

குட்டிக் குட்டித் துளித் துளியாக
குனிந்து மண்ணில் வீழுது பார்!
அடுக் கடுக்காகப் புள்ளிகள் வைத்து
அழகாய்க் கோலம் போடுது பார்!
அடிக்கும் காற்றின் திசைக் கேற்ப
தானும் அசைந்து ஆடுது பார்!
இசையில் சிறந்த கலைஞரைப் போலே
இனிதாய்த் தாளம் போடுது பார்!
நேரம் கொஞ்சம் செல்லச் செல்ல
வேகம் இன்னும் கூடுது பார்!
சடசட சடவென சப்தம் எழுப்பி
செல்லக் கோபம் காட்டுது பார்!
செடிகொடியெல்லாம் குளிக்கச் செய்ய
பூவாய் மேலே சொரியுது பார்!
பூமியை நன்றாய்ச் சுத்தம் செய்து
புத்தம் புதிதாய் ஆக்குது பார்!
பயிர்களை யெல்லாம் செழிக்கச் செய்து
பசித்தவர்க் குணவு படைக்குது பார்!
நீர்நிலை யெல்லாம் நிரம்பச் செய்து
உயிர்களின் தாகம் தீர்க்குது பார்!
சிறுதுளி யாகத் தொடங்கிய போதும்
ஆறாய் குளமாய் ஆகுது பார்!
அதுபோல் சிறுகச் சேமித் தாலும்
அறிவும் பொருளும் பெருகும் பார்!!
--கவிநயா
பாப்பா பாட்டு எழுதி ரொம்ப நாளாச்சுன்னு நினைவுபடுத்திய கபீரன்பருக்கு நன்றி :)
படத்துக்கு, கூகுளாருக்கு நன்றி!
குறிப்பா, அது மென்மையா பூப்போல விழும்போது அண்ணாந்து முகமெங்கும் அந்த துளிகளை வாங்கிக்கப் பிடிக்கும். சன்னல் வழியா மழையை மணிக்கணக்கா வேடிக்கை பார்க்கப் பிடிக்கும். பச்சைப் பசேல்னு செடிகொடியெல்லாம் புத்தம் புதுசா நிற்கிறதைப் பார்க்கப் பிடிக்கும். மழை நின்ன பிறகு மரத்துக்கு அடியில் நின்னுக்கிட்டு, எட்டற தூரத்தில் இருக்கிற கிளையைப் பிடிச்சுக் குலுக்கி, அந்தக் குட்டி மழையில் நனையப் பிடிக்கும். இப்படி எத்தனையோ 'பிடிக்கும்'கள். உங்களுக்கும்தானே? :)
(பிடிக்காதவைகளும் இருக்கு, ஆனா அதைப் பற்றி இப்ப என்ன? :)

குட்டிக் குட்டித் துளித் துளியாக
குனிந்து மண்ணில் வீழுது பார்!
அடுக் கடுக்காகப் புள்ளிகள் வைத்து
அழகாய்க் கோலம் போடுது பார்!
அடிக்கும் காற்றின் திசைக் கேற்ப
தானும் அசைந்து ஆடுது பார்!
இசையில் சிறந்த கலைஞரைப் போலே
இனிதாய்த் தாளம் போடுது பார்!
நேரம் கொஞ்சம் செல்லச் செல்ல
வேகம் இன்னும் கூடுது பார்!
சடசட சடவென சப்தம் எழுப்பி
செல்லக் கோபம் காட்டுது பார்!
செடிகொடியெல்லாம் குளிக்கச் செய்ய
பூவாய் மேலே சொரியுது பார்!
பூமியை நன்றாய்ச் சுத்தம் செய்து
புத்தம் புதிதாய் ஆக்குது பார்!
பயிர்களை யெல்லாம் செழிக்கச் செய்து
பசித்தவர்க் குணவு படைக்குது பார்!
நீர்நிலை யெல்லாம் நிரம்பச் செய்து
உயிர்களின் தாகம் தீர்க்குது பார்!
சிறுதுளி யாகத் தொடங்கிய போதும்
ஆறாய் குளமாய் ஆகுது பார்!
அதுபோல் சிறுகச் சேமித் தாலும்
அறிவும் பொருளும் பெருகும் பார்!!
--கவிநயா
பாப்பா பாட்டு எழுதி ரொம்ப நாளாச்சுன்னு நினைவுபடுத்திய கபீரன்பருக்கு நன்றி :)
படத்துக்கு, கூகுளாருக்கு நன்றி!
Tuesday, November 2, 2010
கற்றதனால் ஆய பயன்
வணக்கம்.
கபீரின் கனிமொழிகள் வலைப்பூவைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கபீரின் ஈரடிகளை எடுத்துக் கொண்டு, அவற்றை அழகுத் தமிழில் மொழிபெயர்த்து, அதோடு வெல்லப்பாகு, ஏலம், முந்திரி, எல்லாம் சேர்த்து, சுவைக்கச் சுவைக்க நமக்கு அளிப்பவர், கபீரன்பர். அத்துடன் மட்டுமல்லாது, படம் வரைவதிலும், கவிதை எழுதுவதிலும், ஆன்மீகத்திலும், இப்படி பற்பலவற்றிலும் சிறந்த சகலகலாவல்லவர். கபீர் வலைப்பூவில் அவருடைய பதிவு எண்ணிக்கை 100-ஐ எட்டியதை முன்னிட்டு, சில பதிவர்களை சிறப்பு இடுகைகள் இடுவதற்கென விருந்துக்கு அழைத்திருக்கிறார். (நல்ல ஐடியாவா இருக்கில்ல! :) அந்த அதிர்ஷ்டம் எனக்கும் அடித்தது. நம்மால் முடியுமா என்று முதலில் கொஞ்சம் தயங்கினாலும், இறையருளால் ஒரு மாதிரி எழுதி விட்டேன் :) முதல் விருந்தினர் இடுகையை நம்ம கண்ணன் என்கிற கேயாரெஸ் இட்டிருந்தார். அடுத்ததாக இப்போது நம்முடையது... நேரம் கிடைக்கையில் படித்துப் பாருங்கள்...
அனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!
அன்புடன்
கவிநயா
கபீரின் கனிமொழிகள் வலைப்பூவைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கபீரின் ஈரடிகளை எடுத்துக் கொண்டு, அவற்றை அழகுத் தமிழில் மொழிபெயர்த்து, அதோடு வெல்லப்பாகு, ஏலம், முந்திரி, எல்லாம் சேர்த்து, சுவைக்கச் சுவைக்க நமக்கு அளிப்பவர், கபீரன்பர். அத்துடன் மட்டுமல்லாது, படம் வரைவதிலும், கவிதை எழுதுவதிலும், ஆன்மீகத்திலும், இப்படி பற்பலவற்றிலும் சிறந்த சகலகலாவல்லவர். கபீர் வலைப்பூவில் அவருடைய பதிவு எண்ணிக்கை 100-ஐ எட்டியதை முன்னிட்டு, சில பதிவர்களை சிறப்பு இடுகைகள் இடுவதற்கென விருந்துக்கு அழைத்திருக்கிறார். (நல்ல ஐடியாவா இருக்கில்ல! :) அந்த அதிர்ஷ்டம் எனக்கும் அடித்தது. நம்மால் முடியுமா என்று முதலில் கொஞ்சம் தயங்கினாலும், இறையருளால் ஒரு மாதிரி எழுதி விட்டேன் :) முதல் விருந்தினர் இடுகையை நம்ம கண்ணன் என்கிற கேயாரெஸ் இட்டிருந்தார். அடுத்ததாக இப்போது நம்முடையது... நேரம் கிடைக்கையில் படித்துப் பாருங்கள்...
அனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!
அன்புடன்
கவிநயா
Sunday, October 31, 2010
முடிவு
“என்னம்மா, இந்த நேரத்தில் இங்கே தனியா என்ன செய்யறே?”
வேறொரு உலகில் பயணித்துக் கொண்டிருந்த ராதா, குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினாள். அவள் முன்பின் பார்த்தறியாத பெண்மணி அவள் பதிலை எதிர்பார்த்து நின்றிருந்தாள்.
அந்த சூழ்நிலைக்கு பொருந்தாமல் நல்ல அரக்குச் சிவப்புப் புடவையும், குங்குமப் பொட்டும், மல்லிகைப் பூவுமாய் இருந்தாள். அழகிய அவள் முகம் நிலவொளியில் ஜொலித்தது. அவள் வயது என்ன என்பதை ஊகிக்க முடியவில்லை.
“உங்களுக்கென்ன அதைப் பற்றி அக்கறை?” அடக்க இயலாத ஆத்திரத்துடன் புறப்பட்ட கேள்வி, அந்த மங்கையின் முகத்தைப் பார்த்ததும், வந்த சுவடு தெரியாமல் புறப்பட்ட இடத்துக்கே சென்று விட்டது. ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.
அவர்களுக்கு வெகு அருகில், அடம் பிடிக்கும் குழந்தையைப் போல விடாமல் “ஹோ”வென்று இரைந்து கொண்டிருந்தது கடல். எத்தனை எத்தனை யுகங்களாக இப்படி அலையடித்துக் கொண்டிருக்க வேண்டும்! ஒரு நாளேனும், ஒரு கணமேனும் ஓய்ந்திருக்குமா? எப்படித்தான் ஓய்வில்லாமல் இருக்கிறதோ! எத்தனை வயதானாலும் அதே வேகத்துடன் இருக்கிறது. இது எவ்வாறு சாத்தியம்! நினைத்துப் பார்த்தால் இப்படி எத்தனையோ அதிசயங்கள் இந்த உலகத்தில்! இப்படியெல்லாம் சம்பந்தமில்லாமல் சிந்தனை ஓடிற்று, ராதாவிற்கு.
“என்னம்மா சிந்தனை? இந்த ஏரியால எல்லாம் இத்தனை நேரத்துக்கு மேல பெண்பிள்ளைகள் தனியா இருக்கிறது ஆபத்து. வீட்டுக்கு போயிடம்மா. வீட்டில் உன்னைத் தேட மாட்டாங்களா?” கனிவுடன் ஒலித்தது அந்த பெண்ணின் குரல்.
“என்னைச் சொல்றீங்களே, நீங்க என்ன பண்றீங்க இங்கே?” மறுபடியும் கேட்க எண்ணியதைக் கேட்காமல் விழுங்கிக் கொண்டாள்.
“என்னை யாரும் தேட மாட்டாங்க அம்மா. நான் ஒரு அனாதை.”
‘நான் அப்படியொன்றும் பொய் சொல்லலை, இந்த நிமிஷத்தில் நான் அப்படி உணர்வது உண்மைதானே’, என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
“தற்கொலை மிகப் பெரிய பாவம் மட்டுமில்லை, சுயநலமும் கூடத்தான்”, என்றாள் அந்தப் பெண்மணி.
ராதாவிற்கு தூக்கிவாரிப் போட்டது!
“என் மனதிலுள்ளது இவளுக்கு எப்படித் தெரிந்தது?” என்பது போல விழியகல அந்த பெண்மணியை பார்த்தாள்.
“இருக்கலாம். ஆனால் அவரவருக்கு துன்பம் வரும்போதுதான் தெரியும் அம்மா. அதற்குத் தகுந்தாற் போல நியாயங்களும் வேறுபடும்”
“வா. நடந்துகிட்டே பேசலாம். நல்லா இருட்டிப் போச்சு. இங்கே ரொம்ப நேரம் நிக்க வேண்டாம்”
அந்தப் பெண்மணியிடம் ஏதோ ஒரு காந்த சக்தி இருந்தது. மறுத்துச் சொல்ல மனம் தூண்டினாலும், அதை சட்டை செய்யாமல் அவளுடன் கூட நடக்க ஆரம்பித்தாள்.
“சுந்தர காண்டம் படிச்சிருக்கியா?”
இது என்ன சம்பந்தமில்லாத கேள்வி என்பது போல அந்த பெண்ணை ஏறிட்டுப் பார்த்து விட்டு, “படிச்சிருக்கேன்”, என்று முணுமுணுத்தாள்.
“படிக்கும் போது ஏன் இதை படிக்கிறோம்னு உணர்ந்து படிச்சியா, சும்மா படிக்கணுமேன்னு படிச்சியா?”
கேட்டு விட்டு, பதிலை எதிர்பார்க்காமல் அந்தப் பெண்ணே தொடர்ந்தாள்:
“சீதை அசோகவனத்தில் தனியாக இருந்து சொல்லவொணாத துயரங்களை அனுபவிக்கும் காலம் அது. அதைப் படிக்கப் படிக்க, ஸ்ரீலக்ஷ்மியின் திரு அவதாரமான சீதையே இவ்வளவு துன்பம் அனுபவிச்சிருக்காளே, நம்முடைய துன்பமெல்லாம் எந்த மூலைக்குன்னு தோணும். அதனால படிக்கிறவங்களுக்கு துயரங்களைத் தாங்கிக் கொள்ளக் கூடிய மனப் பக்குவம் வரும். ஆஞ்சநேயர் தூது வருவதையும், சீதைக்கு ஆறுதல் சொல்வதையும் படிக்கையில், உயிரோடு இருந்தா நமக்கும் ஒரு நாள் துயரத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்கிற நம்பிக்கை வரும். அதனாலதான் வாழ்க்கையில் துன்பம் வரும்போது பெரியவங்க அதை படிக்கச் சொல்றாங்க.”
ராதாவிற்கு ஏதோ கொஞ்சம் புரிவது போல் இருந்தது. அவள் மேலே யோசிக்கும் முன் அடுத்த கேள்விக் கணை வந்து விட்டது…
“சரி, சொல்லு… சீதையை விட உனக்கு அதிகமான கஷ்டம் வந்திடுச்சா?”
“ஆமாம் அம்மா. அவளைப் போலவே என் கணவனைப் பிரிய வேண்டிய நிலைமை எனக்கும்.”
அந்த மங்கைக்கு சிரிப்புதான் வந்தது. சீதாபிராட்டியுடன் தன் துயரத்தை ஒப்பிட்டுக் கொள்ளும் இந்தச் சிறுமியை என்ன செய்வது? தன் உணர்வுகளை நாடகத் தனமாக மிகைப் படுத்திச் சொல்வதில் இந்தப் பெண்ணுக்குத்தான் எத்தனை விருப்பம்?!
ராதாவிற்கு அன்றைக்கு காலையில் வந்த தொலைபேசி அழைப்பு நினைவில் ஓடியது.
“அண்ணி… நான் ரஞ்சனி பேசறேன். உங்களுக்கு ஒரு பேட் நியூஸ் அண்ணி.”
“இன்றைக்கு அண்ணாவுக்கு பொண்ணு பார்க்க போறாங்க. உங்களுக்கு 6 வருஷமா குழந்தை இல்லைன்னு காரணம் சொல்லி அண்ணனுக்கு இன்னொரு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்யறாங்க அம்மா”
அமிலத் திராவகத்தை காதில் ஊற்றியது போல் இருந்தது ராதாவிற்கு.
“ராதா, நீ வேணும்னா உங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டு வாயேன். உன் தங்கச்சி கல்யாண வேலை நிறைய இருக்கும். கொஞ்சம் ஒத்தாசையா இருந்துட்டு வரலாமே”, என்ற மாமியாரின் கனிவுக்கு காரணம் இப்போதல்லவா தெரிகிறது?
“ரஞ்சனி, உங்க அண்ணா…”, என்று கேட்க ஆரம்பித்தவளை,
“அண்ணி, அம்மா வராங்க. நான் உங்களுக்கு போன் பண்றது தெரிஞ்சா என்னை பிச்சிடுவாங்க. பை”, அவள் பதிலுக்குக் காத்திராமல் ரஞ்சனி போனை வைத்து விட்டாள்.
இந்த விஷயமெல்லாம் கணவனுக்கு தெரியுமா என்று தெரிந்து கொள்ளத்தான் நினைத்தாள்.
“குழந்தையே பிறக்காவிட்டாலும் சரி, ராதா. உனக்கு நீயும் எனக்கு நானும்தான் குழந்தை”, என்று கனியக் கனியப் பேசிய கண்ணனா இப்படி? ஆனால், அவனுக்கு தெரியாமலா இத்தனையும் நடக்கும் என்ற முடிவுக்கு அவளே வந்து விட்டாள். இனி நான் வாழ்ந்து என்ன பயன், என்ற முடிவுக்கும்தான்!
“உன்னைப் போல சுயநலவாதிகள் நிறைய இருக்காங்க!” மறுபடியும் அந்தப் பெண்மணியின் குரல் அவளை உசுப்பியது.
ராதாவுக்கு கோபம் வந்து விட்டது!
“அம்மா! உங்களுக்கு என்னை முன்பின் தெரியாது. அதற்குள்ள என்னை எப்படி சுயநலவாதின்னு சொல்றீங்க?”
“ஏன்னா, அப்படிப்பட்டவங்கதான் தற்கொலை பண்ணிக்க துணிவாங்க. தனக்கு என்ன கிடைக்கலைன்னு பார்ப்பாங்க, ஆனால் மற்றவங்களைப் பற்றி கொஞ்சமும் யோசிக்க மாட்டாங்க. நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாரு… இந்த முடிவு எடுத்தியே, உன் அப்பா அம்மாவைப் பற்றியோ, அடுத்த மாசம் கல்யாணம் நடக்கவிருக்கிற உன் தங்கையைப் பற்றியோ, ஏன், உன் கணவனைப் பற்றியோ, ஒரு நிமிஷமாவது சிந்திச்சியா?”
அவள் சொல்வது எத்தனை உண்மை! தனக்கு என்ன பாதிப்பு, தான் எவ்வளவு துயரப்படப் போகிறோம், கணவனைப் பிரிய நேர்ந்தால் என்ன செய்வது, தன் வாழ்க்கை என்ன ஆகும், இப்படிப்பட்ட எண்ணங்கள்தான் அவள் கண்ணீருக்கும் முடிவிற்கும் காரணமாக இருந்தனவே தவிர, வேறு யாருடைய நினைப்பும் அவளுக்கு வரவே இல்லை! நினைத்துப் பார்க்கையில் அவளுக்கே வெட்கமாக இருந்தது.
“உன் கணவனை தொலைபேசியில் கூப்பிட்டு பேசணும்னு உனக்கு தோணவே இல்லையா?”
“அவருக்கு தெரியாமலா அம்மா, பொண்ணு பார்க்க போவாங்க?”
“இவ்வளவுதானா நீ உன்னவர் மேல வச்சிருக்க அன்பும் நம்பிக்கையும்?” என்று அவள் கேட்ட போது ராதாவிற்கு ‘சுருக்’கென்றது.
“ராதா… எந்த ஒரு பிரச்சனையையும் எத்தனையோ விதமா தீர்க்கலாம். நீ ரொம்ப முட்டாள்தனமான வழியை தேர்ந்தெடுத்திருக்கே. அவ்வளவுதான் சொல்லுவேன்!”
சிறிது நேரம் மௌனமாக நடந்தார்கள். ராதாவின் மனம் பல விஷயங்களையும் எண்ணி பரபரப்படைந்திருந்தது. கரையை நோக்கி நடந்து கொண்டிருந்ததையும், கிட்டத்தட்ட சாலையருகில் வந்து விட்டதையும் கூட அவள் உணரவில்லை.
வீட்டுக்கு போனதும் முதல் வேலையாக கண்ணனைக் கூப்பிட்டு பேச வேண்டும். நாம் செய்யவிருந்த காரியம் மட்டும் அவனுக்குத் தெரிய வந்தால்! இந்த பெண்மணி மட்டும் சரியான சமயத்தில் வந்து நம் கண்களைத் திறக்காமல் இருந்திருந்தால்! அடடா, அவர் பெயரைக் கூட இன்னும் கேட்கவில்லை, நன்றி கூடச் சொல்லவில்லை...
ராதாவிற்கு இந்த நினைப்பு வரவும், அந்தப் பெண்மணி வழியில் வந்த ஆட்டோவை கை காட்டி நிறுத்தவும், சரியாக இருந்தது. ஆட்டோக்காரருக்கு அம்மா வீட்டு விலாசத்தை சொன்னாள், ராதா.
ஏறிக் கொள்ளும் முன், “ரொம்ப நன்றி அம்மா” என்று சொல்லியவாறே விடைபெற்றுக் கொள்ளத் திரும்பினாள்.
ஆனால் அங்கே விரவிக் கிடந்த இரவு மட்டுமே அவளைப் பார்த்துப் புன்னகைத்தது.
--கவிநயா
வேறொரு உலகில் பயணித்துக் கொண்டிருந்த ராதா, குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினாள். அவள் முன்பின் பார்த்தறியாத பெண்மணி அவள் பதிலை எதிர்பார்த்து நின்றிருந்தாள்.
அந்த சூழ்நிலைக்கு பொருந்தாமல் நல்ல அரக்குச் சிவப்புப் புடவையும், குங்குமப் பொட்டும், மல்லிகைப் பூவுமாய் இருந்தாள். அழகிய அவள் முகம் நிலவொளியில் ஜொலித்தது. அவள் வயது என்ன என்பதை ஊகிக்க முடியவில்லை.
“உங்களுக்கென்ன அதைப் பற்றி அக்கறை?” அடக்க இயலாத ஆத்திரத்துடன் புறப்பட்ட கேள்வி, அந்த மங்கையின் முகத்தைப் பார்த்ததும், வந்த சுவடு தெரியாமல் புறப்பட்ட இடத்துக்கே சென்று விட்டது. ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.
அவர்களுக்கு வெகு அருகில், அடம் பிடிக்கும் குழந்தையைப் போல விடாமல் “ஹோ”வென்று இரைந்து கொண்டிருந்தது கடல். எத்தனை எத்தனை யுகங்களாக இப்படி அலையடித்துக் கொண்டிருக்க வேண்டும்! ஒரு நாளேனும், ஒரு கணமேனும் ஓய்ந்திருக்குமா? எப்படித்தான் ஓய்வில்லாமல் இருக்கிறதோ! எத்தனை வயதானாலும் அதே வேகத்துடன் இருக்கிறது. இது எவ்வாறு சாத்தியம்! நினைத்துப் பார்த்தால் இப்படி எத்தனையோ அதிசயங்கள் இந்த உலகத்தில்! இப்படியெல்லாம் சம்பந்தமில்லாமல் சிந்தனை ஓடிற்று, ராதாவிற்கு.
“என்னம்மா சிந்தனை? இந்த ஏரியால எல்லாம் இத்தனை நேரத்துக்கு மேல பெண்பிள்ளைகள் தனியா இருக்கிறது ஆபத்து. வீட்டுக்கு போயிடம்மா. வீட்டில் உன்னைத் தேட மாட்டாங்களா?” கனிவுடன் ஒலித்தது அந்த பெண்ணின் குரல்.
“என்னைச் சொல்றீங்களே, நீங்க என்ன பண்றீங்க இங்கே?” மறுபடியும் கேட்க எண்ணியதைக் கேட்காமல் விழுங்கிக் கொண்டாள்.
“என்னை யாரும் தேட மாட்டாங்க அம்மா. நான் ஒரு அனாதை.”
‘நான் அப்படியொன்றும் பொய் சொல்லலை, இந்த நிமிஷத்தில் நான் அப்படி உணர்வது உண்மைதானே’, என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
“தற்கொலை மிகப் பெரிய பாவம் மட்டுமில்லை, சுயநலமும் கூடத்தான்”, என்றாள் அந்தப் பெண்மணி.
ராதாவிற்கு தூக்கிவாரிப் போட்டது!
“என் மனதிலுள்ளது இவளுக்கு எப்படித் தெரிந்தது?” என்பது போல விழியகல அந்த பெண்மணியை பார்த்தாள்.
“இருக்கலாம். ஆனால் அவரவருக்கு துன்பம் வரும்போதுதான் தெரியும் அம்மா. அதற்குத் தகுந்தாற் போல நியாயங்களும் வேறுபடும்”
“வா. நடந்துகிட்டே பேசலாம். நல்லா இருட்டிப் போச்சு. இங்கே ரொம்ப நேரம் நிக்க வேண்டாம்”
அந்தப் பெண்மணியிடம் ஏதோ ஒரு காந்த சக்தி இருந்தது. மறுத்துச் சொல்ல மனம் தூண்டினாலும், அதை சட்டை செய்யாமல் அவளுடன் கூட நடக்க ஆரம்பித்தாள்.
“சுந்தர காண்டம் படிச்சிருக்கியா?”
இது என்ன சம்பந்தமில்லாத கேள்வி என்பது போல அந்த பெண்ணை ஏறிட்டுப் பார்த்து விட்டு, “படிச்சிருக்கேன்”, என்று முணுமுணுத்தாள்.
“படிக்கும் போது ஏன் இதை படிக்கிறோம்னு உணர்ந்து படிச்சியா, சும்மா படிக்கணுமேன்னு படிச்சியா?”
கேட்டு விட்டு, பதிலை எதிர்பார்க்காமல் அந்தப் பெண்ணே தொடர்ந்தாள்:
“சீதை அசோகவனத்தில் தனியாக இருந்து சொல்லவொணாத துயரங்களை அனுபவிக்கும் காலம் அது. அதைப் படிக்கப் படிக்க, ஸ்ரீலக்ஷ்மியின் திரு அவதாரமான சீதையே இவ்வளவு துன்பம் அனுபவிச்சிருக்காளே, நம்முடைய துன்பமெல்லாம் எந்த மூலைக்குன்னு தோணும். அதனால படிக்கிறவங்களுக்கு துயரங்களைத் தாங்கிக் கொள்ளக் கூடிய மனப் பக்குவம் வரும். ஆஞ்சநேயர் தூது வருவதையும், சீதைக்கு ஆறுதல் சொல்வதையும் படிக்கையில், உயிரோடு இருந்தா நமக்கும் ஒரு நாள் துயரத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்கிற நம்பிக்கை வரும். அதனாலதான் வாழ்க்கையில் துன்பம் வரும்போது பெரியவங்க அதை படிக்கச் சொல்றாங்க.”
ராதாவிற்கு ஏதோ கொஞ்சம் புரிவது போல் இருந்தது. அவள் மேலே யோசிக்கும் முன் அடுத்த கேள்விக் கணை வந்து விட்டது…
“சரி, சொல்லு… சீதையை விட உனக்கு அதிகமான கஷ்டம் வந்திடுச்சா?”
“ஆமாம் அம்மா. அவளைப் போலவே என் கணவனைப் பிரிய வேண்டிய நிலைமை எனக்கும்.”
அந்த மங்கைக்கு சிரிப்புதான் வந்தது. சீதாபிராட்டியுடன் தன் துயரத்தை ஒப்பிட்டுக் கொள்ளும் இந்தச் சிறுமியை என்ன செய்வது? தன் உணர்வுகளை நாடகத் தனமாக மிகைப் படுத்திச் சொல்வதில் இந்தப் பெண்ணுக்குத்தான் எத்தனை விருப்பம்?!
ராதாவிற்கு அன்றைக்கு காலையில் வந்த தொலைபேசி அழைப்பு நினைவில் ஓடியது.
“அண்ணி… நான் ரஞ்சனி பேசறேன். உங்களுக்கு ஒரு பேட் நியூஸ் அண்ணி.”
“இன்றைக்கு அண்ணாவுக்கு பொண்ணு பார்க்க போறாங்க. உங்களுக்கு 6 வருஷமா குழந்தை இல்லைன்னு காரணம் சொல்லி அண்ணனுக்கு இன்னொரு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்யறாங்க அம்மா”
அமிலத் திராவகத்தை காதில் ஊற்றியது போல் இருந்தது ராதாவிற்கு.
“ராதா, நீ வேணும்னா உங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டு வாயேன். உன் தங்கச்சி கல்யாண வேலை நிறைய இருக்கும். கொஞ்சம் ஒத்தாசையா இருந்துட்டு வரலாமே”, என்ற மாமியாரின் கனிவுக்கு காரணம் இப்போதல்லவா தெரிகிறது?
“ரஞ்சனி, உங்க அண்ணா…”, என்று கேட்க ஆரம்பித்தவளை,
“அண்ணி, அம்மா வராங்க. நான் உங்களுக்கு போன் பண்றது தெரிஞ்சா என்னை பிச்சிடுவாங்க. பை”, அவள் பதிலுக்குக் காத்திராமல் ரஞ்சனி போனை வைத்து விட்டாள்.
இந்த விஷயமெல்லாம் கணவனுக்கு தெரியுமா என்று தெரிந்து கொள்ளத்தான் நினைத்தாள்.
“குழந்தையே பிறக்காவிட்டாலும் சரி, ராதா. உனக்கு நீயும் எனக்கு நானும்தான் குழந்தை”, என்று கனியக் கனியப் பேசிய கண்ணனா இப்படி? ஆனால், அவனுக்கு தெரியாமலா இத்தனையும் நடக்கும் என்ற முடிவுக்கு அவளே வந்து விட்டாள். இனி நான் வாழ்ந்து என்ன பயன், என்ற முடிவுக்கும்தான்!
“உன்னைப் போல சுயநலவாதிகள் நிறைய இருக்காங்க!” மறுபடியும் அந்தப் பெண்மணியின் குரல் அவளை உசுப்பியது.
ராதாவுக்கு கோபம் வந்து விட்டது!
“அம்மா! உங்களுக்கு என்னை முன்பின் தெரியாது. அதற்குள்ள என்னை எப்படி சுயநலவாதின்னு சொல்றீங்க?”
“ஏன்னா, அப்படிப்பட்டவங்கதான் தற்கொலை பண்ணிக்க துணிவாங்க. தனக்கு என்ன கிடைக்கலைன்னு பார்ப்பாங்க, ஆனால் மற்றவங்களைப் பற்றி கொஞ்சமும் யோசிக்க மாட்டாங்க. நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாரு… இந்த முடிவு எடுத்தியே, உன் அப்பா அம்மாவைப் பற்றியோ, அடுத்த மாசம் கல்யாணம் நடக்கவிருக்கிற உன் தங்கையைப் பற்றியோ, ஏன், உன் கணவனைப் பற்றியோ, ஒரு நிமிஷமாவது சிந்திச்சியா?”
அவள் சொல்வது எத்தனை உண்மை! தனக்கு என்ன பாதிப்பு, தான் எவ்வளவு துயரப்படப் போகிறோம், கணவனைப் பிரிய நேர்ந்தால் என்ன செய்வது, தன் வாழ்க்கை என்ன ஆகும், இப்படிப்பட்ட எண்ணங்கள்தான் அவள் கண்ணீருக்கும் முடிவிற்கும் காரணமாக இருந்தனவே தவிர, வேறு யாருடைய நினைப்பும் அவளுக்கு வரவே இல்லை! நினைத்துப் பார்க்கையில் அவளுக்கே வெட்கமாக இருந்தது.
“உன் கணவனை தொலைபேசியில் கூப்பிட்டு பேசணும்னு உனக்கு தோணவே இல்லையா?”
“அவருக்கு தெரியாமலா அம்மா, பொண்ணு பார்க்க போவாங்க?”
“இவ்வளவுதானா நீ உன்னவர் மேல வச்சிருக்க அன்பும் நம்பிக்கையும்?” என்று அவள் கேட்ட போது ராதாவிற்கு ‘சுருக்’கென்றது.
“ராதா… எந்த ஒரு பிரச்சனையையும் எத்தனையோ விதமா தீர்க்கலாம். நீ ரொம்ப முட்டாள்தனமான வழியை தேர்ந்தெடுத்திருக்கே. அவ்வளவுதான் சொல்லுவேன்!”
சிறிது நேரம் மௌனமாக நடந்தார்கள். ராதாவின் மனம் பல விஷயங்களையும் எண்ணி பரபரப்படைந்திருந்தது. கரையை நோக்கி நடந்து கொண்டிருந்ததையும், கிட்டத்தட்ட சாலையருகில் வந்து விட்டதையும் கூட அவள் உணரவில்லை.
வீட்டுக்கு போனதும் முதல் வேலையாக கண்ணனைக் கூப்பிட்டு பேச வேண்டும். நாம் செய்யவிருந்த காரியம் மட்டும் அவனுக்குத் தெரிய வந்தால்! இந்த பெண்மணி மட்டும் சரியான சமயத்தில் வந்து நம் கண்களைத் திறக்காமல் இருந்திருந்தால்! அடடா, அவர் பெயரைக் கூட இன்னும் கேட்கவில்லை, நன்றி கூடச் சொல்லவில்லை...
ராதாவிற்கு இந்த நினைப்பு வரவும், அந்தப் பெண்மணி வழியில் வந்த ஆட்டோவை கை காட்டி நிறுத்தவும், சரியாக இருந்தது. ஆட்டோக்காரருக்கு அம்மா வீட்டு விலாசத்தை சொன்னாள், ராதா.
ஏறிக் கொள்ளும் முன், “ரொம்ப நன்றி அம்மா” என்று சொல்லியவாறே விடைபெற்றுக் கொள்ளத் திரும்பினாள்.
ஆனால் அங்கே விரவிக் கிடந்த இரவு மட்டுமே அவளைப் பார்த்துப் புன்னகைத்தது.
--கவிநயா
Subscribe to:
Posts (Atom)