Sunday, March 25, 2012

பாவை வனம்



கண்ணூறச் செய்யும் பாசம் போல
கவியூறச் செய்கின்றது,
உன் நேசம்.

என் இதய வானத்தை
நிரந்தர பௌர்ணமியாக்குகிறது,
உன் மதி வதனம்.

என் எண்ணக் கூரையில்
இடைவெளியில்லாமல் வேயப் பட்டிருக்கின்றன,
உன் நினைவு நட்சத்திரங்கள்.

உன் அருட்பார்வைப் பொழிவிற்கென
ஆவலாய்க் காத்திருக்கிறது,
இந்தப் பாவை வனம்.

--கவிநயா

நன்றி: வல்லமை
படத்துக்கு நன்றி: http://www.innocentenglish.com/funny-amazing-pictures-videos/optical-illusions-3d/optical-illusion-pictures.html

2 comments:

  1. பஞ்ச பூதங்களையும் ஒரே படத்தில் உள்ளடக்கியுள்ளார்கள் அருமை. கவிதையும் அருமை.

    ReplyDelete
  2. //பஞ்ச பூதங்களையும் ஒரே படத்தில் உள்ளடக்கியுள்ளார்கள் அருமை. கவிதையும் அருமை.//

    ஆம், எனக்கும் படம் ரொம்ப பிடித்தது. கவிதை வாசித்தமைக்கும் மிக்க நன்றி கைலாஷி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)