Sunday, March 1, 2015

சொற்களும் நானும்


சொற்களை நான் நேசிக்கிறேன்!

சொற்கள் இனிமையானவை…

சில சொற்களின் இனிமை

அவற்றின் ஒலியிலேயே தெரியும்…

சில சொற்களின் இனிமை

எழுத்துகளின் கோர்வையில் தெரியும்…

இன்னும் சில சொற்களின் இனிமை

அவற்றின் பொருளில் புலப்படும்…

சில சொற்களுக்குத் தனி

அழகிருக்கும், கம்பீரமிருக்கும்…

சில சொற்களுக்கு

நிறம் இருக்கும், மணம் இருக்கும்…

இன்னும் சில சொற்களுக்கோ

சுவை கூட இருப்பதுண்டு…

ஆனால்,

இவை அனைத்தும் ஒருசேர இருக்கும்

ஒரே ஒரு சொல் எது தெரியுமா?

.

.

.

உன் பெயர்!


--கவிநயா

இந்த வாரம் அம்மன் பாட்டிலும் உன் பெயர்

படத்திற்கு நன்றி: http://www.fanpop.com/clubs/roses/images/13966980/title/rose-love-wallpaper

4 comments:

  1. வணக்கம்
    படித்து போகயில் ஏதோ என்று என்னிய படி இருந்தேன் இறுதியில் சொல்லி முடித்த விதம் நன்று
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன்!

      Delete
  2. ஆமாம்ல!.. ரொம்ப நல்லா இருக்கு!;))!..

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)