Monday, July 27, 2015

வறுமையும் வசதியும்



ஒரு பணக்கார அப்பா இருந்தார். அவர் தன் மகனுக்கு எவ்வளவு வசதியான வாழ்க்கை அவனுக்கு வாய்த்திருக்கிறது என்றும், மக்கள் எவ்வளவு ஏழைகளாக இருக்க முடியும் என்றும், கண்கூடாகக் காட்ட விரும்பினார்.

“வா, நாம ரெண்டு பேரும் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரலாம்”, என்று அவனை அழைத்துக் கொண்டு ஒரு ஏழை விவசாயியிடம் போனார். இரண்டு பேரும் அந்த விவசாயியின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கினார்கள்.

ஊருக்குத் திரும்பும் வழியில் அப்பா, மகனைக் கேட்டார்:

“நம்ம பயணத்தைப் பற்றி என்ன நினைக்கிற? என்ன கத்துக்கிட்ட?”, அப்படின்னு.


மகன் சொன்னான்: “அப்பா, இந்தப் பயணம் ரொம்ப பயனுள்ளதா இருந்தது. நான் நிறைய கத்துக்கிட்டேன்!”


மகன் சொன்னதைக் கேட்டு அப்பாவுக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது. அவர் நோக்கம் நிறைவேறி விட்டதே!


மகன் மேலும் சொன்னான்: “நம்ம வீட்டில் ஒரே ஒரு செல்ல நாய்க்குட்டி இருக்கு. அவங்க வீட்ல ஆடு, மாடு கோழி, எல்லாமே இருக்கு. நம்ம வீட்ல ஒரு சின்ன நீச்சல் குளம் இருக்கு. அவங்களுக்கு எங்கே முடியுதுன்னே தெரியாத அளவு பெரிய ஓடை இருக்கு. நம்ம வீட்டில் மின்சாரத்தால எரியற விளக்குகள் இருக்கு. அவங்களுக்கு வானமே கூரையா, கணக்கில்லாத நக்ஷத்திரங்களோட இருக்கு.


இதெல்லாம் பார்த்த பிறகுதான் நாம எவ்வளவு ஏழைன்னு தெரிஞ்சுக்கிட்டேன் அப்பா. புரிய வெச்ச உங்களுக்கு ரொம்ப நன்றி!” அப்படின்னானாம்.

அப்பா, கப்சிப்!


எல்லாமே பார்வையில் தானே இருக்கு?

எல்லோரும் நல்லாருக்கணும்!



அன்புடன்

கவிநயா



பி.கு. எங்கோ எப்போதோ ஆங்கிலத்தில் படித்ததைத் தமிழ்ப் படுத்தியிருக்கிறேன்.
படத்துக்கு நன்றி: கூகுளார்


6 comments:

  1. ரொம்ப நல்ல கதை! பகிர்வுக்கு நன்றிங்க! :)

    ReplyDelete
  2. அற்புதமான பதிவு
    எங்களுக்கும் பிடித்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி.

      Delete
  3. ரொம்ப நல்ல கதை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி குமார்.

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)