Wednesday, May 27, 2015

பூப்பூவா...


வணக்கம். நலந்தானே? ரொம்ப நாளாச்சு பார்த்து.

பூ அழகா இருக்குல்ல? என் தோழி வீட்டில் பூ பூத்தா வலைப்பூவில் இடறேன்னு சொல்லியிருந்தேன். கொடுத்த வாக்கைக் காப்பத்தணுந்தானே?

இந்தப் பூவுக்கு அப்படி என்ன சிறப்புங்கிறீங்களா? அவங்களுக்கும் தாவரங்களுக்கும் ரொம்ப தூரம்… இப்பதான் பழக ஆரம்பிச்ச்சிருக்காங்க. அந்தப் பழக்கத்தை ஊக்குவிக்கறதுக்காகத்தான்… என்கிறது வெளிப்படையான காரணம் :) (அந்தச் சாக்கிலாவது நானும் ஒரு பதிவிட்டேன்னு பேர் பண்ணிக்கலாமே அப்படிங்கிறது  உள்ளுக்குள்ள இருக்க காரணம்!)

இந்தப் பூ மாதிரி நீங்களும் எப்பவும் அழகா சிரிச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கணும்னு வாழ்த்தறேன்!


அன்புடன்
கவிநயா