Monday, November 24, 2014

இயல்பு


தகதகவென ஜொலிக்கும் சூரியன்
குளுகுளுவென மிதக்கும் சந்திரன்
கலகலவென குதிக்கும் கடலலை
சிலுசிலுவென சிரிக்கும் தென்றல்...

சலசலவென ஓடும் ஆறு
படபடவெனப் பாயும் அருவி
கமகமவென மணக்கும் பூக்கள்
சநிதபவென ஒலிக்கும் பாக்கள்...

இவை இயல்பினில் மாறுவதில்லை
தம் கடமையில் தவறுவதில்லை
பிறர் புகழ்ச்சிக்கு ஏங்குவதில்லை
தம் துயரத்தில் துவளுவதில்லை...


--கவிநயா 

படத்துக்கு நன்றி: http://hdw.eweb4.com/out/1058950.html

2 comments:

  1. உண்மைதான் ... //தம் துயரத்தில் துவளுவதில்லை...// அட்டகாசம்

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)