Tuesday, September 9, 2014

நான் யார்?

குட்டக் குட்டக் குனிவதனால்
நான் முட்டாளில்லை...
குனிந்து தரையில் வீழ்வதனால்
நான் கோழையுமில்லை...
மட்டந்தட்டிப் பேசுவோரிடம்
மார்தட்டி வீரம் காட்ட
நான்
மீசை வைத்த ஆண் பிள்ளையுமில்லை...

ஒரு வார்த்தை வீசுதற்கு
ஒரு நொடியும் ஆகாது;
ஆயினும்,
வீசியதைப் பிடிக்கும் வலை
இவ்வுலகில் எங்குமில்லை
என்றுணர்ந்த
சாதாரண பெண்தான் நான்...

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://arouna-selvame.blogspot.com/2013/08/blog-post.html
(அந்தக் காலத்தில், 2005-ல் எழுதியது, இப்பவும் சரியாதானே இருக்கு? :)
 

18 comments:

  1. ம்ம்ம்ம்ம் எப்போவுமே சரியாவும் இருக்கும். :)

    ReplyDelete
    Replies
    1. :) ஆமாம்!

      வருகைக்கு நன்றி அம்மா.

      Delete
  2. எப்பவுமே சரியாகத்தான் பொருந்தும்...

    ReplyDelete
    Replies
    1. உண்மை அம்மா :) நன்றி!

      Delete
  3. ரொம்ப ரொம்ப சரியா இருக்கு :)!

    ReplyDelete
    Replies
    1. :) ரொம்ப ரொம்ப நன்றி!

      Delete
  4. சூப்பர்!.. 'நச்'சுனு இருக்கு வரிகள்!..

    ReplyDelete
  5. ஹ! என்னமாய் தன்னை வெளிப்படுத்தல்!....

    அறிவும் மனமும் வெவ்வேறாய் இல்லாமல் இணைந்து செயல்பட்ட அழகான கவிதை வரிகள்! 'இப்பவும் சரியாய் இருக்கிற' ஆதங்கம் புரிகிறது!

    ReplyDelete
    Replies
    1. //அறிவும் மனமும் வெவ்வேறாய் இல்லாமல் இணைந்து செயல்பட்ட அழகான கவிதை வரிகள்!//

      ஆமால்ல? நீங்க சொன்ன பிறகுதான் உணர்றேன்... மிக்க நன்றி ஜீவி ஐயா!

      Delete
  6. Replies
    1. :) நன்றி தானைத் தலைவி!

      Delete
  7. ///வீசியதைப் பிடிக்கும் வலை
    இவ்வுலகில் எங்குமில்லை
    என்றுணர்ந்த
    சாதாரண பெண்தான் நான்..///

    அந்த புரிதல் வந்த பின்னே அசாதாரணப் பெண்ணே அவள்.
    நல்ல கருத்து

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சொல்றீங்க! மிக்க நன்றி கபீரன்பன் ஐயா!

      Delete
  8. ஒரு வார்த்தை வீசுதற்கு
    ஒரு நொடியும் ஆகாது;//
    அருமை.. கண்ணியம் காப்பதில் பெருமைதான் நமக்கும்

    ReplyDelete
  9. //கண்ணியம் காப்பதில் பெருமைதான் நமக்கும்//

    உண்மைதான்! வருகைக்கு நன்றி ரிஷபன்!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)