Thursday, February 27, 2014

அண்ணாமலை சிவனே!


அனைவருக்கும் மஹாசிவராத்திரி வாழ்த்துகள்!
ஓம் நம சிவாய; சிவாய நம ஓம்.
சுப்பு தாத்தா வேலைகளுக்கு நடுவிலும், உடனடியாகப் பாடி அனுப்பி விட்டார்! அன்புக்கு மிக்க நன்றி தாத்தா!



அண்ணாமலை சிவனே
எமக் கருள்வாய் குருபரனே
உண்ணா முலையுடனே, இந்த
மண்ணாளும் அரனே!

பொன்னார் மேனிச்
சிவனே அரையில்
புலித்தோல் அணிந்தவனே, எங்கள்
கலிதீர்த் தருள்பவனே!

விண்ணவர் போற்ற
மண்ணவர் துதிக்க
கங்கையை அணிந்தவனே, எங்கள்
அன்னையின் மன்னவனே!

கண்ணா ரமுதே
களிதரும் தேனே
எழில் விழி உமை துணைவா
எங்கள் வழியிலும் துணையாய் வா!

பக்தருக் கருளும்
பரம தயாளா
பிறை மதி சூடியவா, எங்கள்
குறைகளைத் தீர்த்திட வா!

அன்பே சிவமாய்
உருக் கொண்டவனே
அருணாசல தேவா, எங்கள்
கருணாகரனே வா!


--கவிநயா

7 comments:

  1. அருமையான பாடல். உங்களுக்கும் மஹாசிவராத்திரி வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. விண்ணவர் போற்றும் அண்ணாமலையானுக்கு, சிவராத்திரி தினத்தில் அற்புதமானதொரு பாமாலை சூட்டியிருக்கிறீர்கள்!.. சிவனருள் நம் அனைவரின் மீதும் பொழியப் பிரார்த்திக்கிறேன்!.. அருமையானதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி!.

    ReplyDelete
  3. பாடல் சிறப்பு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நல்ல அழகான பாடல் ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  5. ஆடிக்கொரு முறை, அமாவாசைக்கொரு முறை பதிவிட்டாலும், தவறாது வந்து வாசிக்கும் அனைவருக்கும் நன்றி. பின்னூட்டிய ராமலக்ஷ்மி, பார்வதி, தனபாலன், மற்றும் தானைத் தலைவிக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. அருமையான பாடல்.... பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெங்கட்.

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)