Tuesday, October 8, 2013

நவ துர்கா தேவியர் - ஜ்வாலா துர்க்கை, காத்யாயினி


பண்ட அசுரனை லலிதை எதிர்க்கும் போதிலே
சக்தி சேனையை இரவில் காக்க வேண்டியே
அக்கினியாலே பெரும் வளையம் அமைத்தவள்
அசுரர்கள் செய்த வஞ்சனை முறியடித்தவள்

ஜ்வாலா துர்க்கையே அருள் ஜோதி துர்க்கையே
அக்கினி ஒளியால் அதர்மம் அழித்த துர்க்கையே


காத் யாயன முனிவரின் விருப்பத்திற் கிணங்கி
கருணையினாலே மகளாய் வந்துதித்தவள்
சங்கரன் செய்த முனி தாண்டவத்திலே
அவன் நெற்றிக் கண்ணிலே தோற்றம் கொண்டவள்

காத் யாயினி யாக அருளும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

--கவிநயா

(தொடரும்)

துர்க்காஷ்டகம்: http://www.youtube.com/watch?v=X1qVil87_m4

படத்துக்கு நன்றி: http://nadababa.com/gallery/devas/nava_durga/

2 comments:

  1. அருமை...


    அன்புடன் அழைக்கிறேன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன். உங்கள் பதிவையும் இப்போதுதான் வாசிக்க முடிந்தது. உங்கள் மனைவியும், சகோதரியும் நலமுடன் இப்போது நலமுடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)