Friday, October 4, 2013

நவ துர்கா தேவியர் - சூலினி, பிரம்ம சாரிணி


 
முப்புரத்தையே சிவனும் எரிக்கும் போதிலே
மூன்று சக்தியாம் சூலம் ஏந்தி வந்தவள்
மூலம் ஆனவள் துக்கம் முந்தி களைபவள்
சூலம் தாங்கியே துன்பம் விரட்டி அருள்பவள்

சூழும் பகைகளை விரட்டும் சூலினி நீயே
நாளும் பணிகின்றோம் எம்மைக் காக்கணும் தாயே (2)


ஈசன் தன்னையே பதியாய் வரிக்க வேண்டியே
இதயம் நிறை அன்பால் கடும் தவங்கள் செய்தவள்
பிரம்மமானவள் துர்கா பெண்ணுமானவள்
தவமுமானவள் அவளே தாயுமானவள்

பிரம்ம சாரிணி என ஆன துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே (2)




--கவிநயா

(தொடரும்)

துர்க்காஷ்டகம்: http://www.youtube.com/watch?v=X1qVil87_m4

படத்துக்கு நன்றி: http://nadababa.com/gallery/devas/nava_durga/

8 comments:

  1. அருமை கவிநயா.

    நவராத்திரிப் பண்டிகை வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலக்ஷ்மி! உங்களுக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்.

      Delete
  2. Great post with nice pictures ! tamil editor velai nirutham seigirathu enave commentugal aangilathil. postugal varavillai. :(((

    ReplyDelete
    Replies
    1. அடடா, சரியாகி விடும்... உங்கள் பதிவில் வருகை தந்திருந்த அழகு அம்மையை ரசித்தேன் :) நன்றி தானைத் தலைவி.

      Delete
  3. நல்ல பாடல்... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நவராத்திரி ஆரம்பத்திற்கு ஏற்ற அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

    இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா. இதற்கு முந்தைய பதிவிலிருந்து தொடக்கம்... உங்களுக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்.

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)