Monday, April 8, 2013

ரகசியமாய்...



மூடி மூடி வைத்தாலும்,

மல்லிகைப் பூவின் இருப்பை
அதன் வாசனை காட்டிக் கொடுத்து விடுவதைப் போல…

பனிக் கட்டியின் இருப்பை
பாத்திரம் காட்டிக் கொடுத்து விடுவதைப் போல…

கதிரவனின் இருப்பை
அவன் கதிரொளி காட்டிக் கொடுத்து விடுவதைப் போல…

என் மனதில் உன் இருப்பை...

திடீர் பகற் கனவுகளும்,
ரகசியப் புன்னகைகளும்,
கன்னத்தின் கனிச் சிவப்பும்,

காட்டிக் கொடுத்து விடுகின்றன!


--கவிநயா


நன்றி: வல்லமை
படத்திற்கு நன்றி: http://www.panithulishankar.com/2010/07/blog-post_19.html

13 comments:

  1. ஆகா... ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அன்பை அடைத்து வைக்க முடியாதுதான்:). அழகான கவிதை, கவிநயா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலக்ஷ்மி :)

      Delete
  3. அழகான உணர்வுகளுடன் கூடிய கவிதை.

    சிறப்பாகச் சிந்தித்து எழுதியுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. மனதில் பொத்தி வைத்த நினைப்பைச் சொல்லும் கவிதையும் அழகு.வெட்க முகம் காட்டும் கன்னியின் படமும் அழகு

    ReplyDelete
  5. ரசிக்க வைக்கும் கவிதை...

    ReplyDelete
  6. அருமையான கவிதை.

    ReplyDelete
  7. காட்டி கொடுத்தல் காதலின் மிகை அருமையாக கவிபாடிய கவிநயாவிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சரளா. முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி! :)

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)