Monday, December 17, 2012

தேடுகின்ற கண்களுக்குள் ஓடி வரும் சுவாமி!

எங்க பார்த்தாலும் ஐயப்பமார்களா இருக்கிற இந்த நேரத்தில், ஐயப்பனை நினைக்காம இருக்க முடியுமா? சின்னப் பிள்ளையில் 'சுவாமி ஐயப்பன்' படம் பார்த்த பிறகு ரொம்பப் பிடிச்சு, உடனடியா மனப்பாடம் பண்ணின பாடல்தான், "தேடுகின்ற கண்களுக்குள் ஓடி வரும் சுவாமி"ங்கிற பாடல். கவியரசர் கண்ணதாசன்  அவர்கள் எழுதினதுன்னு ஞாபகம். படத்தில் ஒரு சிறுமிக்காக சுசீலாம்மா பாடி இருப்பாங்க. இரண்டாவது பத்தில தம்பிப்பாப்பா வேணும்னு கேட்பா, அந்தச் சிறுமி. அந்தப் பாடலை கொஞ்சம் மாற்றி, எல்லோரும் பாடக் கூடிய வகையில் பொதுவா அமைச்சிருக்கேன்.  (கண்ணதாசன் மன்னிப்பாராக!) நீங்களும்தான் பாடிப் பாருங்களேன்!



சுப்பு தாத்தா அன்புடன் பாடித் தந்ததை இங்கே கேளுங்கள்! மிக்க நன்றி தாத்தா!

தேடுகின்ற கண்களுக்குள் ஓடி வரும் சுவாமி
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி
வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி
வஞ்சமில்லா நல்லவர்க்கே அருள்புரியும் சுவாமி!

ஐயப்ப சுவாமி….. அருள் புரி சுவாமி

கண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே – எங்கள்
காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே
அண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே – எம்மேல்
அன்பு வைத்து எம்மனதில் குடி புகுந்தாயே!

ஐயப்ப சுவாமி இன்னும் அருள் புரி சுவாமி
(தேடுகின்ற)

ஹரிஹரனின் புத்திரனாய் அவதரித்தாயே – எமக்கு
அருள்செய்ய சபரிமலைக்கு இர/ற/ங்கி வந்தாயே
கருணையினால் பதினெட்டாம் படி அமர்ந்தாயே – எங்கள்
கண்கண்ட தெய்வமென ஆகி விட்டாயே!

ஐயப்ப சுவாமி இன்னும் அருள் புரி சுவாமி
(தேடுகின்ற)

--கண்ணதாசன்/கவிநயா

சுவாமியே..............சரணம் ஐயப்பா!

படத்துக்கு நன்றி: http://temple.dinamalar.com/en/historydivinity.php


4 comments:

  1. பாடல் மிகச் சிறப்பாக இருக்கிறது
    கண்ணதாசன் அவர்கள் நிச்சயம் படித்தால்
    பாராட்டவே செய்வார்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நானும் சின்ன வயதில் படம் பார்த்திருக்கிறேன். இந்தப் பாடலும் பிடிக்கும். உங்க வரிகளோடு இன்னும் அருமை. நன்றி கவிநயா:)!

    ReplyDelete
  3. சுவாமியே சரணம் ஐயப்பா....

    ReplyDelete
  4. மிகவும் நன்றி, ரமணி, ராமலக்ஷ்மி, மற்றும் சே.குமார்!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)