Wednesday, November 14, 2012

உன்னைப் போல எவருண்டு!

அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!




சின்னக் கண்ணே சிரிக்கும் முத்தே
சின்னப் பாப்பா வா
கண்ணின் மணியே கொஞ்சும் கிளியே
கண்ணே பாப்பா வா

அ, ஆ, இ, ஈ, கற்றுக் கொண்டு
அழகாய்ப் பேசிடணும்
நம்தாய் மொழியாம் தமிழை நீயும்
கண்ணாய்ப் போற்றிடணும்

உண்ணும்போது பிறர்க்கும் கொடுத்து
பகிர்ந்தே உண்டிடணும்
உதவி வேண்டும் பேர்க்கு உடனே
ஓடி உதவிடணும்

கோபம், அழுகை, பிடிவாதம், இவை
எல்லாம் விட்டிடணும்
அன்பே தெய்வம் எனும் எண்ணம்உன்
மனதில் நின்றிடணும்

குழந்தை உள்ளம் மாறாமல் நீ
உலகில் வாழ்ந்திடணும்
உன்னைப் போல எவருண்டு என
உலகம் சொல்லிடணும்!

--கவிநயா




நன்றி: வல்லமை

4 comments:

  1. இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா!

      Delete
  2. அருமை...

    இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தவறாத வருகைக்கும் சேர்த்து, மிக்க நன்றி தனபாலன்!

      Delete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)