Thursday, July 26, 2012

வரவேண்டும் வரவேண்டும் வரலக்ஷ்மி தாயே!

அனைவருக்கும் இனிய வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள்!




சுப்பு தாத்தா அருமையாக சஹானா ராகத்தில் பாடித் தந்திருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! கேட்டுக் கொண்டதும் பாடித் தந்தமைக்கு மிக மிக நன்றி தாத்தா!


வரவேண்டும் வரவேண்டும் வரலக்ஷ்மி தாயே!
தரவேண்டும் தரவேண்டும் வரம் லக்ஷ்மி நீயே!

அஷ்ட லக்ஷ்மியாகி அருள்கின்ற தாயே!
அஷ்ட ஐஸ்வர்யங்களின் அதிபதி நீயே!
கஷ்டங்களைப் போக்கி காத்திடும் தாயே!
இஷ்டங்களைத் தந்து இன்பம் அளிப்பாய் நீயே!!

(வரவேண்டும்)

திருமாலின் திருமார்பில் திகழ்கின்ற தாயே!
தமிழ்மாலை உனக்காக, ஏற்பாயே நீயே!
ஒருமனதாகி உன்னைத் தொழுபவர்க்கே தாயே!
திருவாகி வளம்யாவும் அளிப்பாயே நீயே!!


--கவிநயா


No comments:

Post a Comment

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)