Sunday, February 12, 2012

சோடி போட்டு பாடுங்க!

அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துகள்!

கீழே இருக்கிற பாட்டை 'மூத்த' காதலர் ஒருத்தர் பாடித் தந்திருக்காரு. நீங்களே போட்டுப் பார்த்துக் கண்டு பிடிங்க! கண்டிப்பா கடைசி வரை பாருங்க. கடைசியில் ஒரு surprise இருக்கு! :)

லலிதாம்மாவும் 'why this கொல வெறி' மெட்டில் பாடி அசத்தி இருக்காங்க, இங்கே!



பெண்:
வச்ச கண்ணு வாங்கவில்ல
வாங்கிய பின் தூங்கவில்ல
ராசாவே செல்ல ராசாவே

ஆண்:
மச்ச விழிப் பார்வையாலே
மச்சான் நெஞ்சத் தைக்கிறியே
ரோசாவே சின்ன ரோசாவே

பெண்:
சின்ன மனக் கூட்டுக்குள்ள
சிம்மாசனம் போட்டு வச்சேன்
சிம்மாசனத்துக்குன்னே
சிங்கம் போல வந்து சேர்ந்தே

ஆண்:
வம்பெதுவும் வேணாமுன்னு
எம்மனசப் பூட்டி வெச்சேன்
கள்ளச் சாவி கொண்டுகிட்டு
காத்தப் போல நீ நுழைஞ்சே

பெண்:
ஊருறங்கும் வேளையிலே
ஊதக் காத்து வீசையிலே
யாரு கண்ணும் படாம
பேசுறது வேணாமய்யா

ஆண்:
ஊரெல்லாங் கூட்டி வச்சு
ஒங் கழுத்தில் தாலி கட்டி
கண்ணப் போலக் காப்பாத்துவேன்
கவலையெதும் வேணாமடி


--கவிநயா

படத்துக்கு நன்றி: கூகுளார்

8 comments:

  1. அருமையான பாடல்:)!

    லிங்க் வேலை செய்யவில்லையே. ஆனாலும் மூத்த காதலர்களின் சம்பாஷணை பதிவொன்றை நேற்று வாசித்தேன். அவரே இதையும் பாடியிருப்பாரென்று ஒரு அனுமானம்:)! லிங்க சரி செய்து வையுங்கள். வந்து கேட்கிறேன்.

    ReplyDelete
  2. லிங்க் பற்றி சொன்னதுக்கு நன்றி ராமலக்ஷ்மி. இப்போ சரியா இருக்கும்னு நினைக்கிறேன். பார்த்துட்டு வாங்க, காத்திருக்கேன் :)

    ReplyDelete
  3. மீண்டும் மீண்டும் போட்டுக் கேட்டு ரொம்ப எஞ்சாய் பண்ணேன் ;

    sr citizen போட்டிக்கு நானும்[நேரம் கிடைத்தால்] பாடி அனுப்ப இருக்கேன்!

    ஜாக்கிரதை !!

    ReplyDelete
  4. subbu thatha than padi irukkanum. appurama potu ketkiren.

    ReplyDelete
  5. லலிதாம்மா, நீங்க பாடித் தந்ததையும் இணைச்சிருக்கேன். உங்க குரல் டீனேஜர் குரல் போல சும்மா கொஞ்சுது போங்க! நன்றி அம்மா :)

    ReplyDelete
  6. வாங்க கீதாம்மா. பாத்துட்டீங்களா, கடைசி வரை? :)

    ReplyDelete
  7. so sweet :)

    ரொம்ப அழகு. மொதல்ல சுத்திப் போடுங்க. :)

    நல்லாயிருக்கனும் முருகா! நல்லாயிருக்கனும் :)

    ReplyDelete
  8. வாங்க ஜிரா. உங்க பரவசத்தைப் பார்த்து சந்தோஷமா இருக்கு :) உரியவங்க பார்த்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். மிகவும் நன்றி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)