Sunday, April 10, 2011

ஸ்ரீ ராமஜெயம்

அனைவருக்கும் இனிய ஸ்ரீராம நவமி நல்வாழ்த்துகள்!



ன்பரைக் காத்திட அவனிக்கு வந்தது
ழகிய திருநாமம்!

தவன் மரபினில் பூமிக்கு வந்திட்ட
ண்டவன் திருநாமம்!

ருள்தனை விரட்டிடும் ஒளியதை ஊட்டிடும்
னியனின் திருநாமம்!

சனும் ஓதிடும், இகபர சுகந்தரும்
டில்லா திருநாமம்!

ண்மையின் வடிவத்தை இதயத்தில் நிறுத்திடும்
த்தமன் திருநாமம்!

ழ்வினை அகற்றிடும், நாடிடும் நெஞ்சினில்
ன்றிடும் திருநாமம்!

ன்றென்றும் பக்தர்க்கு உறுதுணை யாய்வரும்
ந்தையின் திருநாமம்!

ங்கிடும் உள்ளத்தை தாங்கிட வருவது
கனின் திருநாமம்!

ம்புலன் அடக்கிய அனுமனும் உரைப்பது
யனின் திருநாமம்!

ருமன தாகவே தினம்பாடி டுவோம்
ருவனின் திருநாமம்!

திடும் உள்ளத்தின் உள்நின்று ஒளிர்ந்திடும்
வியத் திருநாமம்!

வியம் தீர்த்திடும் அன்புடன் காத்திடும்
டதத் திருநாமம்

அதுவே எங்கள் ஜானகி ராமனின்
அழகிய திருநாமம்!

ராமராம என அடியவர் ஜெபித்திடும்
அற்புதத் திருநாமம்!!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.dlshq.org/download/hindufestimg/hanuman.jpg


அடுத்த வாரம் முதல் விடுமுறையில் போறேன். கணினியைத் தொட வாய்ப்பு கிடைப்பது சந்தேகம். விடுமுறை எனக்கு, விடுதலை உங்களுக்கு! :) பிறகு பார்க்கலாம்...

எல்லோரும் நல்லா இருக்கணும்!

Sunday, April 3, 2011

அம்மாவுக்கு ஒரு ஆரிரரோ


அம்மா இங்கே வாயேன் – என்
மடியில் தாச்சுக் கோயேன்
பாப்பா நானும் தாலாட்டுறேன்
கண்ணை மூடிக் கோயேன்

தினமும் நிறைய வேலை
ஓய்வே உனக்கு இல்லை
அப்பா முதல் எல்லாருமே
தர்றோம் உனக்கு தொல்லை

பொறுமை உனக்கு அதிகம்
பொறுப்புகளும் அதிகம்
அம்மா உன்மேல் நாங்க வெச்ச
பிரியமும் ரொம்ப அதிகம்

சின்னக் கையால் உன் கூந்தல்
கோதிடுவேன் நானே
பட்டுப் போல கன்னத்திலே
முத்திடுவேன் நானே

செல்ல அம்மா உன்னை இறுக
கட்டிக்குவேன் நானே
குட்டி பாப்பா போல உன்னை
பார்த்துக்குவேன் நானே!

--கவிநயா

படத்துக்கு நன்றி: கூகுளார்