Sunday, February 6, 2011

சின்னஞ் சிறிய ரோஜாப்பூ!



சின்னஞ் சிறிய ரோஜாப்பூ
சிரிக்கும் அழகில் மத்தாப்பூ
கன்னங் குழியும் சின்னப்பூ
கட்டித் தருவேன் முத்தப்பூ!

கண்கள் கருக மணிபோலே;
மூக்கோ சின்னச் சிமிழ்போலே;
கன்ன மிரண்டும் பூப்போலே;
வாய்நீர் வழியும் தேன்போலே!

மொட்டுக் கைகள் தொட்டு விட்டால்
உள்ளம் தன்னால் மலர்ந்திடுமே;
பட்டுப் பிஞ்சுக் கால் உதைத்தால்
பரவசம் மிகவும் ஆகிடுமே!

குட்டிப் பாப்பா சிரிப்பினிலே
உலகம் எல்லாம் ஒளிபெறுமே!
குழந்தை உள்ளம் கொண்டவர்க்கு
அகிலம் எல்லாம் அன்புருவே!

--கவிநயா

சுப்பு தாத்தா "நீல வண்ணக் கண்ணா வாடா" மெட்டில் பாடித் தந்திருக்கிறார். கேட்டு மகிழுங்கள். மிக்க நன்றி தாத்தா!

23 comments:

  1. //குழந்தை உள்ளம் கொண்டவர்க்கு
    அகிலம் எல்லாம் அன்புருவே!//

    இந்தக் கடைசி வரி உணர்ந்து எழுதிய ஒன்றாகத் தெரிகிறது.. தாங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.

    கவிதைகளுக்காகவே தளம் கொண்டிருக்கும் திரு.சிவக்குமாரன் தெரியுமோ?
    www.sivakumarankavithaikal.blogspot.com
    கவிதைகள் பிடித்தோருக்கெல்லாம் சிவக்குமாரனையும் பிடிக்கும்!

    ReplyDelete
  2. அழகுப் பாப்பாவைக் கையில் ஏந்திய மகிழ்ச்சியைத் தந்தன வரிகள்:)!

    ReplyDelete
  3. "chinnanchiriya rojappoo
    sirikkum azhagil maththaappoo"

    dhrishti pattu vidum munbu
    suththippodu milagaa uppu!

    kuttikku kanakkillaa 'ummmmaa'

    ReplyDelete
  4. உள்ளம் எல்லாம் கொள்ளை போனது
    இந்த வண்ணப்பூவில்

    ReplyDelete
  5. பாப்பா பாட்டு அருமை அக்கா! :-)

    ReplyDelete
  6. //இந்தக் கடைசி வரி உணர்ந்து எழுதிய ஒன்றாகத் தெரிகிறது.. தாங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.//

    நன்றி ஜீவி ஐயா.

    //கவிதைகளுக்காகவே தளம் கொண்டிருக்கும் திரு.சிவக்குமாரன் தெரியுமோ?//

    ஓரிரு முறைகள் அந்தப் பக்கம் போயிருக்கேன். மறுபடி போய் பார்க்கிறேன் :)

    ReplyDelete
  7. //அழகுப் பாப்பாவைக் கையில் ஏந்திய மகிழ்ச்சியைத் தந்தன வரிகள்:)!//

    நன்றி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  8. //dhrishti pattu vidum munbu
    suththippodu milagaa uppu!

    kuttikku kanakkillaa 'ummmmaa'//

    வாங்க லலிதாம்மா. யார் பாப்பாவோ, தெரியலை, கூகுளார் தந்தார் :) அந்தப் பாப்பா ரொம்ப நன்றாக இருக்கட்டும்! திடீரென குழந்தை பற்றி எழுதத் தோன்றியது... அதனாலதான் அப்படி. ரசித்தமைக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  9. //உள்ளம் எல்லாம் கொள்ளை போனது
    இந்த வண்ணப்பூவில்//

    மிக்க மகிழ்ச்சியும் நன்றியும், திகழ்!

    ReplyDelete
  10. //பாப்பா பாட்டு அருமை அக்கா! :-)//

    மிக்க நன்றி குமரா :)

    ReplyDelete
  11. Beautiful poetry!

    rombave azhagaana varigal... :)

    ReplyDelete
  12. // Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

    Cute lines...! My sincere wishes.//

    முதல் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி ரவிகுமார்!

    ReplyDelete
  13. // Matangi Mawley said...

    Beautiful poetry!

    rombave azhagaana varigal... :)//

    மிக்க நன்றி Matangi :)

    ReplyDelete
  14. வணக்கம் சகோ, உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் நன்றி!

    ReplyDelete
  15. Paappa pattu roomba suuperaa irukku!! how come thedirnu pappa pattu? oru vellai Thakkudu yabakam vanthuduthoo??..:)))

    ReplyDelete
  16. ஒவ்வொரு வரியிலும் சொர்க்கம் உணர்ந்தேன்.

    ReplyDelete
  17. //வணக்கம் சகோ, உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் நன்றி!//

    அன்புக்கு மிக்க நன்றி, மாணவன்! சீக்கிரம் வந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  18. //Paappa pattu roomba suuperaa irukku!! how come thedirnu pappa pattu? oru vellai Thakkudu yabakam vanthuduthoo??..:)))//

    haha :) u got it :)))

    ReplyDelete
  19. நானானி said...

    //ஒவ்வொரு வரியிலும் சொர்க்கம் உணர்ந்தேன்.//

    உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி அம்மா.

    ReplyDelete
  20. சுப்பு தாத்தா "நீல வண்ணக் கண்ணா வாடா" மெட்டில் பாடித் தந்ததை இடுகையில் சேர்த்திருக்கிறேன், கேட்டு மகிழுங்கள் :) மிக்க நன்றி தாத்தா!

    ReplyDelete
  21. இப்ப நிச்சயம் அனுபவிக்க முடியுது! ஏன்னு தெரிஞ்சிருக்கும்!

    ReplyDelete
  22. //இப்ப நிச்சயம் அனுபவிக்க முடியுது! ஏன்னு தெரிஞ்சிருக்கும்!//

    தெரியுமே! சொந்த பிள்ளைங்களை விட பேரன் பேத்தி ரொம்பவே சிறப்புதான் :)

    ரசித்தமைக்கு நன்றி திவாஜி.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)