Saturday, November 13, 2010

கோலங்கள்

போன வாரம் எங்க ஊர் (ரிச்மண்ட்) கோவில் கும்பாபிஷேகம் விமரிசையா நடந்தது. அதற்காக சந்நிதிகளுக்கு முன்னால் நாங்க இட்ட கோலங்கள் இங்கே...

என் தங்கையின் யோசனைப்படி அரிசி மாவுடன் கொஞ்சம் மைதா மாவும் கலந்து இட்டோம்... அதனால லைட் கலர் தரையில் கோலம் கொஞ்சம் அடர்த்தியா தெரிஞ்சது.

கைவண்ணம்: சுபா, மீனா, லதா, வித்யா, செல்லம், மற்றும் நானு.






















கோலங்களுக்கு நன்றி:
http://mykolam.blogspot.com/2009/08/peacock-kolam.html
http://kolangal.kamalascorner.com/search/label/Peacock%20Kolangal
திருமதி.மெய்யம்மை அவர்களின் கோல புத்தகம் :)

12 comments:

  1. அத்தனை கைகளையும் பாராட்டிக் குலுக்குகிறேன்:)!

    எத்தனையாவது கோலம் ‘நானு’ இட்டதுங்க:)?

    ReplyDelete
  2. வாங்க ராமலக்ஷ்மி. கைகுலுக்கலை அனுப்பி வச்சுடறேன் :)

    'நானு' இட்டது - 1,2,5, மற்றும் கடைசி :) அதில் வண்ணமிட்டது சுபாவும் மீனாவும் :)

    ReplyDelete
  3. அட?? 5 "நானு" போட்டதாய்த் தான் இருக்கும்னு ஊகிச்சேன், சரியா இருக்கே! :D மார்கழி மாசம் வர இன்னும் ஒரு மாசம் இருக்கு. கோலங்கள் போட்டுப் பயிற்சி பண்ணறதை நினைச்சா ஆச்சரியமா இருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. எல்லாக் கோலங்களும் அழகுதான். வரைந்த கைகளுக்கு பாராட்டுகள் கவிநயா.

    ReplyDelete
  5. தினமலர் நடத்தற கோலப்போட்டில கலந்துக்குங்க,பரிசு கன்ஃபர்ம்

    ReplyDelete
  6. //1,2,5,10..//

    :) நன்றி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  7. //அட?? 5 "நானு" போட்டதாய்த் தான் இருக்கும்னு ஊகிச்சேன், சரியா இருக்கே! :D//

    அட, சந்தோஷம் அம்மா! எனக்குப் பிடிச்ச கோலம், நீங்களும் சரியா சொல்லிட்டீங்களே... :)

    //மார்கழி மாசம் வர இன்னும் ஒரு மாசம் இருக்கு. கோலங்கள் போட்டுப் பயிற்சி பண்ணறதை நினைச்சா ஆச்சரியமா இருக்கு. வாழ்த்துகள்.//

    இல்லம்மா... போன வாரம் நடந்த கும்பாபிஷேகத்துக்காக இட்ட கோலங்கள்.

    ரொம்ப நாள் கழிச்சு உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி கீதாம்மா.

    ReplyDelete
  8. //எல்லாக் கோலங்களும் அழகுதான். வரைந்த கைகளுக்கு பாராட்டுகள் கவிநயா.//

    வாங்க வல்லிம்மா. உங்களையும் பார்த்து நாளாச்சு. நலம்தானே?

    பாராட்டுகளை உரியவர்களிடத்தில் சேர்ப்பிச்சுடறேன் :) நன்றி வல்லிம்மா.

    ReplyDelete
  9. //தினமலர் நடத்தற கோலப்போட்டில கலந்துக்குங்க,பரிசு கன்ஃபர்ம்//

    :) ஆஹா... இதுக்கே அப்படிச் சொன்னா எப்படி? பதிவில் கீழே கொடுத்திருக்கிற சுட்டிகளுக்கு போய்ப் பாருங்க, அசந்துடுவீங்க. அவங்கல்லாம் கோலங்களா போட்டுத் தள்ளிக்கிட்டிருக்காங்க... :)

    வருகைக்கு நன்றி செந்தில்குமார்.

    ReplyDelete
  10. kavinaya, your blog is very interesting.

    ReplyDelete
  11. //kavinaya, your blog is very interesting.//

    Glad you find it that way shelwin :) Thank you for visiting.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)