Friday, July 9, 2010

தனிமை



மலரைத் தொலைத்த இதழாக
வானைத் தொலைத்த நிலவாக
வேரைத் தொலைத்த விழுதாக
என்னைத் தொலைத்தது என்மனது

காற்றில் அலையும் இலையாக
கரை சேராத அலையாக
கனவில் சிக்கிய நினைவாக
கனலில் சிக்கிய தென்மனது

மனிதர்கள் இல்லை; மனங்கள் இல்லை;
உயிர்கள் இல்லை; உணர்வும் இல்லை;
எதுவும் இல்லா ஓரிடத்தில்
தனியாய்த் தீவாய் என்மனது

மனதின் மயக்கம் கலைந்திடுமோ?
மூடிய பனிஇனி விலகிடுமோ?
கண்கள் ஒளியைய்க் கண்டிடுமோ?
கண்ணீர்தான் கடல் சேர்ந்திடுமோ?


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/_f1guy68_/1643679095/sizes/m/

9 comments:

  1. wooooooow, suuuper kavithai akka. Each and every line is cristal clear.

    ReplyDelete
  2. http://www.youtube.com/watch?v=Jh-7eGsa4QY


    oru soham oonjalaadukirathE !!!

    subbu rathinam

    ReplyDelete
  3. //காற்றில் அலையும் இலையாக
    கரை சேராத அலையாக
    கனவில் சிக்கிய நினைவாக//

    மிக நன்று கவிநயா.

    ReplyDelete
  4. //wooooooow, suuuper kavithai akka. Each and every line is cristal clear.//

    ரசித்தமைக்கு நன்றி தக்குடு :)

    ReplyDelete
  5. //oru soham oonjalaadukirathE !!!//

    பார்த்துட்டு மறுபடி வரேன் தாத்தா :)

    ReplyDelete
  6. //மிக நன்று கவிநயா.//

    மிக நன்றி ராமலக்ஷ்மி :)

    ReplyDelete
  7. //http://www.youtube.com/watch?v=Jh-7eGsa4QY//

    மிக இனிமை தாத்தா! மிகவும் நன்றி.

    ReplyDelete
  8. //மலரைத் தொலைத்த இதழாக
    வானைத் தொலைத்த நிலவாக
    வேரைத் தொலைத்த விழுதாக
    என்னைத் தொலைத்தது என்மனது//

    அழகான வரிகள்..தொடரட்டும் உங்கள்
    பணி.......

    ReplyDelete
  9. //அழகான வரிகள்..தொடரட்டும் உங்கள்
    பணி.......//

    முதல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றிகள் பல, கோவை குமரன்.

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)